Tuesday, February 26, 2013

ஜில்லா விட்டு ஜில்லா வந்த



வந்தனம்மா வந்தனம்மா எல்லோருக்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோஷமா கேட்கனும் கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும் விசுலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும் விசுலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளுய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளுய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளுய்யா
சொகத்த விக்குற பொண்ணுக்கும் மனசிருக்குது பார்ய்யா
சொகத்த விக்குற பொண்ணுக்கும் மனசிருக்குது பார்ய்யா

அஞ்சு பொண்ணு பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த எங்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அத சொல்லல
அஞ்சு பொண்ணு பெத்தெடுத்த அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த எங்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அத சொல்லல
சொக்கனும் அத சொல்லல 

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்த்ததால ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானைய்யா மாப்பிள்ள
சீக்காளிக்கு மறுப்புள்ள
வலைய போல என்ன கட்டி போனான்ய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானைய்யா மாப்பிள்ள
சீக்காளிக்கு மறுப்புள்ள
வலைய போல என்ன கட்டி போனான்ய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள

அஞ்சாம் நாளு மூட்டுவலியில் மாப்புள தான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒண்ணு போனா ஒண்ணு வந்து வருஷமெல்லாம் தேச்சுட்டான்
கனவ எல்லாம் ஒடச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடச்சிட்டான்
அஞ்சாம் நாளு மூட்டுவலியில் மாப்புள தான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒண்ணு போனா ஒண்ணு வந்து வருஷமெல்லாம் தேச்சுட்டான்
கனவ எல்லாம் ஒடச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடச்சிட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிருல்ல மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி
இள மனச கெடுத்துச்சி
உசுர விட மானம் பெருசு புத்திக்குத் தான் தெரிஞ்சிச்சு
வயிரு எங்கே கேட்டுச்சு
ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் எங்கதைய முடிக்கிறேன்
ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் எங்கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா
என் கதையை நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா
என் கதையை நீயும் கேட்டியா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர் : தஞ்சை செல்வி
வரிகள் : மோகன் ராஜன்

Tuesday, January 10, 2012

நீயில்லை நான் இல்லை

உன் ஜீவன் நானென்று
உன் நெஞ்சம் காதில் சொல்ல
சொல்ல ஓ..
என் ஜீவன் நீயென்று
என் காதல் சொல்ல
சொல்ல

நீ இல்லை நான் இல்லை
நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சும்
கை கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக
நீ பூக்கும் நேரம்
என்னோடு
நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசம் எல்லாம்
நீயாகினாய்
தேகம் நீயா ஜீவனும் நீயா
நீயல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் போர்வையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே
என் கூந்தலில் இனி உன் மீசையோ
அடி உன் சேலையில் இனி என் வாசமோ
தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்
தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலோ
மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என்கண்கள்
உன்னைப்பார்த்து
பூ பூக்குமே

தேவையென்று நான்கேட்க
தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல
பக்தனாக ஏங்குகின்றாய்
அன்னை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாம் அறிந்ததில்லை
உன்னை அன்றி தெய்வமில்லை

உன் மூச்சில்
நானிருக்க
என் மூச்சில்
நீயிருக்க
உயிரது பிரிந்தாலும் நாம் வாழுவோம்
பாடியவர்கள் : ஜானகி ஐயர் , எஸ்.பி பி
படம்: பயம் அறியான்
இசை: p.c. சிவன்
வரிகள்:மோகன் ராஜன்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGPCS0003'&lang=en

Last 25 songs posted in Thenkinnam