Sunday, October 31, 2010

தேன் கிண்ணம் - மூன்றாமாண்டு நிறைவு வாழ்த்துகள்


தேன் கிண்ணம் - மூன்றாமாண்டு நிறைவு பெறுகிற இதன் பயணத்தில் தொடர்ந்து ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பயணித்து தொடர்ந்து பங்கேற்று வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். மிக அதிகமாக பாடல்களைத் தொகுத்த மை பிரண்ட் அனுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என்.ஆர்.சிபி

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா



வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
(வெண்ணிலவே..)
தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்
(வெண்ணிலவே..)

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
அந்த சுகமான நாட்கள் எண்ணி கண்கள் வாங்கினேன்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்
(வெண்ணிலவே..)

கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை
தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும்
இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை இந்த வாழ்க்கை
என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா
(வெண்ணிலவே..)

படம்: கண்ணன் வருவான்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, October 30, 2010

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே



ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
(ஐ லவ் யூ..)

உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
(ஐ லவ் யூ..)

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
(ஐ லவ் யூ..)

படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, சித்ரா

Friday, October 29, 2010

அழகிய லைலா



அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
(அழகிய லைலா..)

ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே

கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்

காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)

உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
தாகங்கள் என்னை குடிப்பது என்ன
அழகினில் என்னை வளைப்பது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன

ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்

வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)

படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்: மனோ

Thursday, October 28, 2010

மரகதவல்லிக்கு மணக்கோலம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin


மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்.
கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம் (மரகதவல்லிக்கு)

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ.
தினந்தோறும் திருநாளோ (மரகதவல்லிக்கு)

மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது (மரகதவல்லிக்கு)

விரும்பிக்கேட்டவர் ஆதி வரிகளும் எழுதி அனுப்பினார்.

படம் : அன்புள்ள அப்பா
இசை : சங்கர் கணேஷ்
வரிகள் : வைரமுத்து
குரல் :K.J.ஜேசுதாஸ்

மயக்கமென்ன இந்த மௌனமென்ன



மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்

மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே

படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

Wednesday, October 27, 2010

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்



ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்
(ஏதோ..)

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
(ஏதோ..)

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்
(ஏதோ..)

படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்


சுஜாதா பாடிய ஏதோ ஒரு பாட்டு இங்கே...

Tuesday, October 26, 2010

மெதுவா மெதுவா தொடலாமா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மெதுவா மெதுவா தொடலாமா -
என்மேனியிலே கை படலாமா.. படலாமா ?
ஓ...ஓஹோ.ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா -
நீவிலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா ?


வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா -
இங்குவேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா..அவசரமா ?
(வெட்கம்)


குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா -
உன்கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா.. சொல்லட்டுமா
(மெதுவா)


இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
நாளை மணமக்கள் நாமில்லையா -
அதுநடக்கும் வரையில் பொறுக்கலையா
(மெதுவா)

படம்: வேட்டைக்காரன்
இசை: KV மகாதேவன்

Monday, October 25, 2010

உனக்கென இருப்பேன்

உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க
(உனக்கென..)

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்
கண்மணி காதலில் நெஞ்சம்தான் தாங்கிடுமா
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்று தான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கையில்லை
வரும் காலம் காயம் ஆற்றும் நிலவொளியே மற்றும் அன்றி
இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர் வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க விறகாக தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னில் கலப்பேன்
விழி மூடும் போது உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானே இல்லை
நீதானே நானே ஆனாய்
நிழலாகத்தான் துடிப்பேன்
(உனக்கென..)

படம்: காதல்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்: ஹரிசரன்

Sunday, October 24, 2010

மாணிக்க தேரில் மரகத கலசம்



மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
(மாணிக்க தேரில்..)
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
(மாணிக்க தேரில்..)

மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
(மாணிக்க தேரில்..)

தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
(மாணிக்க தேரில்..)
ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா & TM.சௌந்தர ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

வான் நிலா தரும் ஒளி





வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஒஹோ ஹோ ஒ..ஒ

சிலு சிலுவென விழும் புது பனித்துளியோ
மழை எழுதும் முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொலுசொரு ஜல்
நீலம் தோய்த்த அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ
ஒரு தரம் சிரிக்கையில் தெரிக்கையில்
புது புது கவிதைகள் புலப்படும் புறப்படும்

ரதியே ரதம் போல் நடந்தே
நீ வரும் வழி எங்கும்
குறிஞ்சி மலர் போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் என்றும்
நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு
நிலத்தில் வாழும் மீனோ
என வியப்பது உண்டு

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

தினம் தினம் மனதினில் உந்தன் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
கா-தல் தே-வி என் நெஞ்சம்
உன் கோயில் தான்
காதல் என்றும் அந்த கோயில் தீபம்
என்று எண்ணங்கள் ஏற்காதோ
இடி மின்னல் மழையிலும்
அடிக்கின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது
என்னை தான் கனம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உனைதான் வருத்தும் அவள் யார்
என இயற்கையும் கேட்கும்
பெண்ணை அழகாய் படைத்தல்
அந்த இயற்கையின் வேலை
அறிந்தும் எனையே கேட்டால்
அட இது என்ன லீலை?

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ?
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ?

உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
நீ ஒரே ஒரு தரம் பிறந்தவள்
அவன் படைப்பினில் மிக சிறந்தவள் ஒஹோ ஹோ ஒ..ஒ

படம் : காதல் வைரஸ் (2002)
இசை : ரஹ்மான்
வரிகள் : வாலி
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், கார்த்திக் ராஜா

Saturday, October 23, 2010

இயற்கை என்னும் இளைய கன்னி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ…

படம்: சாந்தி நிலையம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

Friday, October 22, 2010

பூவும் பிடிக்குது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது
பூமி பிடிக்குது வானம் பிடிக்குது
குப்பையும் பிடிக்குது எல்லாம் அவளாலே
நதியை பிடிக்குது நிலவை பிடிக்குது
நீரும் பிடிக்குது நெருப்பும் பிடிக்குது
பைத்தியம் பிடிக்குது எல்லாம் அவளாலே

அவளோட மூச்சு காத்து அளப்பார பண்னிப்போச்சு
அம்புட்டும் அவளை சுத்துதே என்னோட மூச்சு
பயப்புள்ள பாக்கையில பயம் வந்து கவ்வும் உள்ளே
உடனே ஏன் கூவுதே
படுத்ததும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முளிக்கிறானே
வெள்ளன எந்திருச்சி ஓடும் பய
சுள்ளுனு சூரியன பாக்குறேனே
(பூவும்..)

அவன் பார்த்ததுமே நான் புத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிளே என் வயதறிந்தேன்
(அவன்..)

படம்: காதல்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கார்த்திக், ஷாலினி

Thursday, October 21, 2010

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா



நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
(நிஜமா..)

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நானால் நிஜமா

ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுது
பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே
(நிஜமா..)

நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே
வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்றே அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே
வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே
(நிஜமா..)

கோடை வாடை இளவேனில் காலம்
கார்காலம் நன்குமே
காதல் காலம் எந்த காலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு
திசைகள் நான்கு யாவுமே
காதல் எந்த திசையில் செல்லும் என்று
கண் சொல்ல கூடுமோ
கருவரை எனக்கும் இருந்தால் முளையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
உயிர் அறை ஒன்றை உருவாக்கி என்
உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்
(நிஜமா..)

படம்: போஸ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கேகே, ஷ்ரேயா கோஷல்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, October 20, 2010

ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு



ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்க்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ

பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம் என்ன இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்மென இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
(ஹேய் ஹேய்..)

செல்போன்களை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வச்சு கோப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்

படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: வசுந்திரா தாஸ்
வரிகள்: பா. விஜய்

Tuesday, October 19, 2010

கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ



கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாய்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
ஐப்ரோவ்வை ஏல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே
(கல்லூரி..)

ஏப்ரல் மே எப்போதும்
வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள்
தெப்பட்தில் தெப்பத்தில்
டோல்பீன்கள் துள்ளாத
உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும்
வெள்ளத்தில் வெள்ளதில்
பொல்லாதல் ஆதவா
நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா
இச்சென்று சத்தங்கள் உண்டாகும் கூட கூட
சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு
புய்லில் போராடும்
(கல்லூரி..)

பெண்ணோட புல்ஸ் என்ன
பார்த்தேனே பார்த்தேனே
ஸ்டெடஸ்கோப் வைக்காமல்
சொல்வேனே சொல்வேனே
செவ்வாழை மேனிக்குள்
என்னையா என்னையா
ஸ்கேனிங்தான் செய்யாமல்
சொல்லையா சொல்லையா
நான் பார்த்தால் பாவமா
நீ நாள் பார்த்து பார்க்கவா
அர்ஜெண்டா ஆப்பரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு
அன்பே உன் ஆசை தான்
ஆப்பரேஷன் கேஸ் இல்ல
எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணால நம் காதல் இல்ல
த த த தள்ளாதே
இளமை ஏற்காதே
(கல்லூரி..)

படம்: பெண்ணின் மனதை தட்டு
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், தேவன்

Monday, October 18, 2010

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு
அமுதே என் கண்ணே பசும் பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு

[ஆலோலம் பாடி]

மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்

[ஆலோலம் பாடி]

சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு

உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும்

நீ யாரோ அன்பே அமுதே!

[ஆலோலம் பாடி]

Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடியவர்: இளையராஜா
இசை : இளையராஜா
படம்: ஆவாரம்பூ

சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்
நீ எங்கே இருந்து எங்கே இருந்து இங்கே விழுந்தாய்
இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு நம் பூமிக்கு வந்த நாள்
(சில் சில்..)

சல சல சல சல மழை வந்து உன்னை
தொட தொட தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுட சுட சுட வழியுது வழியுது
ப ப ப இனி மட்டும் பயம் காட்டும்
தை தை தை என தூறல் நதி போதும்

ந நன் ந நநநந
ந நன் ந நநநந
(சில் சில்..)

யார் அந்த வானிலே அ ஆ
பட்டாசை வெச்சது அ ஆ
மழை கொட்டும் போதிலே அ ஆ
தும்மல்கள் வெடிக்குது
வெளியே ஒரு நீர் மழை ஜோராக பெய்யுது
உள்ளே ஓர் நிஜ மழை சந்தோஷம் செய்யுது
மறைவென உண்மை சொல்லு
எனக்காகத்தான் நீ வந்தாயா
வா நீ வா சில வம்புகள் செய்வோம் வா
வா வா வா பல வானவில் கொண்டு வா

ஓஹோ மின்னல்கள் புடிச்சுதான்
கடலென நீ இறங்கி வா
மங்காத்தா ஆடலாம்
ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்
பகலெல்லாம் தூங்கலாம்
அழகான பெண்ணுக்குள் ஆனந்தம் கொடுக்கலாம்
பனிரெண்டு மணிக்கு மேலே
யாருக்கும்தான் பயமே இல்லை
சோ சோ சோ என்னை கொட்டும் நீர் ஓட்டம்
ஓ ஓஹோ இது ராத்திரி கூத்தாட்டம்
(சில் சில்..)

படம்: அறிந்தும் அறியாமலும்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சின்மயி, சத்யன்
வரிகள்: பா. விஜய்

Sunday, October 17, 2010

கண்ணும் கண்ணும் நோக்கியா



கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புச்சீனோ காஃபியா சோஃபியா
(கண்ணும்..)
டெர்மோக்கோல் சிற்பம் நீ
உன்னை ஒட்டிக்கொண்டுள்ளா
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி

தண்ணீரின் சிற்பம் நீ
கோடை கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
ஆ ஐவா ஐவா ஐவா அழகே வா
ஆ ஐவா ஐவா ஐவா அன்பே வா வா
(கண்ணும்..)

காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன்
காதலின் புகை படம் இவனே
ஹாலிவூட் திரைப்படம் இவனே
அமேரிக்கா வரைப்படம் இவனே ரசித்தேனே

இனி காதலர் டாப் டென் வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதல் இடமே
இனி காதலர் டாப் டென் வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதல் இடமே
ஒஹோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ
கூல் ஹனி கூல் ஹனி கூல் ஹனி
இதழில் குடிப்பானே கூல் ஹனி
(கண்ணும்..)

சியானிட் சியானிட் விழியால்
மயக்கும் புயட்டிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி
ஆப்பிள் லாப்டாப் பென்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேய கொஞ்சி
நான் ரசிப்பானே

என்னை ஆக்டபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஏட்டோம் பாம்ப் உயிருக்குள் உருட்டி விட்டாய்
என்னை ஆக்டபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஏட்டோம் பாம்ப் உயிருக்குள் உருட்டி விட்டாய்

கூல் ஹனி கூல் ஹனி கூல் ஹனி
இதழில் குடிப்பானே கூல் ஹனி
ஒஹோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ
(கண்ணும்..)

படம்: அந்நியன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: வசுந்திரா தாஸ், லெஸ்லி லெவிஸ், அண்ட்ரியா
வரிகள்: கபிலன்

Saturday, October 16, 2010

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பதிவர் அவந்தியின் பிறந்தநாளுக்காக இந்த இளமைதுள்ளலான பாட்டு ஒலிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.




பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)

படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்றுத் தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எதன் வாழ்வில் வீசுவாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுபோல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்

Friday, October 15, 2010

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்



முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று

உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் ஒன்றை என்னை மெல்ல தொட
(முதல்..)

தீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை
ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
(முதல்..)

மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும் உந்தன் நினவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான்
வைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும் அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று

முதலாய் முதல் முதலாய்
முதல் முதல் முதலாய்
(முதல்..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:

Thursday, October 14, 2010

தோகை விரித்தொரு ஆண் மயில்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
இருப்பக்கம் எறிகின்ற மெழுகாய்
ஏன் என்னை நீ மாற்றி சென்றாய்
மழை சிந்தும் உன்னாலே வீசும்
மண் வாசம் போல் மூச்சில் நின்றாய்
வழிகின்ற சுகம் காதல் தான்
(தோகை..)

அழகிய முகம் பளிச்சென நிறம்
அது என்னை கவந்ர்ந்தது மிக கொஞ்சமே
உலகத்தில் உள்ள அத்தனை பொன்னும்
உன்னுடைய குணம் ஆகி என்னை கொல்லுதே

பார்க்கும் யாருக்கும் பிடிக்கும் உன்னை
உன்னை போல் ஒரு ஜென்மம் அபூர்வம்
உன்னை ஏந்திடும் சிம்மாசனமாய் ஆனதே இதயம்
மெத்தாகி போனேன் மெத்தாகி போனேன்
(தோகை..)

எங்கே வந்தேன் எதற்க்கு உனை கண்டேன்
நமக்குள்ளே முடிச்சுகள் முடிந்தவை தான்
சுற்றம் தரும் சூழ்நிலை தரும்
இனி எந்த தடைகளும் தவிர்ந்தவை தான்

நூறு பெண்களை நீயும் ஏற்றால்
நூரில் ஒன்றென நானும் வாழ்வேனே
இந்த பிறவியில் உன்னை சேறும்
நாள் வரை வாழ்வேன்
இல்லையேல் சாவேன் இல்லையேல் சாவேன்
(தோகை..)

படம்: கலாபக் காதலன்
இசை: நிரு
பாடியவர்: சின்மயி
வரிகள்: தாமரை

Wednesday, October 13, 2010

கூக்கூவென ஒரு குயில் தேடிட


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கூக்கூவென ஒரு குயில் தேடிட
வா வா என மறு குயில் கூவிட
காற்றே இரு குயில்களின் மாளிகையோ
இன்றே மாறிவிடுமா

ஆதாமுடன் ஏவாள் சேர்ந்ததும்
ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
மேகம் மழை துளிகளால் தூவியதே
விண்ணின் வாழ்த்து மடலா
பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா
(கூக்கூ..)

கல்யாணம் மாசியிலே
அது நடக்காது
பெற்றோரின் ஆசியிலே
அதை விட மாட்டேன்
கண்டேனே ஒரு கனவு
அது என்னது
காஷ்மீரில் தேன் நிலவு
நினைப்பு தான்
தூண்டிலிலே
மாட்டிக்கொள்ளும்
ஒரு புழுவாய் நீ இருப்பாய்
மூட்டைப்பூச்சி போல் அறித்துடுவா
ஐயோ வயிறிங்கு எறிகிறதே
(கூக்கூ..)

சிறகில்லா தேவதை நீ
தேவதையா ராட்சசி
தரை வந்த தாமரை நீ
தாமரையா அரளிப்பூ
உன் கைகள் பிடித்திடவே
வேஷக்காரி வேஷக்காரி
என் வாழ்வில் காத்திருந்தேன்
அண்டப்புழுகி
கூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியே
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ ரத்தக்குடி காட்டேறிதான் நீ
(கூக்கூ..)

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, கார்த்திக், மகாலட்சுமி ஐயர்
வரிகள்: தாமரை

Tuesday, October 12, 2010

உருகுதே தாகத்தில் ரத்தம் எல்லாம் பற்றிக் கொண்டு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உருகுதே தாகத்தில் ரத்தம் எல்லாம் பற்றிக் கொண்டு
எறியுதே நெஞ்சுக்குள் நீ தான் பேபி
சிதறுதே மோகத்தின் பக்கம் எல்லாம் சிக்கிக் கொண்டேன்
தெரியுதே ஆனந்தம் சொர்க்கத்தில் விழுந்தேன்
முத்தத்தில் இன்பங்கள் சட்டென்று ஓய வேண்டும்
மொத்தத்தில் நீ வேண்டுமே

காமத்தின் கண்ணெல்லாம் இன்றுன்னை சுடுகிறதா
காயத்தின் வலி எல்லாம் நாளெல்லாம் இனிக்கிறதா
இரவெல்லாம் கெட்டவனே இம்சைக்கு நல்லவனே
தோளோடு தோள் சாய்ந்து எனை இன்று கொன்றவனே

தொட்டால் கெட்டா போகும்
என் முத்தம் பித்தம் போக்கும்
தள்ளி தள்ளி நின்றால்
உன் வேதனை எப்போ தீரும்
ஆறடி வன்முறையாலா
நீ அழகிய இம்சைக்காரா
புன்னகை விற்று வாங்கும்
நீ என் மன கொள்ளைக்காரா

hey whats that thing that you do to me
tell me ..i cannot wait for that ecstacy
please hurry
how many times can you give it to me
tell me ...i want to feel what you feel for me
dont put your hands on me
then show me how you hold me
மொத்தத்தில் நீ வேண்டுமே

காமத்தின் கண்ணெல்லாம் இன்றென்னை சுடுகின்றதா
காயத்தின் வலி எல்லாம் நாளெல்லாம் இனிக்கிறதா
இரவெல்லாம் கெட்டவனே இம்சைக்கு நல்லவனே
தோளோடு தோள் சாய்ந்து என்னை இன்று கொன்றவனே

முத்தத்தில் இன்பங்கள் சட்டென்ற ஓய வேண்டும்
மொத்தத்தில் நீ வேண்டுமே
(உருகுதே..)

பெண்ணெண்ணும் சொர்க்கத்தில் விழுந்தேன்
படியாறி கொள்ளாத பாவங்கள் செய்யாத
வெட்கத்தை தள்ளாட தேவைகள் சொல்லடா
உயிரோடு உன்ன வா உச்சத்தில் கொண்ஜ்ச வா
உன்னை நான் அல்லவா மஞ்சத்தில் தள்ளவா

படம்: கலாபக் காதலன்
இசை: நிரு
பாடியவர்கள்: தேவன், அண்ட்ரியா

Monday, October 11, 2010

யாவரும் நலம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கோடையின் வெயிலில் கார்த்திகை குளிரில்
ஓடிடும் பகலில் ஓய்ந்திடும் இரவில்
நாட்டிலே யாவரும் நலம்
வீட்டிலும் யாவரும் நலம்

மஞ்சள் வெயில் வானிலே
மழையுடன் வானவில்
சிறிது இன்பம் துன்பம்
கலக்கணும் வாழ்விலே..ஓ..ஓ
(கோடையின்..)

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர், எசான், லோய்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
வரிகள்: தாமரை

Sunday, October 10, 2010

மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே



மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்

நெஞ்சின் ராட்டிணம் எனை சுற்றி தான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியினில் நான் பார்க்க
(மேகம்..)

பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தில் காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே

முதல் முதல் வாழ்வில் தோன்றும்
வண்ண குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலை கண்டால் தாவிடும் மீனா

போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)

கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக் கொண்டு செல்வதை கனவு கண்டு விழிக்கிறேன்
கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன்
சேர்ந்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்

வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மறு முறை பார்க்கும் வரையில்
காக்கும் நேரம் கசப்பது ஏனோ

பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்து தானே தீரும்
அந்த நேரம் வந்ததாக
நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், ஷ்வேதா
வரிகள்: தாமரை

Saturday, October 9, 2010

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்



கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை
மனமகிழ்ந்தாள்
கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
இவன் அவளை வென்றானோ
இணை ஆக்கி கொண்டானோ

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ

அடடா அடடா கண் படும் ஜோடித்தானே
பிரிக்கும் வலிமை கொண்டதந்த ஆடி தானே

Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek

இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ

கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லாம் வாரி வந்தானோ

மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோமடா
இந்தக் காட்சி கண் பார்க்க தாங்காதடா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணித்தலும் என்ன


Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek

துப்பாக்கியை துடைச்சு வச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்

உள்ளங்கைகள் அறிக்கும் அறிக்கும்
விட்டா தோளை உறிக்கும் உறிக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எறிக்கும்

பட்சி ஒன்னு சொல்லி போச்சு கச்சேரிக்கே
கட்டுப் போட போலேட புத்தூருக்கே
(கண்ணாமூச்சி..)

படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷஙக்ர் ராஜா
பாடியவர்கள்: Dr. நாராயணன், பாலக்காட்டு ஸ்ரீராம், பிரசன்னா, சைந்தவி
வரிகள்: தாமரை

Friday, October 8, 2010

க்ளியோபத்ரா எந்தன் கண்ணில் ஆல்ட்ரா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஹேஹே காதல் ஜன்னல்கள் மூடாமல்
நேற்று பூவே சொன்னாயே ஐ லவ் யூ
காம்பில் பூக்கின்ற பூவெல்லாம்
பாவம் கண்ணே சொல்வாயா ஹவ் ஆர் யூ
ஸ்வாசமே வா சொர்கமே வா
சுற்றலாம் வா தேசம் தாண்டி வா
காதலே ஃபேஷன் வாலிப சீசன்
மாறும் முன்னாலே வாசம் கொண்டு வா

க்ளியோபத்ரா எந்தன் கண்ணில் ஆல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்ற என்னை காதலி
(க்ளியோபத்ரா..)

கண்கள் ரெண்டும் சேர்ந்து
காதல் சொன்ன போது
வார்த்தைக்காக தடுமாறினாய்
காற்றை போலே வாழ்ந்தேன்
கட்டிப்போட்ட பின்னே
எந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய்
வானிலே மேகம் பாடுதே தாகம்
காதலன் இங்கே காணவில்லையா
ஜாலியாய் நெஞ்சில் வீசினாய் பெண்ணே
நாளை நாம் வாழ ஜீவன் கொண்டு வா
(க்ளியோபத்ரா..)

கொஞ்சம் இங்கு பேசி
கொள்ளை செய்யும் அன்பே
முத்தம் வைக்க முகம் காட்டவா
புது சாரல் போல வீசும்
ஜாக்கெட் போட்ட பூவே
நேரில் வந்தால் முகம் வேர்க்குமா
பூவிலே வாசம் தோன்றிடும் நேசம்
வாலிப தேசம் பார்த்தும் ஓடிவா
காதலி பேசும் வார்த்தை சந்தோஷம்
ஆதலால் பூவே வா வா பேச வா
(க்ளியோபத்ரா..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சௌம்யா

Thursday, October 7, 2010

பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை
(பூக்கொடியின்..)

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
(பூக்கொடியின்..)

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குகொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை
(பூக்கொடியின்..)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சந்தியா
வரிகள்: வைரமுத்து

Wednesday, October 6, 2010

கண்கள் என் கண்களோ



கண்கள் என் கண்களோ
காணாத பெண் நீயடி
நெஞ்சை நீ ஏன் நோகடித்தாய்
இன்று நான் காண்பது
என்றென்றுமாய் ஆகுமா
என்னை நீ தேர்ந்தெடுப்பாய்

ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time

இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
(கண்கள்..)

இவள் பீஸ் ஆக தோற்கின்ற
செர்ரி பழம்
ஒரு ஹாட் ட்ரிங்க்ஸில்
ஐஸ் கியூப்பாய் கரைந்தேனடி
இவள் ஜீன்ஸ் போட்டு
பறக்கின்ற பட்டாம்பூச்சி
என் டிஷர்ட்டில் மகரந்த
மழை தானடி

Trust me baby
I can do no wrong
Come on now baby
Let me sing a song

Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door

செல்போன் நீ பேசினால்
செல் எல்லாம் ஓ போடுதே
ரிங் டோன் உன் புன்னகை தான்
சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்

இவள் கண் வீசி போகின்ற
கல்லூரிதான்
நான் ஐ லவ் யூ
விண்ணப்பம் தருவேனடி

இவன் நம் ஊரில் வழிகின்ற
ஒரு நயக்ரா
ஒரு ஷவர் போல
என் மீது பொழிவாயடி

I can do no wrong
Come on now baby
Let me sing a song

Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door

சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்

பைக்கில் நாம் போகலாம்
ஃபைனான்ஸை நான் ஏற்கிறேன்
பைபில் மேல் சத்தியமாய்

ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time

இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்

படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: ஜுபின் கார்க்
வரிகள்: கபிலன்

Tuesday, October 5, 2010

எதற்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக


Get Your Own Hindi Songs Player at Music Plugin

எதற்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காக
அடி காதலியே ஓயா
இடி தாங்கலியே ஓயா
எனை வாட்டுறியே ஓயா
மோனாலிசா கோடி மின்னல் போல் ஓயா
எனை தாக்குறியே ஓயா
பழி வாங்குறியே ஓயா
மோனலிசா..
(எதற்காக..)

க்ராஃபிகில் சுத்தம் செய்ய சொல்வேன் உனக்காக
பூப்போன்ற பார்வையாலே ஐ லவ் யூ
தொடு வானத்தில் ஓயா
குடி போவோமே ஓயா
அடி பூவே சொல் ஓயா
மோனலிசா
காதலில் போராச கத்திகள் இல்லாமல்
நான் மட்டும் வந்தேன் அன்பே
ஆறடி ரோஜாவே கானகம் பூவாலே
கண்க்களாய் வருவாய் என்றே
(எதற்காக..)

விண்மீனை பிச்சு வைத்து தருவேன் உனக்காக
சொந்தமாய் வானம் செய்தேன் உனக்காக
டெலிபோன் செய்து ஓயா
கிளி பேசாமல் ஓயா
மணி ஆறாது ஓயா
மோனலிசா..
ஆகாயம் நான் போக ஹால் டிக்கேட் நீதானே
கை சேர வாக்காரவே
ஜில்லென்ற பூவோடு கல்யாண நாள் பார்க்க
பூந்தென்றல் வருகின்றதே
(எதற்காக..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: தேவன், அனுராதா ஸ்ரீராம்

Monday, October 4, 2010

ஓ காதலே உனக்கோர் கடிதம்



ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்

ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்
ஓ தேடடி என்னை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்
இனி ஏன் எல்லாம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ

ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
என்னை நீ இயக்க இருந்தாய் பின்னால்
வானம் போனில் வாழ்க்கை இரும்பும்
அதில் ஓர் நிலவா நீ ஏன் இல்லை
(ஓ காதலே..)

காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே

நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
விழியில் நதியா இதுதான் விதியா
என்னைதான் படைத்த இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை

படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: க்ளிண்டன், மனோ

Sunday, October 3, 2010

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற் காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற் காதல்
தூண்டில் மீனா தூயவனா
காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா..)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா..)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உறைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா..)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஆஷா போஷ்லே
வரிகள்: வைரமுத்து

Saturday, October 2, 2010

நான் எப்போது பென்ணானேன்



என் இதயம் கண்களில் வந்து
இமையாய் துடித்தது ஏனோ
நான் எப்போது

நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்

முதல் புன்னகை பூத்ததே அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றால் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை காய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

படம்: சக்கரக்கட்டி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரீனா பரத்வாஜ்

Friday, October 1, 2010

பானா காத்தாடி - குப்பத்து ராஜாக்கள்



ஹேய் குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறியேதும்
தப்பாகி போகாதடா
ஹேய் யேரென்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஹேய் கூவத்துல வெளைஞ்ச கட்ட ஓஹேஹோ
மோதாதே எங்கக்கிட்ட ஓஹே ஹோ
எங்களோட கோட்டை நாங்க வாழும் பேட்டை
தட்டி கேட்க யாருமில்ல
கேட்டுப்புட்டா ரொம்பத் தொல்ல
(குப்பத்து..)

யே ராவெல்லாம் ஊர ரவுண்டுகட்டுவோம்
மவுண்ட் ரோடு மத்தியில கட்டுப்போடுவோம்
சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசுப்பண்ணுவோம்
தியேட்டருக்குள் ஏகப்பட்ட சேட்டைப் பண்ணுவோம்
அழுக்காக கெடந்தப்போதிலும்
அழகான வாழ்க்கை வாழுவோம்
எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்
தட்டி கேட்க யாருமில்லடா
(குப்பத்து..)

ஹேய் வாட்டரோட பிரியாணி டேய்லி கெடைக்கும்
மீட்டருக்கு மட்டும்தானே மேட்டர் நடக்கும்
வாலருந்த பட்டம் போல சுத்தி வருவோம்
நம்பிப்புட்டா உசுரக்கூட நாங்கத் தருவோம்
ஊரே சுத்தி வந்த போதிலே
பேர நாங்க பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்கப்படை ஜெயிக்கப்பொறந்தது
எங்கக்கூட மோதறதுக்கு வா
(குப்பத்து..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன்
வரிகள்: சினேகன்

Last 25 songs posted in Thenkinnam