Wednesday, April 30, 2008

399. தொடு தொடு எனவே



தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

விரும்பி கேட்டவர்: மீரா

Tuesday, April 29, 2008

398. பூ பூத்தது தோட்டம் யார் போட்டது




பூ பூத்தது தோட்டம் யார் போட்டது
பூங்காற்றிலே வாசம் யார் சேர்த்தது

தோன்றும் மறையும்
பகலும் இரவும்
மாறும் விந்தை அது யார் செய்வது

(பூ பூத்தது)


இதழ் நுனி துளிப் பனி சுமந்தாலும்
அதை ஒரு கதிரவன் கொண்டு செல்வான்
தன்வசம் தன் மனம் இருந்தாலும்
எவர்வசம் அது செல்லும் யார் அறிவார்

இயற்கை நடத்தும் வேள்வி இது
விடைகள் தெரியாக் கேள்வி இது
ஓர் ஆயிரம் அதிசயம் உள்ளது
அன்புதான் இழைகளாய் அனைத்திலும் ஓடுது

(பூ பூத்தது)

என் சிறு பருவத்தின் தனிமையிலே
வளர்ந்ததும் தனிமையின் கொடுமையிலே
உறவுதான் வறுமையை உணர்ந்தாலும்
அது தரும் காயங்கள் எனக்கில்லையே

இருளில் இங்கோர் நிலவு வர
இதமாய் நெஞ்சை வருடி வர
இதயம் நிரம்புதே
இன்பமே ததும்புதே
உறவில்லா உறவிது
உலகெல்லாம் சொல்லலாம்

(பூ பூத்தது)

படம் : மும்பை எக்ஸ்பிரஸ்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சோனு நிகம், ஷ்ரேயா கோஷல்

Monday, April 28, 2008

397. வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்



வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
(வந்தேன் வந்தேன்..)

பேசாதே பேசாதே
கொஞ்சம் அழகாக ஏந்தான் பிறந்தேனோ
போதும் நான் பட்ட பாடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம்
நடுவில் நாந்தானே ஆடு
அட என் ஜீவன் போனாலும் உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா
(வந்தேன்..)

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேண்டி ஆடேண்டி முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி
நான் பச்ச கிளி நீ வெட்டுக் கிளி போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன் பேயை ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை
(வ்ந்தேன்..)

எனக்கு எனக்கு நீ சரிசம கம
தத்திழாங்கு தோம் தததாரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா?
வாயேண்டி ஜதி போடேண்டி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே
வந்தேன் ரெடியா
வாயாடி எனக்கு சமமாடி

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

படம்: பஞ்சதந்திரம்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, நித்யாஸ்ரீ, கமல்ஹாசன்

396. ஆட்டமா தேரோட்டமா



ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
பூ வாசம் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட
மாராப்பு மெல்ல தொட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)

யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)

ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்மா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

படம்: கேப்டன் பிரபாகரன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
வரிகள்: பிறைசூடன்

395. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து



ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்
(ஒரு முத்தாரத்தில்..)

அந்த மாலை இந்தப் பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன
கண்ணரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன
(ஒரு முத்தாரத்தில்..)

நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
(நீல வானம்..)
பாடல் ஒன்று.. ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன
காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை
(ஒரு முத்தாரத்தில்..)

படம்: சொர்க்கம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: அபி & நட்ராஜ் அம்மா

Saturday, April 26, 2008

394. இடம் பொருள் பார்த்து



இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது
(இடம் பொருள்..)

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே
(இடம் பொருள்..)

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்
(இடம் பொருள்..)

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்

விரும்பி கேட்டவர்: தங்கமணி சிபி

393. ஆயிரம் ஜன்னல் வீடு


TamilBeat.Com - Aa...

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலத்தான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்
(ஆயிரம்..)

வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல யாரு
சித்தப்பாவின் மீசையைப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் குழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டிதானே எறிவாங்க
திருட்டுபயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின் அவுப்பாங்க

காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்
வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பையே தாண்டலாம்
(ஆயிரம்..)

சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஓடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஐயோ வைக்கிறான் வைக்கிறான் ஐசத்தூக்கி வைக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்
வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம்
(ஆயிரம்..)

கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டா போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டா

பாசமான புலிங்க கூட பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

படம்: வேல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ரேம்ஜி, ராகுல், வடிவேலு
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

392. மயிலிறகே மயிலிறகே



மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை!
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை!
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்!
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்!
ஓர் இலக்கியம் நம் காதல்!
வான் உள்ள வரை வாழும் பாடல்!
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே!
(மயிலிறகாய்..)

தமிழா! தமிழா! தமிழா!
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?
அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!
கவி ஆக்கிட நீ வருவாய்!
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா?
பால் விளக்கங்கள்! நீ கூறு!
ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!
(மயிலிறகே)

வருடுகிறாய்... மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!
வருடுகிறாய்....மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!

படம்: அ! ஆ!
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், மதுஸ்ரீ

விரும்பி கேட்டவர்: ஜஸ்மீன்

391. மலரே மௌனமா?



மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே)

படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

390. புதிய நிலாவே ஒரு இனிய கனாவே



புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
மாலைகள் நெஞ்சில் தொட்டு தாலாட்ட
மாணிக்க வைரம் உன்னை சீராட்ட
நாணையம் அள்ளி தந்து நீ கேட்க
நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட
ஓராயிரம் மாயங்களும்
நான் பார்த்தேன் என் கண்ணிலே
(புதிய நிலாவே..)

நான் நினைத்து வந்த தேன் கனவு
அது வாழ்வில் ரொம்ப தூரம்
ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம்
என்று நேரில் சொல்லும் நேரம்
(நான் நினைத்து..)
பொத்தி வச்ச நெஞ்சை விட்டுத்தான்
நல்ல முத்து ஒன்னு வெளியாச்சு
புத்தி கெட்ட சின்ன பிள்ளைக்கு
ஒரு உண்மை இன்று தெளிவாச்சு
வானில் வரும் வர்ணங்களே
நிறம் மாறும் எண்ணங்களே
சிவந்து வரும்
(புதிய நிலாவே..)

நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று
வாழ்வில் கண்ட பாடம்
பால் நிறத்தினிலே கல் இருக்குதென்று
காலம் சொன்ன பாடம்
(நாம் நினைப்பொதொன்று..)
புண்ணியங்கள் செய்திருக்கணும்
இந்த கண்மணியை மணந்திடவே
மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே
பல மன்னவரும் மயங்கிடவே
பூவே தினம் பூச்சூடியே
நூறாண்டு நீ வாழ்கவே
(புதிய நிலாவே..)

படம்: பேண்ட் மாஸ்டர்
இசை:
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

389. கரு கரு விழிகளால்


Tamilmp3world.Com ...

கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னன் வந்து சாய்க்க..

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
மண்..
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீ நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல் தரும் தென்றல் நீதானா புதையல் நீதானா

நீ..
ஒரு மல்லிச் சரமே
நீ..
இலை சிந்தும் மரமே
என்..
புது வெள்ளிக் குடமே
உன்னைத் தேடும் கண்கள்
ஏய்..
நீ தங்கச்சிலையா
வெண்..
நுரை பொங்கும் மழையா
அன்பால்
மனம் பின்னும் வலையா
உன்னைத் தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையில் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே என்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே ஒச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கரு கரு..)
(தாமரை..)
(தாமரை..)
ஒரு மல்லிச்சரமே...

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், க்ரீஷ், நரேஷ் ஐயர்

Friday, April 25, 2008

388. வானவில்லே வானவில்லே



வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
(வானவில்லே..)

எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
(வானவில்லே..)

எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்தக் கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய்ப் பறவை சேகரித்து
ஊட்டுகின்ற உறவு
அதில் தானே வாழ்கிறது
உயிர்களின் அழகு!
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
(வானவில்லே..)

படம்: ரமணா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

387. கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு


கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
உனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம்போல மணக்கட்டும் மாலை
(கௌரிக்கு..)

சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன
வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன
வண்ண பூவை முந்தானை மூட மூட
கொண்டு வந்த பட்டாட ஆட ஆட
காலமெல்லாம் வாழப்போறா
நம்மை எங்கே தேடப்போறா
என்றும் உள்ள தென்றல் போல
எங்க வீட்டு பெண்ணே வாழ்க
என்றும் உள்ள தென்றல் போல
எங்க வீட்டு பெண்ணே வாழ்க
(கௌரிக்கு..)

எங்கள் கல்யாண பெண்ணுக்கென்ன
தெண்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி
(கௌரிக்கு...)

படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: அர்சாத்
விரைவில் திருமணம் புரியப்போகும் தன் தோழி ஜெயந்திக்காக இந்தப் பாடலை விரும்பி கேட்கிறார் அர்சாத்.

386. முகிலே முகிலே நீ தூது போ


முகிலே முகிலே நீ தூது போ
வெகு தொலைவில் தொலைவில் என் செல்ல காதலி
காற்றே காற்றே நீ தூது போ
என் உயிரை தொலைவில் வா எந்தன் மூச்சிலை

காதலால் எங்கு காத்திருப்பாய்?
பாதையில் என் முகம் தேடுவாய்
என்னை வரைந்து உன்னில் சுமந்து
முகிலே கொண்டு போ...
(முகிலே..)

செம்பருத்தி பூ மயங்கும்
உதடுகள் கண்டு
தும்பச்செடி இதழ் விரியும்
வண்ணத்துப்பூச்சியாய் இமைகள் கண்டு
மேகம் எல்லாம் பூமிக்கு தாவும்
உன் கூந்தலில் பார்த்து
வண்டு வரும்
மூங்கில் பாடும் ராகம் என்று
உன் பேச்சை கேட்டு
உன் பேச்சை கேட்டு
உன் பேச்சை கேட்டு
ஆ...

என்ன தவம் செய்தேனோ
உன் முகம் காண
கண் இரண்டும் சண்டையிடும்
உன் பிம்பமே நான் பார்த்திருக்க
உன் கனவில்
எனக்கு மட்டும் போர்த்தி விட்டு
தூங்க வைத்தாய் ஆ..
நிலவின் ஜரிகை இழுத்து நெய்த
உன் நேசம் போதும்
உன் நேசம் போதும்
உன் நேசம் போதும்
(முகிலே..)

படம்: அரண்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

385. நானாக நானில்லை தாயே



நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை
(நானாக)

படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

384. நேற்று இல்லாத மாற்றம் என்னது



நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..
(நேற்று..)

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
(நேற்று..)

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?
(நேற்று..)

படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து

Thursday, April 24, 2008

383. சித்திரையில் என்ன வரும்?



அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில் சிந்துவதால் வெக்கம் வரும்?
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்டவரும்
கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்
(சித்திரையில்..)

பாவிப் பயலால இப்ப நானும் படும் பாடுயென்ன
ஆவி பொகபோல தொட்டிடாம இவ போவதென்ன
கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடுற
கன்னத்துக்கு பவுடரா முத்தங்கள் பூசுற
நுலப்போல சீல - பெத்த தாயப்போல காள
யாரப் போல காதல் - சொல்ல யாருமே இல்ல
(சித்திரையில்...)

கேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க
கூணி முதுகால செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க
மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற.......
யாரும் ஏறச்சிடாத - ஒரு ஊத்துப் போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம் - இவ கண்ணுமுழி தூங்கி....
(சித்திரையில்...)

படம்: சிவப்பதிகாரம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வர்ணலதா, மாலையம்மா
வரிகள்: யுகபாரதி

382. பூங்காவியம் பேசும் ஓவியம்



பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது

(பூங்காவியம்)

யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
புதுக் கதை அரங்கேறிடும்

(பூங்காவியம்)


படம் : கற்பூர முல்லை
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா

381. உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு



உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத் தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து

நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை பார்த்தேன்
என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே
தொட்டு பார்த்த போதிலே அதை ரசித்தேன்
மலை உச்சி ஏறித்தான் உன் பேரை சொல்லித்தேன்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்
ஓஹோ...

உன்னை பார்ப்பதற்க்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே
ஓஹோ..
(உலகத்தில்..)

படம்: தை பொறந்தாச்சு
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிகிருஷ்ணன்

Wednesday, April 23, 2008

380. என்னை தாலாட்ட வருவாளோ



என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி

379. காதல் ஓவியம் கண்டேன்


காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
(காதல் ஓவியம்..)

மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
(காதல் ஓவியம்..)

கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன
(காதல் ஓவியம்..)

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன
(காதல் ஓவியம்..)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா
வரிகள்: பஞ்சு அருணாசலம்

விரும்பி கேட்டவர்: கானா பிரபா

Tuesday, April 22, 2008

378. ஒருவழிப்பாதை காதலா ஆ?



கண்ணிரண்டும் உன்னைத் தேடுதடி
காதல் கிளியே பூமுகம் காட்டு
காலடியில் பூமி ஆடுதடி
காதல் இருந்தால் சோகத்தை மாற்று
கண்மணி ஞாயமா
ஆணுக்கு மட்டும் காதலில் ரணமா...

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்
சந்தோசத்தில பங்கெடுக்கத்தான்
கூடவொரு பிரண்டு வந்துகுடிச்சான்

கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பளை மனசு புரியல நண்பா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா ஹெ
காதலின் பெயரே துரோகம் தானா

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
துக்கம் மறந்து துாக்கம் மறந்து
நிம்மதியக் கேட்டவன் வந்து குடிச்சான்

கனவுகளை கொடுத்துவிட்டு
கண்ணிரண்டைக் கேட்பது காதலா
சிறையினிலே அடைத்துவிட்டு
சிறகுகள் தருவது காதலா
ஒருவழிப்பாதை காதலா ஆ
இன்பங்கள் மட்டும் காதலா
போதையில் விழுவது காதலா
ஹ போடா போடா பூக்களில் முள்ளா

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்பா

குடித்திருந்தால் ஊர் விலகும்
நினைவுகள் விலகுவதில்லையே
எனைமறந்த போதையிலும்
புலம்பினேன் அவள்பேர் சொல்லியே
மறப்பதற்காவொரு ஞாபகம் ஹு
இழப்பதற்கா அவள் பூமுகம்
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்
அணைந்துவிடாது காதலின் தீபம்

பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில தோத்தவன் கண்டுபுடிச்சான்
பட்ட சரக்கு பட்ட சரக்கு
காதலில ஜெயிச்சவன் கண்டுபுடிச்சான்

கம்பியூட்டர் வந்த காலத்திலும்
பொம்பிளை மனசு புரியலப் போடா
மனசையும் கூட மணிபர்சில்
மறைச்சு வைப்பா பொம்பள தான்பா
ஆண்களே பாவமா
காதலின் பெயரே துரோகம் தானாஆ

காதலின் பெயரே துரோகம் தானா
அட சும்மா இருய்யா
ஏன் புலம்பிற

அட சும்மாரு!



படம் : நந்தினி
பாடியவர் : SP.பாலசுப்ரமணியம்
இசை : சிற்பி
வரிகள் : ?

விரும்பிக் கேட்ட நேயர் : கானா பிரபாண்ணா :-)

377. மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்


Tamilmp3world.Com ...

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சு பேசும் தட்டை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவில் மாலை ஒன்றாய் கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன் மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவை நானம் ஒழிக ஒழிக
(மஞ்சள் பூசும்..)

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது
உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள்
நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி
திரும்பி செல்ல தனி வழி
(மஞ்சள் பூசும்..)

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் உடைந்தது
ஓ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காற்றில் காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் இண்வழி
சொல்லும் சொல்லின் நழ்வழி
(மஞ்சள் பூசும்..)

படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தேவன், சுஜாதா
வரிகள்: பழனி பாரதி

Monday, April 21, 2008

376. ஆசை ஆசை இப்பொழுது பேராசை


Dhool - Aasai_Aasa...

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது?
(ஆசை ஆசை..)

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது?
ஓ.. இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?
அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது?
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது?
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?
(ஆசை ஆசை..)

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்

Sunday, April 20, 2008

375. வான் நிலா நிலா அல்ல




வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)



படம்: பட்டினப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

Saturday, April 19, 2008

374. ஜன கன மன...



ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்
ஒ யுவ யுவா ஓ யுவா

ஆயுதம் எடு ஆனவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு

ஏழைக்கு வாழ்வது இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து
அட கொட்டத்தின் திட்டத்தை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

காட்டுக்குள் நுழைகின்ற காற்றதுவோ
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா

ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியை தொடு
தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து
நல்லவர் யாவரும் ஒதுங்கிகொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டணி வாலெடுத்தால்
வலபக்கம் பூமி திரும்பிவிடும்
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒயுவா

ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

373. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்



நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
(எங்கள் வீடு..)
(நல்லதொரு..)

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
(அன்னை..)
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)

வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
(கானம் கோடி..)

மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
(நல்லதொரு...)

கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)

படம்: தங்கப்பதக்கம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: P சுசீலா, TM சவுந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

Friday, April 18, 2008

372. பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்க கிண்ணத்து சிங்கம் @ சின்ன கைப்புள்ள @ மதுரை வீரன் அழகப்பன் இராம்-க்கு இந்த பாடல் சமர்ப்பணம்..



லலலலலலலலலலலல...

பொய்க்கால் குதிரையில் போருக்கு போகும் ஐய்யனாரு நான்தான்
மைய தொட்டு மீசை வரைஞ்ச மதுரை வீரன் நான்தான்
(பொய்க்கால்..)

வாடகை சைக்கிளில் உலகை சுற்றும் வடிவேல் முருகன் நானடா
வத்திக் குச்சியில் கம்பு சுழற்றும் வீரன்டா சூரன்டா தீரன்டா
அட வீரன் சூரன் தீரன் என்றும் நானடா

அழகப்பா நா அழகப்பா.. அழகப்பா...
அழகப்பா நா அழகப்பா..


மாசத்தில் ஒரு நாள் குளிப்பவன் நான்
மாமியார் புடவையை துவைப்பவன் நான்
(மாசத்தில்..)
அட்டைக் கத்தில் வெட்டிய அந்த
ஆலமரத்தை சாய்ப்பவன்
நெல்லு குத்துற உலக்கை எடுத்து
பல்லைக் குத்தியே காட்டுவேன்
(அழகப்பா..)

மூட்டை பூச்சிய ஒத்த விரலால
ரத்தம் கக்க வைப்பேன்டா
ஓட்டை விழுந்த உளுந்து வடையை
சிமேண்ட் பூசி அடைப்பேன்டா
நெருப்புக்கு வேகாத பருப்புடா

அடேங்கப்பா அடேங்கப்பா
(அழகப்பா..)

கள்ளி பாலுல காப்பி போடுவேன்
எல்லா கட்சிக்கும் ஓட்டு போடுவேன்
நல்லி எலும்புல நாதஸ்வரம் வாசிப்பேன்டா

ஏய் அழகப்பா..

பாயை சுத்தி காது கொடைபவன்
கால மடக்கி கபடி ஆடுவேன்
ஓசி சோத்துல உடம்பை வளர்க்கும் உத்தமன்டா

அழகப்பா..

சோலைக்காட்டு பொம்மைய போல சொந்த காலில் நிப்பவன்டா
குப்புற விழுந்தா மண்ணு ஒட்டும்ன்னு
மீசையை வைக்காமல் வாழ்பவ்ண்டா
தலைமுடியை தலையில் தாங்கும் சிங்கம்டா

அடேங்கப்பா அடேங்கப்பா..
(அழகப்பா..)

செய் செய்யுன்னு சொன்னாலும் எனக்கு
செய்வினை செஞ்சவன் யாரடா?
நான் இறும்பு மழுஷன்னு சொன்னதும்
நேத்து என்னை எடைக்கு போட்டவன் யாரடா?
செறுப்பு கடித்தாலும் திருப்பி கடிக்காத
மன்னிக்கும் பக்குவம் உடையவன்டா
(அழகப்பா..)

பிச்சைக்காரனிடம் கடனை வாங்குவேன்
ஆட்டு சாணியில் அல்வா கிண்டுவேன்டா
ஊரே துரத்தினாலும் எவன் கையிலும் மாட்டாத
ஓட்டப் பந்தயன் வீரன்டா..

அடேங்கப்பா.....

படம்: இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: திப்பு

விரும்பி கேட்டவர்: தேன்கிண்ணம் தேனீகள்

371. போறாளே பொன்னுத்தாயி...



போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத் தொட்டு
தர பாக்கும் கருதப்போல வெட்கப்பட்டு

போறாளே பொன்னுத்தாயி புழுதிக் காட்டில் மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு

வெள்ளாமை நீதான்
வெள்ளாடு நாந்தான்
வெட்கத்த விட்டுத் தள்ளம்மா

வெள்ளாம காட்ட
விட்டுத் தர மாட்டா
பண்பாட கட்டிக்காக்கும்
பட்டிக்காட்டுக் கருத்தம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)

படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ளை
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல

உன் மேலே கிறுக்கு
உள்ளூர இருக்கு
வாய்விட்டு சொல்லத்தானே தோதேயில்ல தோதேயில்லை
வைகைக்கு கடலை சேர யோகமில்ல யோகமில்ல

அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல
(போறாளே பொன்னுத்தாயி..)

நீ கண்ட வள்ளி
சப்பாத்திக் கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும்
முள்ளிருக்கும்

அடி போடிக் கள்ளி
நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும்
கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுர கட்டி
கொல்லுறியே கொல்லுறியே

வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே..
(போறாளே பொன்னுத்தாயி..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னிமேனன்
வரிகள்: வைரமுத்து


=============================================================


போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள ஊரை விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல் உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல

(போறாளே பொன்னுத்தாயி..)

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)

(போறாளே பொன்னுத்தாயி..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து

370. கற்பூர பொம்மை ஒன்று




கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

(கற்பூர பொம்மை)


படம் : கேளடி கண்மனி
பாடல் : கற்பூர பொம்மை ஒன்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா

Thursday, April 17, 2008

369. பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே



பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே (2)
தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே(2)

கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை (2)
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

(பம்பரக் கண்ணாலே)

கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளின் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் குடிக்கிறேன்
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

படம்: மணமகன் தேவை
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: சந்திரபாபு
பாடல்: கே.டி. சந்தானம்

Wednesday, April 16, 2008

368. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே



குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே


போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதே

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே


செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி
தாலியைக் கட்டிக்கனும்

(குங்குமப் பூவே)


படம்: மரகதம்
இசை: சுப்பையா நாயுடு
பாடியவர்: சந்திரபாபு, ஜமுனா ராணி

Tuesday, April 15, 2008

367. உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்



உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்..
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

ஆஹா எது இதுவோ
எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள்
ஏன் என்று நான் சொல்லுவேன்
இது அதுவோ.. ம்ம்ம்...
இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களோ

பெண் தோழன் நான்
ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேர் ஆசைதான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
(உன் பார்வையில்..)

ஓஹோ உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்
இதயத்தில் நீ
இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என் உள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
கண்ணாடி நீ
கடிகாரம் நான்
உன் உள்ளே நான் ஓடோடி வாழ்வேன்
காதல் எனும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
லல லைல லை லைலே
ஹேய்..
(உன் பார்வையில்..)

படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி

Monday, April 14, 2008

366. என்னோட லைலா வராளே மெயிலா



என்னோட லைலா வராளே மெயிலா
சிக்னலே கெடைக்கல கெடக்கல
நெஞ்சில கூலா ஊத்துது கோலா
தாகமே அடங்கல அடங்கல

ஹேய் பாப்பா நீ கொஞ்சம் நில்லு
எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு
என் நெஞ்சிலே குத்தாதே முள்ளு
காயா பழமா சொல்லு சொல்லு
(என்னோட லைலா..)

அட மனசை வலையா விரிச்சேன்
அந்த மைனா மாட்டலையே
ஒரு மாஞ்சா தடவியும் பார்த்தேன் பார்த்தேன்
டீலே கிடைக்கலையே
அம்மு இங்கே வருவளா
பதில கேட்டு சொல்லு
அவ இடுப்புல மடிப்புல கசங்குது மனசு
quick-ஆ வர சொல்லு

Why doesn't she talk to me
வா வா சின்னக்கா லவ் யூ கொஞ்சம் சொல்லுக்கா

Why doesn't she walk with me
இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா
(என்னோட லைலா..)

எந்த தேதி சிங்கார சிட்டு
என்னை பபர்த்து தன்னால வருவா
அலுங்கி குலுங்கி தல தல உடம்பை
எப்ப வந்து எங்கிட்ட தருவா
பிகர் கொஞ்சம் ஓரம் கட்ட
சார்ட் ரூட் இருந்தா சொல்லு
காதல் பேஜர் எடுத்து
மடத்தை பார்த்து மேசேஜு சொல்லு
என் ஹைக்ட்டு இது போதாதா
அட ஏந்தான் அலுத்துகுற
அட எல்லாம் தெரிந்த ஆளுக்கு முன்ன
ரொம்ப அலட்டிக்கிற
வயசு பையன மொறைக்க வேணாம்
அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓர கண்ணில் பார்த்தால் போதும்
லூக்கு குடுக்க சொல்லு

Why doesn't she look at me
ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே

Why doesn't she care for me
சீ சீ என்று சொன்னால் வம்பே

Why doesn't she starve for me
அவளா வருவா பொறுடா நண்பா

Why doesn't she just love me
போனா போட்டும் லவ் யூ சொல்லும்மா

Why doesn't she just love me
பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லும்மா

Why doesn't she just kiss me
பாட படுத்துறான் உம்மா குடும்மா

Why doesn't she just love me
சீக்கிரம் தலைவர லவ் யூ சொல்லும்மா

Why doesn't she just love me..

படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்: விஜய்

Sunday, April 13, 2008

365. அனார்கலி அனார்கலி



கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா

அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சஞ்சிர நதியும் நீயடி
ஸ்தம்பித்தேனசி உன் பார்வையில்

அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேறும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேறும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய் மரம்
(அனார்கலி..)

இயந்திர மனிதனை போல் உன்னையும் செவேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்
அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று தானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்குக்கெல்லாம் குறும்பு அதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீல கடல் நீ
நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமானாய்
(அனார்கலி..)

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதற்கு முகவரி நீதானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேறும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ
(அனார்கலி..)

படம்: கண்களால் கைது செய்
பாடியவர்: கார்த்திக்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

Saturday, April 12, 2008

364. பூவுக்கென்ன பூட்டு


பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு
நீயும் நானும் யாருக்கு?
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா
கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை?
எப்போதும் பரவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
(நீ சிரிச்சா..)

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுபா, அனுபாமா, நோவேல் ஜேம்ஸ், AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

Friday, April 11, 2008

363. ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில்



ஒன்னு ரெண்டு தொண்ணுத்தெட்டில்
உன்னை சந்தித்தேன்
நான் என்னை சிந்தித்தேன் (2)
நிலவென்று சொல்ல மாட்டேன்
தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன்
நீங்கி விடுவாய்
உறவென்று சொல்ல மாட்டேன்
விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன்
பிரிந்து விடுவாய்
(ஒன்னு ரெண்டு..)

நினைவில் என் நினைவில்
நீங்காமல் நீதான் வாழும் ஓவியம்
மழையில் உன் மழையில்
நான் நனைவது போலே ஏதோ ஞாபகம்
நீ கிடைத்த சேதியில் நெஞ்சம் அலை மோதும்
நான் படுத்து தூங்கவே உந்தன் நிழல் போதும்
வானம் மானம் எல்லாம் இழந்தேன்
உன்னால் தானே மீண்டும் எழுந்தேன்
உன்னு ரெண்டு..
(ஒன்னு ரெண்டு..)

யாரும் அறியாமல்
ஒரு பாலையில் பூ மனம் காதலில் மருகியதே
ஓசை இல்லாமல்
என் ஊணும் உயிரும் ஒன்றாய் உருகியதே
காற்று வீசும் மாலையில்
காத்திருக்க வேண்டும்
கண்ணா எந்தன் காதலை
காதில் பேச வேண்டும்
காட்டும் அன்பில் என்னை மறந்தேன்
உந்தன் மூச்சில் நானும் கரைந்தேன்
(ஒன்னு ரெண்டு..)

படம்: புதுமைப் பித்தன்
பாடியவர்: சித்ரா

Thursday, April 10, 2008

362. என் மனதை கொள்ளையடித்தவளே



என் மனதை கொள்ளையடித்தவளே
என் வயதை கண்டு பிடித்தவளே.. ஹே ஹே..
என் மனதை கொள்ளையடித்தவளே.. ப ப ப..
என் வயதை கண்டுபிடித்தவளே

அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
மனத் தந்தியை படித்தேன்
வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னைத்தான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்..

மூச்சை போல உனை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரையீரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரையீரல் ஒரு குறையீரல்
நிதம் நிதம்தான் காதல் ராகம்
நிகழ்ந்திடத்தான் கேட்கும் தேகம்
நீங்காமல் நெஞ்சில் இருக்கு
உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு
(என் மனதை..)

ஏப்ரல் மாதம் கோடைக்காலம்
உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான்
டிசம்பர் மாத குளிர்காலம்
உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்
உனக்கெனத்தான் தோழி தோழி
உருகுகிறேன் நீண்ட நாளே
நீ தீண்ட கூச்சம் பிறக்கும்
கொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும்
சிப ப ப ப ப..
(என் மனதை..)

படம்: கல்லூரி வாசல்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்

Wednesday, April 9, 2008

361. நான் ஒரு முட்டாளுங்க





நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க
நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க

கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
ஏ..ஏ...ஏ.. கயிதே ...டேய்..
கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க..
நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க


படம்: சகோதரி
இசை: ஆர்.சுதர்சனம்
பாடியவர்: சந்திரபாபு

360. எனது விழி வழி மேலே ஹோ..


எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு (2)
(எனது விழி..)

பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
ல ல லா ல ல ல லா ... ல ல லா ல ல ல லா
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே
(எனது விழி..)

பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
லா லா ல லா லா லா ல ... லா லா ல லா லா லா ல
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே ஹோய்
(எனது விழி..)

படம்: சொல்ல துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, KJ ஜேசுதாஸ்

359. இது குழந்தை பாடும் தாலாட்டு



இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
(இது குழந்தை..)

படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Tuesday, April 8, 2008

358. சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே



சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகி உன்னிறம் ஆ...
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சகி உன்னிறம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர..

காதல் கதகளி
(தின்திதாரா இன்னொரு சந்தம் கண் நிறையே நட்சத்திரங்கள்
கண்டு ஞானும் பைங்கிளியே)
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

படம்: M குமரன் S/O மகாலட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா

357. உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்


உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
(உன்னை..)
நான் உனக்காகவே ஆடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
(உன்னை..)

அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்
கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ
(உன்னை..)

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாட வா
(உன்னை..)

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
(உன்னை..)

படம்: பட்டிக்காட்டு ராஜா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

Monday, April 7, 2008

356. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு



சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?
(சிட்டுக்குருவிக்கென்ன..)
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
(உலகம்..)
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?... கட்டுப்பாடு..... ஓஹோ..

மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?
(மரத்தில்..)
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்?
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
(சிட்டுக்குருவிக்கென்ன..)

பழத்தை கடிக்கும் அணிலே
இன்று பசிக்கின்றதோ? பழம் ருசிக்கின்றதோ?
பாட்டு படிக்கும் குயிலே
நீ படித்ததுண்டோ? சொல்லி கொடுத்ததுண்டோ?
நினைத்ததெல்லாம் கிடைக்கவேண்டும்
நினைத்த படியே நடக்கவேண்டும்
(சிட்டுக்குருவிக்கென்ன..)

வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
வணங்கி வளையும் நாணல்
நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகு மதிக்க வேண்டும்
(சிட்டுக்குருவிக்கென்ன)

படம்: சவாலே சமாளி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

355. தொட தொட மலர்ந்ததென்ன



தொட தொட மலர்ந்ததென்ன
பூவே தொட்டவனை மறந்ததென்ன?
(தொட தொட..)
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?
(பார்வைகள்..)
(தொட தொட..)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்ல்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை
(தொட தொட..)

பனிதனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே
(தொட தொட..)

படம்: இந்திரா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து

Sunday, April 6, 2008

354. உயிரே உயிரே முதலாம் உயிரே...



உயிரே உயிரே
முதலாம் உயிரே
என்னில் வந்து எப்போது கலந்திடுவாய்?
சுவாசம் தந்த காற்றே
உயிர் எங்கே உள்ளது?
உயிரில் உருவம் இல்லை
விஞ்ஞானம் சொன்னது
உருவம் உள்ளதே ஒரு பெயரும் உள்ளதே
எண்ணும் போதெல்லாம் அது எதிரில் வந்ததே
(உயிரே..)

ஒரு முறை என் கையில்
உறங்கிட நீ வந்தால்
உலகமே என் பையில் அடங்கிடுதே
மறுமுறை என் தாயின்
கருவரைக்குள்ளே நான்
இருப்பது போல் இன்பம் வருகிறதே
ஒளியின்றியே கண்ணில் கண்ணால்
கதை பேசலாம் அன்பே
உறங்காமலே நானும் நீயும்
இமை மூடலாம் அன்பே
(உயிரே..)

நடந்திடும் பாதைகள் நெருப்பென ஆனாலும்
இறுதியில் உன் வாசல் அடங்கிடுதே
எழுத்துக்கள் எல்லாமே மறந்திட நேர்ந்தாலும்
அடிக்கடி உன் பெயரை எழுதிடுவேன்
பிரிவில்லையே ஆனால் ஏனோ
இரண்டாகினோம் அன்பே
தடையில்லையே ஆனால் ஏனோ
தினம் ஏங்கினோம் அன்பே
(உயிரே..)

படம்: வானம் வசப்படும்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன், கங்கா

Thursday, April 3, 2008

353.நீ போகுமிடமெலாம் நானும்வருவேன் போபோ போ!

ஆண்:போ போ போ..ஓஓ ஓ..
பெண்: வாவா வா ஆஆஆ
ஆண்: நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
பெண்: நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

ஆண்: பச்சைக்கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக்கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் -நீ (பச்சைக்கிளியாய்)
போபோ போ
பெண்: உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
வா வா வா
ஆண் : போ போ போ
ஆண்: காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப்பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் என்னைக்காணலாம் (காலம்)
போ போ போ
பெண்: பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னைத்தந்தேன் உன்னிடம்
வா வா வா
ஆண்: நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ
பெண் : நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா





















Get this widget Track details eSnips Social DNA

படம்: இதயக்கமலம்


பாடல்வரிகள் :கண்ணதாசன்


இசை: கேவி.மகாதேவன்


பாடியவர்கள்: பி.சுசீலா ,PB.ஸ்ரீநிவாஸ்

Tuesday, April 1, 2008

352.பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்..

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
காணாத கண்களை காணவந்தாள்...
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)

மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல் (பாடாத பாட்டெலாம்)

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா.. (பாடாத பாட்டெலாம்)

Get this widget Track details eSnips Social DNA

பாடியவர் : PB.ஸ்ரீநிவாஸ்

படம் : வீரத்திருமகன்

இசை:விஸ்வநாதன் - ராமமூர்த்தி

Last 25 songs posted in Thenkinnam