Friday, March 15, 2013

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - thiraipaadal.com


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே


படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Sunday, December 9, 2012

கண்மணியே காதல்



கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மாநேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

படம் : ஆறிலிருந்து அறுபது வரை (1979)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் :பஞ்சு அருணாச்சலம்

Friday, December 7, 2012

ராஜா என்பார் மந்திரி



ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள 
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு 
 ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு 
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

படம் : புவனா ஒரு கேள்விக்குறி (1977)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

Sunday, October 21, 2012

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன்கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

படம் : வட்டத்துக்குள் சதுரம் (1978)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : சசிரேகா, ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்


Tuesday, October 2, 2012

அண்ணன் என்ன தம்பி என்ன



அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான்
நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
எந்தன் நெஞ்சமிங்கு நெஞ்சமில்லடி
காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன
நேருக்கு நேர் நின்று ஏய்த்திடும் மோசம் என்ன
ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
உண்மையை கொன்றபின் நெஞ்சுக்கு நீதி என்ன
போகும் பாதை தவறானால்
போடும் கணக்கும் தவறாகும்

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

தந்தையின் சொல் நின்று மந்திரம் தான் என்று
கண்டதடி பிள்ளை என்ற உண்மை உள்ளமே
என்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
பட்டது பட்டது என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
விட்டது விட்டது கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி
வானம் பார்த்து பறக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

படம் : தர்மதுரை (1991) 
இசை : இளையராஜா 
பாடியவர் : ஜேசுதாஸ் 
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

Wednesday, November 2, 2011

ஒருநாள் உன்னோடு ஒருநாள்



ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

இசை:இளையராஜா
பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ்.பி. பி
வரிகள் : பஞ்சு அருணாசலம்
திரைப்படம் :உறவாடும் நெஞ்சம்

Wednesday, August 11, 2010

அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை

அடிப் பெண்ணே

பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசையென்ன

பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடு ம் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை
மீனாடும் சிறு மேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாளோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே





பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
திரைப்படம் : முள்ளும் மலரும்
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்

Sunday, August 9, 2009

வாழ்வே மாயமா? வெறும்கதையா?

வாழ்வே மாயமா?
வெறும் கதையா? கடும் புயலா?
வெறும் கனவா நிஜமா?
நடந்தவை எல்லாம் வேஷங்களா?
நடப்பவை எல்லாம் மோசங்களா?
(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போல கரமிருக்கும்
அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

திரைப்படம் : காயத்ரி
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்: B.S. சசிரேகா



Monday, December 15, 2008

838. அக்கரைச்சீமை அழகினிலே .....

அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே( அக்கரை)
புதுமையிலே மயங்குகிறேன்(2)
- அக்கரைச்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

(அக்கரைச்சீமை அழகினிலே)
லலலா லலலா

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்


மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர் (அக்கரைச்சீமை)
லாலாலாலாலல்லாலா


பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருணாச்சலம்
திரைப்பட: பிரியா




Monday, December 10, 2007

89. காதலின் தீபம் ஒன்று





காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் (2)
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

.........காதலின் தீபம்..........

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை (2)
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆ.. ஆ... ஆஆஆ....
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல் ல வா

.........காதலின் தீபம்..........

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன் (2)
பொன்னிலே பூவை அள்ளும்
ஆ.. ஆ... ஆஆஆ....
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல் ல வா

.........காதலின் தீபம்..........

படம் : தம்பிக்கு எந்த ஊரு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

88. பொதுவாக என் மனசு தங்கம்





ஜே ... ஜேய்... அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...
ஜேய்.. காளையனுக்கு ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்

முன்னால சீறுது மயில காள
பின்னால பாயுது மச்சக்காள
முன்னால சீறுது மயில காள
ஹா... பின்னால பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டுக்காள... முரட்டுக்காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும் பயமும்மில்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க... உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... ஹா
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாலுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி... புடவைய போத்தி
அண்ணன வாழ்த்தி பாடுங்களா

காளையன பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி

பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா தானா..
தன தன்னான தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே

படம் : முரட்டுக் காளை (1980)
இசை : இளையராஜா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் : மலேசிய வாசுதேவன்

Last 25 songs posted in Thenkinnam