ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னை கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
படம் : புவனா ஒரு கேள்விக்குறி (1977)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
0 Comments:
Post a Comment