Thursday, October 28, 2010

மயக்கமென்ன இந்த மௌனமென்ன



மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட

மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே

அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்

மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே

படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam