Wednesday, July 17, 2013

என் பூநெஞ்சை - நாடி துடிக்குதடி




என் பூநெஞ்சை என் பூநெஞ்சை
என் பூநெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டு வா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில்தான் ஒலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஏறாதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீயொரு பார்வை நேற்று பார்த்ததால்
நீர்க்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நனைக்குதே
வெறும் நாளெல்லாம் புது நாளாகும்
இது தான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

நேற்றென்னவோ பூ தந்தது ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார் தான் தந்தார் ஆண்வாசனை
வாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடியோசை என்று காட்டினாய்
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ரீட்டா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam