Thursday, July 18, 2013

வெளிநாட்டு கிராமப்புரத்தில் - நாடி துடிக்குதடி



வெளிநாட்டு கிராமப்புரத்தில்
விளையாடும் காதல் ஜோடி
அறியாத மனிதர் காட்டும்
ஒரு அரவணைப்பிலே
பகல் வெளிச்சம் நுழைந்திடாத
இந்த வனத்தில் இரவின் சுகத்தை
மகிழ்ந்து களிக்க வா


பழகும் இந்த நாட்கள்
மயில் இறகைப் போல வருட
நதியிலே ஓர் நதியிலே
மிதக்குதே உள்ளம்
நதியில் விழுந்த பூவாய்
மனம் உனது வழியில் செல்ல
கெஞ்சலில் உன் கொஞ்சலில்
பிடிக்குதே செல்லம்
எனக்கு என்று எதுவுமில்லை
எனது உலகிலே
இதயம் திறக்கும் தினமும் தினமும்
உனது நினைவிலே
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
எனக்கு போதுமே



நிலவின் ஒளியை எடுத்து
ஒரு புடவையாக உடுத்து
மயங்குதே உன் அழகிலே
உன் அழகிலே நெஞ்சம்
மெளனமான மயக்கம்
உன் உயிரில் கலந்த நெருக்கம்
நடுங்குதே உடல் நடுங்குதே
உடல் நடுங்குதே கொஞ்சம்
உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம்
ஒளிந்து கொள்ளவா
உனக்குள் இருக்கும் உலகை ரசித்து
கடந்து செல்லவா
வண்ண வயதும் வளரும் கனவும்
வண்ண வயதும் வளரும் கனவும்
சிறகைத் தேடுதே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்வேதா மோகன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam