Thursday, September 30, 2010

பானா காத்தாடி - ஒரு பைத்தியம் பிடிக்குது



ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானே மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே
(ஒரு பைத்தியம்..)

எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்வித்தாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் தருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகிச் செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி

நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் என்னாளும் இளைப்பாற
தோள்சாய வந்தாயடி
எந்த வழி சொல்ல புரியாமல் நான் நிற்க
எதிரில் ஒரு தேவதை ஹோ
என்னை நான் ஆக்கி என் வாழ்வை நேராக்கி
மீட்டு தந்தாய் என்னை
ஒரு நாள் ஒரு நாள் உன்னை கண்ணில் கண்டேன்
மறு நாள் மறு நாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி
(ஒரு பைத்தியம்..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam