ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோபெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூடபெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட(ஆகாய வெண்ணிலாவே)ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்றுபெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்றுஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆடபெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட( ஆகாய வெண்ணிலாவே )பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம் ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்னபெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்டஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட(ஆகாய வெண்ணிலாவே)படம்: அரங்கேற்ற வேளைஇசை: இளையராஜாபாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்
Post a Comment
0 Comments:
Post a Comment