Sunday, January 13, 2008

189. மின்னல்கள் கூத்தாடும்



வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
கண்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழியெங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெண்: (மின்னல்கள் கூத்தாடும)

ஆண்: முதன்முறை என்கிற பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெண்: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாக தொங்கிடுமே
என் விழியெங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா

ஆண்: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

ஆண்: காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய் போல
ஏனிந்த தொல்லையென்று தள்ளிப் போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

பெண்: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

(மின்னல்கள் கூத்தாடும)

படம்: பொல்லாதவன்
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam