Sunday, June 14, 2009

சர்வம் - காற்றுக்குள்ளே வாசம் போல



காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல ஆட உனக்குள் நான்
மாறாதே மண்ணோடு என்றுமே
மழை வாசம் நெஞ்சோடு உன்னைப்போல்
தீராதே கண்ணோடு என்றுமே
உயிர் ஈரம் எப்போதும் என்னை போல் என்னை போல்

நடு காட்டில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
நடு காற்றில் தனிமை வந்ததே
அழகிய ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக
ஏங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீ கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
கடல் காற்றில் இதயம் பட்டதே
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே
அலை மடி நீட்டுதே
அதில் உன்னை ஏந்துதே
தாங்காதே தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் நாடேதோ போகுதே போகுதே

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam