Monday, June 22, 2009

மாலையில் யாரோ மனதோடு பேச





மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

5 Comments:

ஆயில்யன் said...

டூ மை ப்ரெண்ட்

இன்னிக்கு விஜய் பர்த்டேவாம்ல!
எனி ஸ்பெஷல் ???

G3 said...

பாஸ்.. பாவம் பாஸ் அந்த பேர் வைச்சிக்கிட்ட ஒரே காரணத்துக்காக அனுவோட விஜய்ய இப்படி எல்லாமா கலாய்க்கறது ?

ஆயில்யன் said...

// G3 said...

பாஸ்.. பாவம் பாஸ் அந்த பேர் வைச்சிக்கிட்ட ஒரே காரணத்துக்காக அனுவோட விஜய்ய இப்படி எல்லாமா கலாய்க்கறது ?//

நான் சொன்னது தமிழக தளபதி பாஸ் நீங்க சொல்லுறது அவுங்க ஊரு தளபதி :)

M.Rishan Shareef said...

எனக்கு மிகப் பிடித்தபாடல்..சுவர்ணலதாவின் குரல் மிக அருமை.

பகிர்வுக்கு நன்றி !

பாலராஜன்கீதா said...

எங்களுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். தந்ததற்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam