Wednesday, June 24, 2009

சிரி சிரி சிரி சிரி




சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா
சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா
(கல..)

அம்மா சொன்னாள் மகன் கிட்டே
மகனே உனக்கொரு பெண் பார்த்துள்ளேன்
மணந்தால் அவளை மணக்க வேண்டும்
அவள் முத்து முத்தாக சிரிக்கிறாள்
மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்
மகன் சொன்னானாம்
முடியாதம்மா முடியாது
நீ எனக்கு பார்த்த பெண்ணோ
மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்
நான் எனக்கு பார்த்த பெண்ணோ
வாயும் வயிறுமாய் இருக்கிறாள்

ஒரு புருஷனை பொண்டாட்டி கரிச்சு கொட்டினாள்
பிரகாஷ் தனது பொண்டாட்டிக்கு
நித்தம் நித்தம் முத்தம் வைக்கிறான்
நின்றால் முத்தம் நடந்தால் முத்தம்
இருந்தால் முத்தம் கிடந்தால் முத்தம்
நீங்களும்தான் இருக்கிறீர்களே
எப்போது அப்படி முத்தம் கொடுப்பீர்
புருஷன் சொன்னானாம்
ஆகட்டும் ஆகட்டும்
பிரகாஷ் மட்டும் வெளியூர் போகட்டும்

கடற்கரை மணலில் காதலி கேட்டாள்
காதலா காதலா
கல்யாணம் முடிந்ததும் இப்படியே
என்னை காதலிப்பாயா
காதலன் சொன்னான்
அது நீ கட்டிக்கப் போகும்
கணவனை பொறுத்தது
(கல..)

படுக்கை அறைக்குள் புயலாய் புகுந்து
அழகுச் சிறுமி அம்மாவை கேட்டாள்
சீக்கிரம் சொல்லு மம்மி
செக்ஸ் என்றால் என்ன
ஏதோ எதுவோ என்றூ நினைத்து
அனைத்தும் சொன்னாள் அன்புள்ள அம்மா
அழகுச் சிறுமி சலித்துக் கொண்டு
அம்மாவை கேட்டாள்
அப்ளிகேஷன் ஃபார்ம்ல அரை இஞ்சு இடத்துல
இத்தனை விசயம் அடங்குமா?
இத்தனை விஷயம் அடங்குமா?
(கல..)

படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்கள்: கமல் ஹாசன், மகாலெட்சுமி ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam