Thursday, June 25, 2009

கடவுள் பாதி மிருகம் பாதி





கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மீண்டும் இறையாய் ஜனிப்பானா
மிருக ஜாதியில் மிறந்த மனிதா
தேவஜோதியில் கலப்பாயா

நந்தகுமாரா
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும் போது
இருத்துளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா
கன்னம் வடிகின்ற கண்ணீர் துளி தான்
வெந்நீர்த் துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத மழையும்
ஒன்றாய் கண்டவன் நீ தானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே

படம்: ஆளவந்தான்
இசை: ஷங்கர் - எசான் - லோய்
பாடியவர்: கமல்ஹாசன்

2 Comments:

Bee'morgan said...

மைஃபிரண்ட்..
//உயிரின் வேர்வை குளிர்கிறதே//
உயிரின் வேர்வரை குளிர்கிறதே


//மழையின் சுபாவம் தெரியாதா//
மழைநீர் சுடாது தெரியாதா

கடைசி சில வரிகளும் தவறெனப் படுகிறது..

கொஞ்சம் சரிபாருங்களேன்..

Anonymous said...

ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்

உயிரின் வேர்கள் குளிர்கிறதே

எல்லா துளியும் குளிரும் போது

இருதுளி மட்டும் சுடுகிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா

மழை நீர் சுடாது தெரியாதா

கன்னம் வடிகினற கண்ணீர் துளி தான்

வெந்நீர்த் துளி என அறிவாயா

சுட்ட மழையும் சுடாத மழையும்

ஒன்றாய்க் கண்டவன் நீதானே

கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை

குளிக்க வைத்தவன் நீதானே

Last 25 songs posted in Thenkinnam