தேன்கிண்ணம் குழுவின் தேனீ கப்பியின் பிறந்தநாளுக்கு சிறப்புப்பாடல்.
சக்ஸஸ் சக்ஸஸ்
லைஃபில் சக்ஸஸ் என்றும் நானும் பெறுவேனே
தொடவே தொடவே வானைத்தொடவே
என்றும் நானே பறப்பேனே - (சக்ஸஸ் சக்ஸஸ்)
கனவாய்த்தானே அன்றுவாழ்ந்தேனே
நிஜமாய்த்தானே இன்று பிறந்தேனே
உலகை நானே வென்றிடுவேனே (சக்ஸஸ் சக்ஸஸ்)
உளிகள் தாங்கும் பாறையே
சிலைகள் ஆகும் நண்பனே
வளையும் நதியே
கடலில் சேர்ந்திடுமே ஓஒ
தத்தித்தாவும் கடலலை
கரையைத்தொட்டால் கரைந்திடும்
மீண்டும் ஓரலை மறுபடி மோதிடுமே
வேருக்குத்தெரியாமல்-எந்த
பூவும் கிளையில் பூக்காது
பூமிக்குள் மறையாமல் ஒரு வைரம் இங்கே கிடையாது
பொறுமையினால் பூமி வென்றிடலாம்
போர்க்களத்தில் பூக்கள் பறித்திடலாம்
வியர்வைத்துளிகள் வெற்றிகள் தருமே (சக்ஸஸ் சக்ஸஸ்)
அன்னை தந்தையை வணங்கிடு
குருவும் தெய்வம் என்றிடு
வரலாறெங்கும் உன் பேர் நிலைத்திடுமே
அறிவின் திரியை கொளுத்திடு
அன்பின் தீபம் ஏற்றிடு
ஆகயத்திலும் உன்புகழ் சென்றிடுமே
தலைகீழாய் பிடித்தாலும்-நாம்
நேராய் எறியும் தீயாவோம்
துயரங்கள் வதைத்தாலும்-நாம்
தோல்விக்கு தோல்வி தந்திடுவோம்
பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
உள்ளங்கையில் தண்ணீர் கொண்டு செல்லலாம்
மின்னலைப்பிடித்து
விண்ணில் செல்வோமே (சக்ஸஸ் சக்ஸஸ்)
திரைப்படம்: அந்த நாள் நியாபகம்
பாடலைப்பாடியவர்: கார்த்திக்
இசையமைத்தவர்: பரத்வாஜ்
பாடலைஇயற்றியவர்: நா.முத்துக்குமார்.
Thursday, July 31, 2008
632 சக்ஸஸ் சக்ஸஸ் லைஃபில் சக்ஸஸ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:12 PM 5 பின்னூட்டங்கள்
Wednesday, July 30, 2008
631. வளையப்பட்டி தவிலே
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:51 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், உஜ்ஜயினி, நரேஷ் ஐயர், நா. முத்துக்குமார், மதுமிதா
Tuesday, July 29, 2008
630. இது என்ன மாயம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 5:43 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, GV பிரகாஷ் குமார், அல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன், நா. முத்துக்குமார்
629. காதல் யானை வருகிற ரெமோ
காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ
அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்
காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ
ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு
Eஹீ தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ
காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ
ஹிரோஷிமா நீதானோ
நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ காதல்
யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ
அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்
படம்: அந்நியன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நாகுல், GV பிரகாஷ், மெல்வின்
வரிகள்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 3:47 PM 0 பின்னூட்டங்கள்
வகை GV பிரகாஷ் குமார், நா. முத்துக்குமார், நாகுல், மெல்வின், ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
628. பல்லேலக்கா
பதிந்தவர் கப்பி | Kappi @ 12:35 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், நா. முத்துக்குமார், பென்னி தயால், ரைஹானா
627.இது போர்க்களமா இல்லை தீக்குளமா
இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே (இது போர்க்களமா)
தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா
வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
தொடுதொடுவெனச் சொல்லடி மாயா
கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா
நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே
நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படிவித்தை செய்யும் பெண்ணே
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
எந்தக் கயிறு உந்தன் நினைவை
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
உன்பேர் சொல்லி அடங்குமடி
படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா
திரைப்படம் : 7/G ரெயின்போ காலனி
இசையமைத்தவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:28 AM 4 பின்னூட்டங்கள்
வகை நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ராகவேந்திரா
626. உருகுதே மருகுதே
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, GV பிரகாஷ் குமார், சங்கர் மகாதேவன், நா. முத்துக்குமார், ஷ்ரேயா கோஷல்
Monday, July 28, 2008
624. நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:35 AM 3 பின்னூட்டங்கள்
வகை 2000's, கமல்ஹாசன், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா
623. அன்பே என் அன்பே - தாம்தூம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:14 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2008, நா. முத்துக்குமார், ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
Sunday, July 27, 2008
622. வைகைக் கரை காற்றே நில்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை காற்றே நில்லு)
படம்: உயிருள்ளவரை உஷா
இசை:டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:36 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1980's, KJ ஜேசுதாஸ், T ராஜேந்தர்
Saturday, July 26, 2008
621. மருதாணி விழியில் ஏன் - சக்கரக்கட்டி
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:51 PM 6 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2008, AR ரஹ்மான், மதுஸ்ரீ, வாலி
Friday, July 25, 2008
618. துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
பதிந்தவர் MyFriend @ 11:02 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SPB சரண், சுஜாதா, யுவன் ஷங்கர் ராஜா
617. உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
பதிந்தவர் MyFriend @ 8:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கைலாஷ் கேர், சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
616. வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த
மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த
இசைச்சோலை பூக்கும் நேரமே.....ஹோ....ஓ
தமிழ் வந்து தாயமாடுமே..
ராகத்தின் ஊஞ்சல் நானாடிப் பார்க்கிறேன்
ஒரு கோடி நாட்களை ஒரு நாளில் வாழ்கிறேன்
குயில் தோப்பின் பாடலாகிறேன்..
(வானம் வாழ்த்த...)
நீர்வீழ்ச்சித் தாளிலே வண்ணங்கள் தீட்டுவேன்
தார்சாலைக் கூந்தலில் பூக்கள் சூட்டுவேன்
நீயாக போர்வையாய் பனிமூட்டம் பார்க்கிறேன்
நிலவாக சூரியன் மாறக் கேட்கிறேன்
நான் போடும் மெட்டுக்கு கிளிகள் கவிதை சொல்லும்
சட்டென்று மீனெல்லாம் செதிலைத் தட்டித் துள்ளும்
பூவாசம் சிந்தாமல் காற்றின் கைகள் அள்ளும்
வண்டெல்லாம் கோபத்தில் காவல்நிலையம் செல்லும்
மழைத் தீயில் நானும் வேகிறேன்....ஹோ....ஓ
இசைமூச்சின் ஈரமாகிறேன்..
(வானம் வாழ்த்த...)
கண்ணாடித் தோட்டமாய் பொன்னேரி தோன்றுதே
மின்சார மீன்களாய் ஓடம் நீந்துதே
தாய்நாடு போலவே தேன்கூடு பார்க்கிறேன்
தமிழ்க் காதல் நேரவே பாடித் தீர்க்கிறேன்
நாடெந்தன் தாய்வீடு பாசத்தோடு சொல்வேன்
மரமெல்லாம் என் சொந்தம் என்றே கட்டிக் கொள்வேன்
பேரிக்காய் தோப்புக்குள் முயலை கூட்டிச் செல்வேன்
உன் அத்தான் நானென்றே உறவைச் சொல்லித் தருவேன்
உயிருக்குள் பேதமில்லையே.......ஓ......ஓ
உறவுக்கு ஏது எல்லையே..
(வானம் வாழ்த்த...)
படம்: குபேரன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: சுஜாதா
பதிந்தவர் MyFriend @ 7:30 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், சுஜாதா
614. ரங்கோலா ஹோலா ஹோலா
ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ
(ரங்கோலா..)
கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திர்ம்பினால் நிக்க சொல்லி
வச்சு சிடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா
(ரங்கோலா..)
ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குழுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி
(ஓ ரங்கோலா..)
இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கடக்கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லை கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே
(ஓ ரங்கோலா..)
படம்: கஜினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்
பதிந்தவர் MyFriend @ 3:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சங்கர் மகாதேவன், சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
612. தேசிங்கு ராஜாதான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே
பதிந்தவர் MyFriend @ 10:03 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், சுஜாதா, வித்யாசாகர்
611. கும்பகோணம் சந்தையில்
கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா
வேட்டியின் வேகத்தை பார்த்து உன் தாவணி வேர்த்தது நேத்து
வெக்காத எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
(கும்பகோணம்..)
தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி பானை வச்ச இடத்தை மாமன் பார்வைகள் தொடலாமா?
அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா?
அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா?
நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
(கும்பகோணம்..)
கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
ஏழு தலைமுறை தட்டில் இருக்கு என்ன சீக்கிரம் விடுவாயா?
அடி மெத்த வீடு ஒன்னு நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா?
அந்த வீட்டுக்கு வாசக்கதவோ ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
(கும்பகோணம்..)
படம்: சிம்ம ராசி
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: சுஜாதா, அருண்மொழி
வரிகள்: வாசன்
பதிந்தவர் MyFriend @ 7:31 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், அருண்மொழி, சுஜாதா, வாசன்
610. ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..
(ஆலங்கட்டி..)
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?
ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா
குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது
(ஐயோடா..)
ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
(ஆலங்கட்டி..)
(ஐயோடா..)
படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
வரிகள்: கலைகுமார்
பதிந்தவர் MyFriend @ 2:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், கமல்ஹாசன், கலைக்குமார், சுஜாதா
609. நெஞ்சோடு கலந்திடு உறவாலே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)
கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)
படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
பதிந்தவர் MyFriend @ 2:28 AM 0 பின்னூட்டங்கள்
608. சில்லென்ற தீப்பொறி ஒன்று
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது ந்ஞ்சில் பார்த்தாயா?
இதோ உன் காதலன் என்று
விரு விரு விருவென கல கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா?
உன் மெத்தையில் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பன்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நா நா
(சில்லென்ற..)
கண்ணா உன் காலணியுள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் காலுறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூர தேன் பாய்வதும்
முத்து பையன் தேனீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ..
(தித்திக்குதே..)
அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ..
(தித்திக்குதே..)
(சில்லென்ற..)
படம்: தித்திக்குதே
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுஜாதா
பதிந்தவர் MyFriend @ 12:06 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுஜாதா, வித்யாசாகர்
Thursday, July 24, 2008
607. சந்திரனை தொட்டது யார்
பதிந்தவர் MyFriend @ 10:32 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா, வைரமுத்து, ஹரிஹரன்
606. தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?
பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒன்னும் ஒன்னுமொன்னா
சேர்ந்து மூனாயிடும்
(தேசிங்கு ராஜா..)
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஓ.. நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
ஹோ.. கனவுக்கு விலயில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா
ஆடும் புலி ஆட்டத்திலே
ஓ.. ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே
ஓ.. வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா
(தேசிங்கு ராஜா..)
ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒன்னும் ஒன்றும் ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்
(தேசிங்கு ராஜா..)
படம்: டும் டும் டும்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரீஷ் ராகவேந்திரா
வரிகள்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 8:00 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக் ராஜா, சுஜாதா, நா. முத்துக்குமார், ஹரிஷ் ராகவேந்திரா
605. தடக்கு தடக்கு என
தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு
மலரோ நனையுது
மனமோ குளிருது
உலகோ கரையுது
சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட
தகிட தகிச தம்
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோளில் அல்லவா தொடும் வேளையில
நீ காதல் கொண்டு வா துளி தூரையில
என்னை கொஞ்ச கொஞ்ச
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச
(என்னை கொஞ்ச..)
தோளை தொட்டு தூரல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே
தேகம் எங்கும் ஈரம் சொட்ட வேட்கம் வந்து ஊஞலிட்டதே
தத்தி தை தை தை வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே
அள்ளும் கை கை கை கை அன்பை நெய் நெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே
அழகிய துளி
அதிசய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ...
(என்னை கொஞ்ச..)
வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச் செல்ல வா
மூடும் கண்ணை மோதும் உன்னை என்று ஏந்திக்கொல்லவா
என்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லம் ஆவாயா துளியே
வெள்ளை தீ போன்ற வெட்க பூ போல என்னை சூழ்ந்தாயோ கிளியே
அழகிய துளி
அதிய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ..
(என்னை கொஞ்ச..)
படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: யுகபாரதி
பதிந்தவர் MyFriend @ 5:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுஜாதா, யுகபாரதி, வித்யாசாகர், ஹரிஹரன்
604. கத்தீரிக்கா கத்தீரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா க க க தேரிக்கா
கத்தீரிக்கா கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா
கன்னம் ரெண்டும் கிள்ள சொல்லும் காதல் பேரிக்கா
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை அளவு பாக்கணும் பாக்கணும்
உச்சந்தலைக்கு மேலே தூக்கணும் தூக்கணும்
அழகனே எனக்கு மூச்சு முட்டணும்
(கத்தீரிக்கா..)
குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சால்
குதிரை தான் இழைச்சு போச்சாம் சொன்னாங்க வீட்டில்
ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு
ஊருக்குள் பேச்சிருக்கு போகாதே ரோட்டில்
கொழு கொழு தேகத்தில் கொடி போலே பின்னட்டா
குழி விழும் கன்னத்தில் குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை வேண்டாம் மார்பில் சாய்ந்து தூங்கட்டா
(கத்தீரிக்கா..)
படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 3:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா, வைரமுத்து
602. மாயா மாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சன்யாஸி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
(மாயா..)
பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் செய்தி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி
உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைக்கடல் மேல் என்ன துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
(மாயா..)
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் பாடி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உண்ணோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
(காற்றே போ..)
(பட்டும் படாமலே...)
(சந்தோஷி..)
படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சுஜாதா, வாலி
601. நீ ஒரு தேசம்

Ok Lets get out with it
Hmm yeah yeah you got it
Hmm hmm yeah yeah yeah..
Oh oh yeah
நீ ஒரு தேசம்
நான் ஒரு தேசம்
எல்லை கடந்தால் சந்தோஷம்
நீ ஒரு வாசம் நான் ஒரு வாசம்
இரண்டும் இணைந்தால் உல்லாசம்
எனது கனவுகள் உனது இமையிலே
எனது கவிதைகள் உனது மொழியிலே
எனது சிறகுகள் உனது விரலிலே
எனது களவுகள் உனது இளமையிலே
(நீ ஒரு தேசம்..)
ஓடி விளையாடுவதும் ஓர விழி தேடுவதும்
காதல் என தெரியுது தெரியுது தெரியுது இப்போது
போதும் என பேசுவதும் போனவுடன் ஏசுவதும்
காதல் என புரியுது புரியுது புரியுது இப்போது
நெஞ்சோடு நெஞ்சாக நீ என்னை துண்டாட
அப்பப்பா என் தேகம் தீ ஆனது
அஞ்சாமல் கெஞ்சாமல் நீ என்னை கொண்டாட
அம்மம்மா என் சேலை தாயானதே
எனது குறும்புகள் எடுக்க வந்தது
உனது குறும்புகள் தடுக்க வந்தது
பேசுவது தெரியாமல் கூசுவது புரியாமல்
காதல் சுகம் எதுவென எதுவென எதுவென நனைவோமா
நீ எனது கிளையாக நான் உனத் கிளியாக
சேருவது சுகமென சுகமென சுகமென இணைவோமா
கொத்தோடு கொத்தாக நீ என்னை தொட்டாட
அச்சச்சோ என் ஆசை கரும்பானதே
தட்டாமல் முட்டாமல் பூவோடு வந்தாட
ஐயையோ உன் மீசை எறும்பானதே
எனது ரசனையோ பழக வந்தது
உனது ரசனையோ விலகி சென்றது
(நீ ஒரு தேசம்..)
படம்: அலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, கே கே
வரிகள்: யுகபாரதி
பதிந்தவர் MyFriend @ 7:34 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கேகே, சுஜாதா, யுகபாரதி, வித்யாசாகர்
600. ருக்கு ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை டார்லிங்
மாமி??
ப்யாரி ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மய் ஜானு, கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
ஓஹோ பேஷ்...
டில் மெரா தட்பே தெரெ லியே
டில் மெரா தட்பே தெரெ லியே
கஸ்ஸா தேரா வல்லா வல்லா
நக்கரே தேரா உஃப் உஃப் உஃப்
ருக்கு ருக்கு ருக்கு..
தூணுக்குள்ளும் இருப்பாண்டி துரும்பிலும் இருப்பாண்டி
நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி
குங்குமத்த வெப்பாண்டி கொஞ்சி கொஞ்சி நிற்பாண்டி
கொண்டவன் போல் துணை யாரடி
கூசல்கள் வந்தால் dont be angry
பொருமையை காத்தா வாழ்க்கை ஜாங்க்ரி
நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா
ஹஸ்பண்டுதான் போயாச்சு
சஸ்பெண்டுதான் ஆயாச்சு
ஓராயிரம் என் கேஸுதான்
பட்டதெல்லாம் பட்டாச்சு
தண்ணி ரொம்ப விட்டாச்சு
ஆயிடுத்து டைவோர்ஸுதான்
திருமண வாழ்க்கை தோட்டல் வேஸ்ட்டு
எனக்கதில் இனிமேல் இல்லை டேஸ்ட்டு
ரொம்ப பிடிச்சது அப்பன் வீடு
அன்றும் உல்லாசம் உற்சாகம் உண்டாகும் இடமல்லவா
ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவறு
நெடுங்காலம் நிழல் தர உனக்கேது சுவரு
ஆயிரம் காலம் பயிரை விளைந்தது
அருவடையாகி நேற்றே முடிந்தது
சோகத்தில் உண்டாச்சு கோபம்
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்?
யார் என்ன சொன்னாலும் dont care
நான் கூண்டுக்குள் சிக்காத free bird
அடி போக போக மாமி பேச்சு புரியும்...
ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
விரல் தாணடி நகங்களும் வளர்வது சரியா?
அதை நாமும் நருக்கிட நினைப்பது பிழையா?
நகத்தினை மனம் போல் நீ தான் நருக்கணும்
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்?
அம்மாடி ஏன் இந்த போட்டி?
இப்போ என்னாச்சு சொல்லுங்க மாமி?
எப்போதும் லைஃப் பார்ட்னர் வேண்டும்
ஏஜு ஆனாலும் துணை தேட தோன்றும்
அன்பு 5-0 ஆனபோதும் மலரும்
(தூணுக்குள்ளும்..)
ருக்கு ருக்கு ருக்கு
அரே பாபா ருக்கு
ஓ மை ஜானு கிவ் மீ லுக்கு
ருக்கு ருக்கு ருக்கு
படம்: அவ்வை சண்முகி
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
599. சோலைக்குயில் பாடும்
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
சோலைக்குயில் பாடும்..
ஹ்ம்ஹூம்.. அப்படி இல்லே..
தானனன னானா னானனனனானா..
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
ம்ம்.. அப்படித்தான்..
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதேன்?
இசையின் லயத்தில் அல்லவா?
அதை உள்ளே கேளு நீயும் பாடு..
(சோலைக்குயில்..)
கொட்டும் மழை முடிந்திட பிறகு
கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
பல கதை சொல்லுமே அதை கண்டுபிடி மனமே
குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தழுங்கும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்றோ
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெண்ணின் கையோடு வலையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
அந்த வலையும் கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லித்தரவா
(சோலைக்குயில்...)
துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளிவைத்து அணைக்கும் போது
நெஞ்சுக்குள்ளே நஞ்சை உதைப்பது சின்ன சுகமல்லவா
அது நெஞ்சுக்கு அழகல்லவா
இதயங்கள் எறியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இருந்தால் சின்ன சுகமல்லவா
சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
இந்த சந்தோஷம் சோகத்திலும் சின்ன சுகம்
ஒரு ஆனந்த பூங்காற்றாய் அள்ளி தருவது இசை இசை அல்லவா
(சோலைக்குயில்..)
படம்: ஆனந்த பூங்காற்றே
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
598. மல்லிகை மல்லிகை பந்தலே
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே
அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)
படம்: அரசு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சுஜாதா, விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: கபிலன்
பதிந்தவர் MyFriend @ 12:01 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கபிலன், சுஜாதா, மணிஷர்மா, விஜய் ஜேசுதாஸ்
Wednesday, July 23, 2008
597. அகப்பொருளா நீ அகப்பொருளா
அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே
புரப்பொருளா நீ புரப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புரப்பட்டுதான் நீ போனப்பின்னே
உன் புரப்பொருளாய் நான் தவிப்பேன்
பூச்செடி நீயானால் உன் வேர் என நான் இருப்பேன்
சூரியன் நீயானால் உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழிக்கிறதே
பசி தூக்கம் யாவையும் மறைக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே
(அகப்பொருளா..)
பூவான உன் தேகம் அதை பூட்டி வைத்தால் பாவம்
இவள் வாசனை கண்டு உன் வயதை கிண்டும் வண்டு
நீ நானென என மாறீனால் இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
தாமரை இலை மீதிலே மனம் தண்ணீர் கண்டேனே இன்று
பூஜையில் பூஜையில் பூவை தின்று எனை மென்று
(அருகினிலே நீ..)
கம்பன் வீட்டினில் உள்ள ஒரு கவிதை ஓலை நீதான்
உன் தோளில் தினம் தூங்கும் ஒரு குழந்தை போல ஆனேன்
என்னை நீ கிள்ளும் போது நான் உன் பேர் சொல்லி அழுவேன்
உன் கண்களில் உள்ள பார்வை தான் அது காதல் என்று காட்டாதோ
உன்னை நான் உன்னை நான் ஊட்டி விடவேண்டும் என்பேன்
உன்னை நான் உன்னை நான் வாயை வாயாலே தின்பேன்
(அகப்பொருளா..)
படம்: ஆஞ்சனேயா
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 10:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, உன்னி கிருஷ்ணன், சுஜாதா, மணிஷர்மா
596. மலரே ஒரு வார்த்தை பேசு
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே
வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை
மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை
கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)
பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள்
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது
ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)
படம்: பூமகள் ஊர்வலம்
இசை: சிவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
595. ஒரு பொய்யாவது சொல் கண்ணே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நாந்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
(ஒரு பொய்யாவது..)
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
இரவினைத் திரட்டி.........ஆ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ...
விண்மீன், விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் தீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம், தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
(ஒரு பொய்யாவது..)
(உண்மையும்..)
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
(ஒரு பொய்யாவது..)
படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுஜாதா /ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 5:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா, ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன்
594. காதல் நீதானா
காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)
எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)
என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா..)
படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: பழனிபாரதி
பதிந்தவர் MyFriend @ 3:05 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, இளையராஜா, உன்னி கிருஷ்ணன், சுஜாதா, பழனிபாரதி