Saturday, March 13, 2010

அழகான சூரியன் கண்ணால் பேச



அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே
என் நன்றியே பாடலா ஆனதே
(அழகான..)

மின்சாரம் பூப்பூக்குமா பூத்ததே
உன்னாலேதான் என் குரல் பாடுதே
(அழகான..)

ரோஜா பூவின் மென்மை எல்லாம்
உந்தன் மனம்தானே
காலை பனியின் தூய்மை எல்லாம்
உந்தன் குணம்தானே
உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி

உன் பாச கைகளில் பூப்பூக்க
பூந்தோட்டம் ஆயவள் வந்தாள்
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய
காதல் தீபமாய் நின்றாள்

மூங்கில்கள் என்பது தென்றலால் பாடுது
மேகங்கள் என்பது தூரலால் பாடுது
எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்
நன்றி சொல்ல வார்த்தை இன்றி நானும் பாடினேன்
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி உன் மேல் தூவினேன்
(அழகான..)

படம்: மனதை திருடிவிட்டாய்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சுஜாதா

1 Comment:

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, இந்தக் கொடுமையையெல்லாம் பாத்துப்பிட்டு எழுதிவேற வெக்கிறீங்களே, நீங்க நொம்ப நல்லவிங்க:)

Last 25 songs posted in Thenkinnam