Tuesday, March 30, 2010

ஓஹோ மேகம் வந்ததோ



ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ
(ஓஹோ..)

யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது
ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது
நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா
ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
(ஓஹோ..)

கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம்
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்
(ஓஹோ..)

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

Last 25 songs posted in Thenkinnam