Saturday, January 26, 2013

பரதேசி - யாத்தே கால



யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே

தாழ் போன வீடு கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானது ஏன்
தாய் போல நெஞ்சு தாளாத அன்பு
மழை தண்ணியோடு மாசு இல்லையே
வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீர் தான் ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு ஜீ(சீ)வனோ உறவிலே சேருதே
இரு ஜீ(சீ)வனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே

யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : ப்ரகதி, பிரசன்னா
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam