Wednesday, January 9, 2013

நீர்ப்பறவை - யார் வீட்டு மகனோ



யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து நிறையும்போது வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே 
யாதும் இங்கு ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்று தான்
உயிர்கள் வாழ மானம் ஒன்று தான்

மழை சொட்டு மண்ணில் வீழ்ந்தால் மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும் அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம் 
காதல் பாசம் எல்லாம் ஒன்று தான்

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : அனந்த் அரவிந்த்கஷான்
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam