Friday, January 18, 2013

யாவும் பொய்தானா - ஆதிபகவன்




thiraipaadal.com

யாவும் பொய்தானா
காதல் தவிர மண் மேலே
நீ என் உயிர்தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே

காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான  மெளனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடிப் பார்த்ததில்
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா
புவியெங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய்
உனைக் கண்டேன் கண்டேன் நான்தானடா

உந்தன் உறவே
போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால்
மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம்
கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் நெருக்கம்
கொஞ்சம் இரக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்


ஆசை அனைத்தும்
உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே
வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் அடைத்திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்


உனக்கான  மெளனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடிப் பார்த்ததில்
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா
புவியெங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய்
உனைக் கண்டேன் கண்டேன் நான்தானடா


படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: சினேகன்
பாடியவர்: மதுஶ்ரீ

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam