Saturday, January 5, 2013

வேணா வேணா விழுந்திடுவேனா



வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா 
ஈர விழியில் இடம் உண்டா 
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது

மடியினில் தலையணை செய்தாய் 
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய் 

ஓரு கண்ணில் வன்முறை செய்தாய் 
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய் 

ஒஹோ வசீகரா வசீகரா 
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும் 
வலைக்கரம் உடைத்திட வேண்டும்

இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா 

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ 

ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும் 

குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும் 

ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி 
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய் 
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய் 

எனக்குள் உன்னை தொலைத்து 
நீ உனக்குள் என்னை தேடு 
இரண்டு உயிர்கள் இருந்தால் 
அதை காதல் என்று கூறு 

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா 
ஈர விழியில் இடம் உண்டா 
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்

படம் : வசீகரா (2003)
இசை : ராஜ்குமார் 
பாடியவர்கள் : உதித் நாராயணன், சாதனா சர்கம் 
வரிகள் : பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam