Thursday, January 3, 2013

நீ மலரா மலரா



நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே 

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ

பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாளே

அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை

இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை

தினம் உன் பேரேயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன்

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன்

மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன்

என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்

என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே 

படம் : அற்புதம்(2002)
இசை : ஷிவா
பாடியவர்கள் : சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள் : பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam