ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆகா நான் தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை
நடிப்பேன் உந்தன் மன்றத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா!
பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர்விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி - அடி
கண்ணே என்னைக் கட்டிப்பிடி
பூங்கொடியே சிறுமாங்கனியே
உன் கண்களில் ஆயிரம் காதல் கதை
எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலையிடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடுதான் இந்த
ராஜா உந்தன் பின்னோடுதான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே
படம்: நான் வாழவைப்பேன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
0 Comments:
Post a Comment