Friday, May 21, 2010

சேவல் - துளசி செடிய



துளசி செடிய அரலிப்பூவு தூரமா தான் பார்க்கணும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேட்கணும்
(துளசி..)
ஓ பட்டப்பகல் வெட்ட வெயில் நம்மை எப்ப சேர்க்கணும்
நாலு நாளா உன் நினைப்பில் நானும் ரொம்ப வேர்க்கணும்
என் உசிரே நீ உதிராமா நான் புடிப்பேன்
நெல்லுகதிரே நீ கருகாம வாழவைப்பேன்
எம்மனசே உம் பின்னால சுத்துதுடா
உன் நினப்பே எங்கண்ணால குத்துதுடா குத்துதுடா
(துளசி..)

ஓ வேப்பங்குச்சா இருந்த என்ன வெட்டிவேரா மாத்தின
சேவலைப்போல் திரிஞ்ச என்ன ஊர்க்கோழியா ஆக்குன
கட்டுத்தரி காளை போல காலம் பூரா சுத்துன
வெட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்
ஒத்த வார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என் நெனப்ப மூடிவச்சி நின்னியே
சொடலைமாட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக்கூடாதுன்னு தள்ளுனேன்
என் வயசு உன்னை பார்க்காமே குறைஞ்சிருமே
என் உசுரு நீ இல்லேன்னா மறைஞ்சிடுமே மறைஞ்சிடுமே
(துளசி..)

பாரிஜாத பூவும் நீயும் பார்வையால தாக்குன
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன
உன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாத்தான் மாத்துன
முக்குளத்து தோட்டத்துல நான் பறிச்சேன் முள்ளைதான்
சாய்புறம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா உன்னுடைய ஞாபகம்
என் உயிரே உன்னை ஒரு நாளும் மறக்கலையே
இளம்பயிரே உன்னை ஒரு நாளும் வெறுக்கலையே
(துளசி..)

படம்: சேவல்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தீபா மரியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam