உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றதுமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவேநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ(உன்னோடு வாழாத..)மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோஎன் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோஉன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை(உன்னோடு வாழாத..)நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிருநீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிருநீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுதுநீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை(உன்னோடு வாழாத..)படம்: அமர்க்களம்இசை: பரத்வாஜ்பாடியவர்: சித்ராவரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment