Wednesday, December 12, 2007

102. நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்


பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு முண்டாசு கவிஞனுக்காக தேன் கிண்ணத்தில் அவனின் ஒரு பாடல். பாடலை கேட்ட கோபிக்கு தேன்கிண்ணம் சார்பாக நன்றிகள்.





நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

.......... நிற்பதுவே நடப்பதுவே .........

வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்திரா

5 Comments:

கோபிநாத் said...

நன்றி சகா ;))

இலவசக்கொத்தனார் said...

//போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?//

ரொம்ப ரசிக்கும் வரிகள். என்ன மாதிரி ஒரு மனநிலையில் இருக்கும்போது இப்படி பாடி இருப்பார் என யோசிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. ராஜா இதற்கு தந்திருக்கும் மெட்டு அருமை.

கப்பி | Kappi said...

நன்றி சிவா

Anonymous said...

Interesting to know.

Anonymous said...

you know in this film song, they have omitted some verses, esp the concluding verses of the original poem, which somewhat distorts the context of the message Barathiyaar was trying to convey.

Last 25 songs posted in Thenkinnam