Monday, December 10, 2007

94.சுந்தரி கண்ணால் ஒரு சேதி




ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி இந்நாள் நல்ல தேதி

பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் தேகமே

(சுந்தரி கண்ணால்)

பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண்: வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண்: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண்: வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

பெண்: எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி கண்ணால்)

பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண்: மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண்: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண்: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண்: வருவேன் அந்நாள் வரக் கூடும்

(சுந்தரி கண்ணால்)


படம்: தளபதி
பாடல்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam