Tuesday, December 4, 2007

58. சொல்லாதே சொல்லச் சொல்லாதே...



சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே..
(சொல்லாதே..)

மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்
காதல் மொழி வாங்கி வைத்தால்
நீயும் சொல்ல மாட்டாய்
நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே
மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே
உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் ஸ்வாசித்தேன்
காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்
இங்கு ஏதோ ஏதோ ஊடல்
(சொல்லாதே..)

காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்
காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்
நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு
சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே
என்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ..
(சொல்லாதே..)

படம்: சொல்லாமலே
இசை: போபி
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

வரிகள்: அறிவுமதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam