Saturday, December 22, 2007

137. காதல் சடுகுடுகுடு...



காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய்
என்றால் நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்­ணீர் என் தண்ணீ­ர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே


நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே


நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்
பாடலாசிரியர்: வைரமுத்து

1 Comment:

MyFriend said...

மீண்டும் ஒரு அருமையான பாடல்..

தாலாட்டும் வரிகள்.. சூப்பர் இசை.. அதை அழகாய் பாடி கலக்கிய சரண். :-)

Last 25 songs posted in Thenkinnam