தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
................தெய்வம் தந்த வீடு.......................
படம் : அவள் ஒரு தொடர்கதை (1978)
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : KJ யேசுதாஸ்
வரிகள் : கண்ணதாசன்
Tuesday, December 4, 2007
65. தெய்வம் தந்த வீடு
பதிந்தவர் நாகை சிவா @ 10:11 PM
வகை 1970's, KJ ஜேசுதாஸ், MS விஸ்வநாதன், கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
This song is one of my favorite one. Thank you for posting. I really love it.
Rumya
என் லிஸ்ட்ல இருந்த பாட்ட என்ன கேட்காம எப்படிங்க எடுத்துப் போடலாம்?
நாங்களும் கேட்போமில்ல :)
Post a Comment