பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதைஎங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதைவிழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோகவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்( எங்கே எனது கவிதை )மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதேவெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதேமேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதேஉடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதேஅழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் (2)( எங்கே எனது கவிதை)ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதேமுத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று கேட்குதேவேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதேமுகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதேபாறையில் செய்தது் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்( எங்கே எனது கவிதை )படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்இசை: ஏ.ஆர்.ரகுமான்பாடியவர்: சித்ராபாடல்: வைரமுத்து
சித்ரா வின் பெயர் சொல்ல வைக்கும் பாடல்களில் ஒன்று.காதலின் வலியை சொல்லும் பாடல்... நானும் வருகிறேன். அதே போல ஒரு பாடலுடன் :)
நல்ல பாட்டு. :-)புலி, அதே மாதிரி பாட்டா? வந்து பார்க்கிறேன். :-)
Post a Comment
2 Comments:
சித்ரா வின் பெயர் சொல்ல வைக்கும் பாடல்களில் ஒன்று.
காதலின் வலியை சொல்லும் பாடல்... நானும் வருகிறேன். அதே போல ஒரு பாடலுடன் :)
நல்ல பாட்டு. :-)
புலி, அதே மாதிரி பாட்டா? வந்து பார்க்கிறேன். :-)
Post a Comment