Monday, December 17, 2007

118. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்




தன்ன னன்ன தன ன னன்னா

தான னன தானன னனா

தான தனன தான தனன தானன னன

தான தனன தான தனன தானன னன


ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் (ரெண்டு கன்னம்)

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்


எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்

நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் (எடுத்து)

உள்ளங்கைச் சூடுப் பட்டு மலர்க் கொஞ்சம் வாடும்

மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்


[ரெண்டு கன்னம்]

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே

இருளே இவளின் துணையே (இளம்பிறையே)

இனி தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே...

அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே...

சுடாதே.. தொடாதே...

[ரெண்டு கன்னம்]

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ

வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ (தாகம்)

நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ

வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ


[ரெண்டு கன்னம்]


தான னன தான தன தானன னன

தான னன தான தன தானன னன



படம் : சிவப்புமல்லி
இசை : சங்கர்-கணேஷ்
பாடியவர் : K J யேசுதாஸ், P. சுசீலா
வரிகள் : வைரமுத்து

4 Comments:

ஜே கே | J K said...

சிபியின் நேயர் விருப்பமாக ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான பாடல்.. மிக மிருதுவான இசை கண்ணை மூடி ரசித்தால் இன்பம்.

இராம்/Raam said...

நல்ல பாடல் ஜே.கே.

Boston Bala said...

சிறப்பான தேர்வு. நன்றி

Last 25 songs posted in Thenkinnam