போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
படம் : தாய் சொல்லை தட்டாதே (1961)
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
1 Comment:
பழைய பாடல்களுக்கு ஈடு இணை வேறு எதுவும் கிடையாது.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment