Tuesday, August 31, 2010

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே



மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி..)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைப்பாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி..)

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுப்பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்
(வெண்பா..)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி..)
(வெண்பா..)

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷோபா சந்திரசேகரன்
வரிகள்: வைரமுத்து

Monday, August 30, 2010

கனவில் கண்டேனே ப்ரியா



கனவில் கண்டேனே ப்ரியா
கலையா கனவில் கண்டேனே ப்ரியா ப்ரியா
நீயும் நானுமாய் ப்ரியா
கொஞ்சி பேசி கொண்டோமே ப்ரியா ப்ரியா
நீ என் சொந்தமா
சில கால பந்தமா
மனசென்ன மன்றமா
அணைகின்ற தீபமா
பருவங்கள் பாரமா
பனி சிந்தும் ஈரமா
இதழோடு மதுரமா
இரு துளிகள் சிதறுமா

ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
தனிமை பாம்பாய் கொத்தும் ப்ரேமா
ஓ ப்ரியா

I want your love
I want your love
Your love

முழுக் காதல் ஒரு வரமோ
முழு மோட்சம் அது தருமோ
அனு அனுவாய் இனித்திடுமோ
உயிர் கனுக்களில் உரைந்திடுமோ
என் வாழ்வே நீ பெண்ணே
நீ தானே என் ஜீவன்
சரி என்று நீ சொல்வாயா
சீ என்று கோபிப்பாயா
நீ வேண்டும் ப்ரியா
ஓஹோ..
(கனவில்..)

விழிப்பினில் உன் நினைவுகளே
உறக்கத்தில் உன் கனவுகளே
இதயத்தில் உறையாலும் பிறையே
கிடு கிடுவென வளர்ந்திடுதே
உன் வீடு எங்கென்று
என் ப்ரேமா ஓ சொல்வாயா
ஆகாயம் உன் வீடென்றால்
அங்கேயே நாம் செல்வோமே
நீ வேண்டும் ப்ரியா
ஓஹோ..
(கனவில்..)

ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
ஓ ப்ரேமா ஓ ப்ரேமா ஓ ப்ரேமா
தனிமை பாம்பாய் கொத்தும் ப்ரேமா
ஓ ப்ரியா

படம்: வெற்றி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: தேவன்

Sunday, August 29, 2010

வெண்ணிலா வெளியே வருவாயா



வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவியா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொலி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்துவிடு
உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்றுவிடு
(வெண்ணிலா..)

ஹே புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா
அதை நீயே மறந்தாயே கோடி பூவே ஹேஹே
உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான்
விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான் ஓஹோ
(வெண்ணிலா..)

ம்ம்.. கண்களை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கிக் கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா
என் அன்பே என் அன்பே என் அன்பே ஹேஹே
காதலி காதலி கனவுகள் தோன்றாதா
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஓஹோ
(வெண்ணிலா..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, August 28, 2010

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்
இன்பக்கனவுகளே ( சந்தக் கவிகள்)

சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவிமழை ஆரம்பம் (சொந்தம்)
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்துவரும் என்னுடனே
தினம் பல ( சந்தக்கவிகள்)

சின்னஞ் சிறுவயது
பாடும் அவள் மனது ( சின்னஞ்)
சீர்காண வேண்டும்
திருநாளும் வர வேண்டும்
மலர்மாலை சூடும்
உறவோடு கூடும்

என்னுள்ளம் கண்டாடும் உறவுகளின்
இனியசுகம் தினம் பல (சந்தக் கவிகள்)

தட்டும் ஒலி இசையில்
மெட்டி கவிதை தரும்
என்னன்பு நெஞ்சில்
புதுராகம் அது பாடும்
மடை போல ஓடும்
மனமோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளின்
இனியசுகம் தினம் பல

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்
இன்பக்கனவுகளே ( சந்தக் கவிகள்)

சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவிமழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்துவரும் என்னுடனே
தினம் பல ( சந்தக்கவிகள்)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

திரைப்படம் : மெட்டி
இசை : இளையராஜா
பாடியவர்: ப்ரமானந்தம்

இனிது இனிது - ஓ மை ஃபிரண்ட்



வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல
நண்பன் வாழ்க

பெற்றவர்கள் அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை விடவும்
முற்றும் என்னை புரிந்தது நட்பு
நட்பு வாழ்க

ஆணும் பெண்ணும் பெண்ணும் ஆணும்
காக்கும் கற்பு நல்ல நட்பு

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

மேக கூட்டில் துளிகளானோம்
இங்கு வந்து நதிகளானோம்
ஒருமை இங்கே பண்மையானோம்
பண்மை கூடி ஒருமையானோம்

மின்னல் வந்தால் மேகம் கூட கிழிந்து போகும்
வானம் என்றும் கிழிதல் இல்லை
வானம் போலே எங்கள் நட்பு வாழ்ந்திருக்குமே
மாலை நிழல் போல வளரும் வர்கம்
மயங்கி மயங்கி மகிழும் நெஞ்சம்

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

கல்லை போல அற்பமானேன்
நட்பினாலே சிற்பமானேன்
நேற்று வரையில் புள்ளி ஆனேன்
உங்களாலே வார்த்தை ஆனேன்

கொண்ட அச்சம் கூச்சம் விட்டு ஓடி விட்டதே
இது அன்பின் நன்மை தந்ததே
நெஞ்சில் வஞ்சம் வண்மம் எல்லாம் மாறி விட்டதே
பாறை மனசு பழுத்து விட்டதே
பந்த பாசம் புரிந்து விட்டதே

ஓ தோழா ஓ மை ஃபிரண்ட்
என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஓ தோழி ஓ மை ஃபிரண்ட்
என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

Friday, August 27, 2010

இனிது இனிது - இனிது இனிது



இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது
இந்த கல்லூரியின் வாசம்
இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது
இந்த பச்சை பசும் தோட்டம்
இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும் பார்வை
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது

வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல்
இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலைப் போல்
சுற்றி சுற்றி அறிமுகங்கள்
சுடச்சுட அனுபவங்கள்
தினமும் செல்போன் கண் கலங்குது இங்கே
அடடா சிம்கார்ட் ஏன் உடையுது இங்கே
கனவோ மெய்யோ கண் மயங்குது இங்கே
கலந்தோம் நாம் இங்கே

இனிது இனிது
அட SMS-இல் சிணுங்கல்
இனிது இனிது
புது புத்தகத்தின் உலகம்
இனிது இனிது
அட தூங்க சொல்லும் சண்டே
இனிது இனிது
என்னை துடிக்க வைக்கும் மண்டே

இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது

சாலை எங்கும் மலர்களின் மாநாடு
பெண்கள் தானே கண்களின் சாப்பாடு
மனதுக்குள் புதிய தொல்லை
அதன் பேர் சொல்ல தெரியவில்லை
நதி மேல் செல்லும் பொன் இறகினை போல்
நகர் மேல் செல்லும் நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம் கலயம் எங்கே
தேடல் வாழ்விங்கே

இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது

உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே

இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது
இனிது இனிது

படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

Thursday, August 26, 2010

முந்தினம் பார்த்தேனே - சாரல் புதுச்சாரல்

சாரல் புதுச்சாரல்
ஓ நெஞ்செல்லாம் வரும் காதல் காதல்
ஊடல் ஊடல் ஊடல் நீரும் அதன் தேடல் தேடல்
வார்த்தைகள் தீர்ந்து மௌனங்கள் பேசும் பேசும்
ஆசைகள் சேர்ந்து ஆளையே மாற்றும்
புரிந்தாலும் புரியும் ரகசியம் இது தானோ

முந்தினம் பார்த்தேன் முந்தினம் பார்த்தேன்
ஹே நனேநா நா
ஹோ முந்தினம் பார்த்தேன்
ஹே நனேநாநா

முந்தினம் பார்த்தேன்
புன்னகை வார்த்தேன்
முந்தினம் பார்த்தேன்
சில்லுன்று வேர்த்தேன்
முந்தினம் பார்த்தேன்
வெட்கத்தை மறந்தேன்
முந்தினம் பார்த்தேன்
உன்னையே தொடர்ந்தேன்

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: தமன், சுசித்ரா

Wednesday, August 25, 2010

களவாணி - படப்பட படவென இதயம் துடிக்குது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்னைக்கு மட்டும்
நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா

படப்பட படவென இதயம் துடிக்குது
பனித்துளிப் பனித்துளி நெறுப்பினை குடிக்குது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ

கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத
துண்டாகிப் போனேனே ஹோ
முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக
திண்டாடிப் போனேனே ஹோ

என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு
கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்ன்னு தோணுதுல

காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக
காதல் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே

படம்: களவாணி
இசை: SS குமரன்
பாடியவர்: யாஷ் கோல்ச்சா

Tuesday, August 24, 2010

முந்தினம் பார்த்தேனே - கனவென கனவென



கனவெனக் கனவென
விரல் தொடும் கனவென
இரகசியக் குரல் என ஆனாயே
கனவெனக் கனவென
விரல் தொடும் கனவென
இரகசிய உறவென ஆனாயே

உன்னைக் கண்டேனடி
மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழியோரங்களே
பேசும் மௌனங்களே
சொல்லும் கதை என்னடி ஏ

நிழலெது நிஜமெது உயிரை இழுத்தது
உலகத்தை மறைப்பது நீ தானா
நிழலெது நிஜமெது உயிரை இழுத்தது
உலகத்தை மறைப்பது நீ தானா
யாரும் நீயானாயே கானல் நீரானாயே
பூந்தழல் ஆனாயே
போகும் நாளெல்லாமே மேகம் நீ இல்லையேல்
பாலைவனமாவேனே ஹே ஹே
(கனவென..)

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்

வரிகள்: ரோகிணி
பாடியவர்கள்: சுசித்ரா, ஹரிசரன்

Monday, August 23, 2010

நந்தி - மயங்கினேன் மயங்கினேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்
மயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்
குழம்பினேன் குழம்பினேன் இன்று குழம்பிய முகத்தை அலம்பினேன்

என் உலகம் உன் காலடியில்
என் பொழுது விடியுது உன் புன்னகையில்
என் கனவுப் பெறுகுது உன் கண் அசைவில்
என் காலம் நகருது உன் கைப்பிடியில்
(மயங்கினேன்..)

மண் குடிசைத்திண்னையில அடியே ஆசையில் பேசுற நேரம்
தாஜ்மஹால் போல மாறிப்போகும்
உச்சி வெயில் குத்தயில உன்ன உசுருல நெனச்சாப்போதும்
சித்திரையும் மார்கழியா பனித்தூவும்
கள்ளிச்செடியில் மல்லிகைப்பூக்கும் உன் விரல் பட்டாலே
அடி மலட்டு மேகமும் மழையைத்தரும் உன் முகம் பார்த்தாலே
மிட்டாய் கிடைத்த பள்ளிச்சிறுமி ஆனேனே
அடுத்த வீட்டில் மறதியில் கோலம் போட்டேனே
(மயங்கினேன்..)

தேரடியில் நீ இருந்தால் நெஞ்சோ தண்டிச்சுமக்க நினைக்கும்
என்னைக் கண்டு நீ ஒழிஞ்சா அது புடிக்கும்
ஓ ஊர் அணையில் நீக்குளிச்சா
ஆம்பள மீன்களும் பேரணி நடத்தும்
வீடு வரைத் தேடி வந்து ஒன்ன கடிக்கும்
எவளும் கண்டு போய்விட மாட்டாள் உன்னை களவாடி
உன்னைப் பத்திரமாக பூட்டி வைத்தது என் மன அலமாரி
உமுதககட்டுப் புழுதியாகப் பறந்தேனே
உன் கழுத்து ஓர மச்சத்தோடு கலந்தேனே
(மயங்கினேன்..)

படம்: நந்தி
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி
வரிகள்: முத்து விஜயன்

Sunday, August 22, 2010

நந்தி - இதுதான் காதல் என்பதா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இதுதான் காதல் என்பதா இதயம் மாறிச்செல்வதா
இதுதான் காதல் என்பதா இதயம் மாறிச்செல்வதா
பாதை மறந்து நின்றேன் பாஷை மறந்து நின்றேன்
என்னை மறந்து நின்றேன்
உன்னை மணந்துக்கொண்டேன்
இதுதான் காதலா காதலா காதலா
(இதுதான்..)

முதல் நாள் முதல் நாள் தூரத்தில் பார்த்தேன்
உறக்கம் பறித்து ஒழிந்துக்கொண்டாயே
மறுநாள் மறுநாள் அருகினில் பார்த்தேன்
கனவுகள் எனக்குப் பரிசலித்தாய்
உன் மூச்சு என் தேகம் உன் பேச்சு என் வார்த்தை
என் கண்கள் உன் பார்வை என் நெற்றி உன் வேர்வை
உனதா எனதா காதல் நமதே நமதா
அட உன்னால் இந்நாள் பொன் நாள்
இனி எல்லா நாளும் நந்நாள்
உனை என்னிடம் டஹ்ருவது எந்நாள்
அந்நாள் நந்நாள் எந்நாளோ
(இதுதான்..)

பசியும் வலியும் எவருக்கும் பொதுவே
உணர்ந்தேன் உணர்ந்தேன் உன்னாலே
அதுப்போல் அதுப்போல் காதலும் என்பதை
அறிந்தேன் அறிந்தேன் உன்னாலே
நீ நடந்தாய் நான் தொடர்ந்தேன்
நீ விழுந்தாய் நான் உடைந்தேன்
நீ மலர்ந்தாய் நான் உதிர்ந்தேன்
நீ முறைந்தாய் நான் மறித்தேன்
இறைவன் இறைவன் உன்னை எனக்கே படைத்தான்
உன்னை பார்த்திடும் நொடியில் என் உலகம் இரவிலும்விடியும்
நீ என்னை கடக்கும் பொழுது நொடியும் மணியாய் நகரும்
(இதுதான்..)

படம்: நந்தி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: முத்து விஜயன்

Saturday, August 21, 2010

பலே பாண்டியா - கண்ணோடு இல்லையே



கண்ணோடு இல்லையே கண்ணீரின் திவலைகள்
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி
நென்ச்ஜோடு இல்லையே நான் கொண்ட கவலைகள்
ஹாப்பி என்றுமே ஹாப்பி
உனக்கெது சரி அதை அனுசரி தினசரி ஹாப்பி
ஹோஹோ ஹோ ஓர் பறவை
ஹோ ஹோ ஹோ ஒரே நாள்
ஹாப்பி சோ ஹாப்பி
வான் வெளியில் மேகமே நான்
ஹாப்பி ஐயோ ஹாப்பி

ஏஹே சுடிதாரு நிலவு சுகுணாவை புடிச்சிட்டா
ஹாப்பி ஐயா ரொம்ப ஹாப்பி
புடிச்சிட்டேன் பார்த்தியா

டாஸ்மார்க்கு கடையில டைமிங்க குறைச்சாச்சு ஹாப்பி
யோவ் வீட்டுக்கு வாயா
என் வீடு ஹாப்பி

இருக்கின்ற வரை இளமையின் மழை
தினம் தினம் ஹாப்பி
சூப்பர் ஸ்டார் படத்து ஃபஸ்ட்டு ஷோ டிக்கட்டு
ஹாப்பி கண்ணா ஹா ஹா ஹாப்பி
நாம் ரஹி நாங்கதான்
என்றுமே ஒன்றுதான்
ஹாப்பி நாங்க ஹாப்பி

அடுத்தாத்து மாமாதான் ஊழல்ல மாட்டிண்டுட்டார்
ஹாப்பி நேக்கு ரொம்ப ஹாப்பி ஏன்னா
போங்க மாமி

என் ஐடி கம்பெனி
பிராப்ளத்துல சிக்கலையே ஹாப்பி
சத்யமா ஹாப்பி
ஹேய் ஏறுனாலும் என்ன எறங்கினாலும் என்ன
எனக்கென்ன ஹாப்பி

அழுக்குல குளிக்கிறேன் என் புள்ள படிக்கத்தான்
ஹாப்பி நைனா ஹாப்பி
ஹாலிவூடா கோலிவுடா நான் தொடாத நடிகையா
ஹாப்பி மச்சி ஹாப்பி
ஏ டென்ஷன்கள் எதற்கு பென்ஷன்கள் கொடுத்திடு
ஹாப்பி ஆல்வே ஹாப்பி ஏஹே

ட்ரஸ்கோடு இல்லையே இஷ்டம்போல் தாங்கலாம் ஹாப்பி
ச்சான்சே இல்லடி
சூப்பரோ ஹாப்பி
ஹேய் எங்க பாய்ஃபிரண்ட் க்ரெடிட் கார்ட் கொடுத்திருக்கான் ஷாப்பிங் போகலாம்
கண்டகண்ட படி தள்ளு தள்ளு படி
கண்ணா பின்னா ஹாப்பி

ஊருசனம் வம்புலத்தான் நம்முடைய சேட்டன்கள் புழப்புதான்
ஹாப்பி சிம்ப்ளி ஹாப்பி
பெட்ரோல் வெணாம் டீசல் வேணாம்
என் வண்டியை ஓட்டத்தான்
ஹாப்பி ஆட்டோ ஹாப்பி

எனக்கென்ன பயமா எதிர்நீச்சல் அடிப்பவன் ஹாப்பி
ஜெயித்துவிடு ஹாப்பி ஹாப்பி
என்னோடு கணக்கை நான்ந்தானே முடிப்பவன்
ஹாப்பி ஹாப்ப்பி
ரொம்பவே ஹாப்பி

நினைக்கின்ற கணம் நடக்கட்டும் கணம்
பிறகிது ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
வெற்றியெல்லாம் கையிலதான்
சந்தோஷம் பையிலதான்
ஹாப்பி லெட்ஸ் பீ ஹாப்பி
இன்பங்களோ துன்பங்களோ
எல்லாமே கையிலதான்
ஹாப்பி கம்மான் ஹாப்பி

வானம் ஹாப்பி
பூமி ஹாப்பி
பூக்கள் ஹாப்பி
ஈக்கள் ஹாப்பி
நதிகள் ஹாப்பி
மீன்கள் ஹாப்பி
மரங்கள் ஹாப்பி
பறவை ஹாப்பி
குடிசை ஹாப்பி
கோயில் ஹாப்பி
அம்மா ஹாப்பி
குழந்தை ஹாப்பி
நீயும் ஹாப்பி
நானும் ஹாப்பி
ஐ அம் சோ ஹாப்பி

படம்: பலே பாண்டியா
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடியவர்கள்: ஹரிசரண், தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன், மலேசிய வாசுதேவன், அனுராதா ஸ்ரீராம், பறவை முடியம்மா, ஸ்ரீநிவாஸ், முகேஷ், மாணிக்க விநாயகம், ரஞ்சித், சின்மயி, ராகுல் நம்பியார், மால்குடி சுபா, சுசித்ரா, விஜய் ஜேசுதாஸ், திவ்யா, அனிதா, ஆலாப் ராஜு

Friday, August 20, 2010

கனிமொழி - தடத்தடவென்று



தடத்தடவென்று ஹேய் படப்படவென்று ஹேய்
ஒரு லப்டப் லப்டப் சத்தம்
உன் காதில் கேட்டுக்கத்தும்
மடமடவென்று ஹேய் முடிவெடு என்று ஹேய்
அடி டிக் டிக் டிக் சத்தம்
என் கடிகாரத்தில் யுத்தம்
ஆசை பதில் வருமா நான் காத்துக்கிடக்கின்றேன்
உயிரே உன்னால் என் உயிருகுள்ளேப் போராட்டம்
கனவே உன்னால் என் கனவுக்குள்ளேப் பனிமூட்டம்
(தடத்தட..)

காதலின் பேரின்பமே கனவுடன் நாம் இருப்பதேண்
காதலின் பெறும் துன்பமே கனவுடன் நாம் இருப்பதேன்
காதல் ஒரு ரோஜாச் செடி முள்களில்லா அது ஏதடி
முள்ளிலும் ஒருப் பனித்துளி
மெல்ல சத்தம்மின்றி முத்தமிடுதே ஓ
(தடத்தட..)

வாழ்க்கையே எதிர்ப்பார்த்ததும் கிடைக்குமோ எனும் கேள்விதான்
நினைத்ததை தினம் நினைக்கையில் நிறைவேறிடும் நம் வேள்விதான்
காதலே இந்தக்காதலே என்றுமே புதிர்தானடி
புதிரிலும் ஒரு புது வழி
மெல்ல கைப்பிடித்து அணைத்திடுதே
(தடத்தட..)

படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்கள்: சதீஷ் சக்கரவர்த்தி, க்ளிண்டன், லியோன் ஜேம்ஸ்
வரிகள்: பா. விஜய்

Thursday, August 19, 2010

கனிமொழி - பெண்ணே போகாதே



பெண்ணே போகாதே நெஞ்சம் தாங்காதே
நீ என்னை கடந்துப்போகையில்
என் உள்ளே நடந்துப்போவதேன் ஹோ
(பெண்ணே..)

பூச்செண்டில் பூவைப்போல் நெஞ்சம் மாறிப்போகுது
என்ன நான் செய்ய
அவள் கையில் தந்திடு தடையில்லை
ஓ ஓ ஐயோ என் ரசனை எல்லை மீறிப்போகும்
என்ன நான் பண்ண
கவிதைக்குக் கொட்டிட வழியில்லை
ஓ பெற்றோர்கள் நண்பர்கள் யாரும் பிடிக்கவில்லை
எங்கு நான் போக
அவள் வீட்டை சுற்றி வா கனி இல்லை
(பெண்ணே..)

ஐஸ்க்ரீமில் சிக்கிய செர்ரி போலி காதல் இன்னொரு கையில்
அப்படியே சாப்பிடு முழுதாக
வாழ்விடோ போல கனவில் வருகின்றாளே
என்ன நான் செய்ய
பார்த்துக்கோ அவளை உயிராக
ஓ வானத்தின் எல்லையைத் தாண்டி ஓடிப்போகும்
என் இமைத்தூக்கம்
உறங்காமல் சுற்றிவா தனியாக
(பெண்ணே..)

அவள் கண்கள் பார்க்கும்போது
ஏதோ செய்யும் கண்கள் மூடினால்
தூங்கும் போதும் ஏதேதோ செய்யும்
அவள் பார்க்கும்போது வார்த்தை வராமல்
பார்வை விடாது அழகில்
அவள் போகும்பாதை சோலையாகும்
சாலையாகாது ஹோ
(பெண்ணே..)

படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்: க்ளிண்டன், சாம் கீர்த்தன், திமோதி மதுகர்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, August 18, 2010

கனிமொழி - முழுமதி முழுமதி நிலவைக்கேளடி



முழுமதி முழுமதி நிலவைக்கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என்போல் யாரோடியோ ஓ
எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவைக்கேட்டது
என்போல் யாருமே இல்லை என்றது கேள் ஒஹோஒஹோ..

நிலவுக்கு நிலவுக்கு அன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றேப் புரிந்தது
கனவுக்கனவுக்கு சிறகுகள் முளைக்குதே
நிலவினை உரசிவிட நினைவுகள் பறக்குது
(முழுமதி..)

காவியக்காதல் ஆயிரம் கதைகள் பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதைத் தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்
தனிமைக்குத் தனிமை தந்தேனே தந்தேனே
(முழுமதி..)

நதி என் காதலை கரையிடம் வந்து அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அலையிடம் அதனை கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலவிதைப்பார்த்து
வெளிச்சத்தை அள்ளி சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தைப்பிரிந்து செல்லாதோ செல்லாதோ
(முழுமதி..)

படம்: கனிமொழி
இசை: சதிஷ் சக்கரவர்த்தி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், பெல்லா ஷெண்டே
வரிகள்: பா. விஜய்

Tuesday, August 17, 2010

கனிமொழி - யாரோ இவள் இவள் யாரோ



யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ
(யாரோ..)

என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ
உன் காதல் நீ சொல்லடா ஏன் இந்தக் கூச்சம்
தன் காதில் நான் சொன்னதை பூங்காற்றுமே போய் சொல்லுமோ
வேண்டாம் உன் தூண்டாடுதே ஓர்ப்பார்வை போதும்
உன் பார்வை கல்லாகுதே என் கால்கள் தள்ளாடுதே
கொண்டாடு கொண்டாடு அன்பே
தேணுண்ட வண்டாகிறேன்
நீ தூண்ட தேன் ஆகிறேன்
கொண்டாடு திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)

காற்றோடு நான் கேட்கிறேன் உன் வாசனை மூச்சாகுமோ
உன் சுவாசக்காற்றோடுதான் என் வாசம் விடும்
கனவோடு நான் கேட்கிறேன் உன் காலடி தினம் கேட்குமோ
கனவென்னை நிஜமாகவே என் கைகள் தீண்டும்
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே
கொண்டாடு கொண்டாடு அன்பே
ஒருப்பிள்ளை அணைப்போடுதே மறுப்பிள்ளை எனைக்கூறுதே
கொண்டாடி திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)

படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்: முகேஷ், பெல்லா செண்டே, பார்த்தீவ் கோகில்
வரிகள்: நா. முத்துக்குமார்

Monday, August 16, 2010

சிங்கம் - என் இதயம் இதுவரை துடிக்கவில்லை



என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே
(என் இதயம்..)

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்
தாவனி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம்..
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய் படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே உன்னை கண்டு விழித்தேன்
(என் இதயம்..)

படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுசித்ரா

Sunday, August 15, 2010

மாஞ்சா வேலு - உன்னை நெனச்சா



உன்னை நெனச்சா உதறல் எடுக்கும்
உயிரின் மேலே சாறல் அடிக்கும்
லட்சம் பேரின் மனசைக் கடிக்கும்
இருந்தும் அதுதான் எனக்குப் புடிக்கும்

எப்படித்தான் மொறச்சிப்பேசினாலும்
உன் மேலே எனக்கு இல்ல கோபம்
உன் அருகே நிழலா வர தாகம்
அடி தரை வரைப் புறலும் பளப்பளப்பினால்
அழகிய கருநாகம்
உன் பார்வைக்கிடைத்தால் அது யோகம்
(எப்படித்தான்..)

என்னை வரச்சொன்ன அந்த நொடி
என் உயிர் ஆனது ரெடி
அடி இருந்தாலும் ஒரு குறும்பாக
அதை விருப்பாததாய் நடித்தேனே
விளையாடினால் வினையாகுமா பூவே
ஒரு நடுநிசை இரவிலும்
அழைத்துப்பாரு அருகே இருப்பேனே
என்னோட தொழிலே அதுதானே
தெரு உலா செல்லுகிற நிலா
உன் உடல் தாங்கி தேன் பலா
என் உயிர் வேறு உந்தன் உயிர் வேறு என
ஒரு நாளும் நான் நினைப்பேனா
எதத்தாங்கும் உனை நீங்கவே மாட்டேன்
அதில் சிரிப்பொலிக்கலந்து சிணுங்கும் பொழுது
சிதறி விழுந்தேனே
உன் கூந்தல் பிடித்து எழுவேனே
(எப்படித்தான்..)

படம்: மாஞ்சா வேலு
இசை: மணிஷர்மா
பாடியவர்: ராகுல் நம்பியார்

வந்தே மாதரம் - ரஹ்மான்



வந்தே மாதரம் வந்தே மாதரம்

இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் சுற்றி சுற்றித் திரிந்தேன்
சின்ன சின்ன பறவை போல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டு பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய் போனதே உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களை பரிசளித்தாய்
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியாய் பொங்குதே

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞர்கள் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடி போல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்


ஆல்பம் : வந்தே மாதரம் (1997)
இசை : ரஹ்மான்
குரல் : ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து

Saturday, August 14, 2010

மாஞ்சா வேலு - ஊரில் உள்ள உயிர்களெல்லாம்



ஊரில் உள்ள உயிர்களெல்லாம் உறவாலே வாழுது
உறவில்லாத வாழ்க்கை என்றும் உதவாமல் போவுது
நண்பர்கள் போலவே நாளெல்லாம் பேசுங்கள்
உறவு என்னும் பாடல் ஒன்று ஓயாமல் பாடுங்கள்
(ஊரில்..)

சிறு சிறு மனஸ்தாபம் வரும்
சிவந்த கண்ணில் கோபம் வரும்
உறவுகள் அதில் போனதில்லை
வானம் இரண்டு ஆவதில்லை
தூறல் நின்னுப்போனப்பின்னும்
தூவானம் சிரித்திருக்கும்
சின்னச்சின்னப் பூசல்களும்
சில நேரத்தில் தீர்ந்துவிடும்
(ஊரில்..)

தினம் தினம் ஒரு புன்னகையை
இதழின் ஓரம் பொங்கிவிடு
புதுப்புது விதப்பொற்க்கனவை
இமைகள் ஓரம் தங்கிவிடு
அன்பு என்னும் மந்திரத்தை
அதிகாலையின் ஓதிவிடு
ஒற்றுமைக்குக் கேடு வந்தால்
உதவாதென ஒதுக்கிவிடு
(ஊரில்..)

படம்: மாஞ்சா வேலு
இசை: மணிஷர்மா
பாடியவர்: கார்த்திக்

Friday, August 13, 2010

எந்திரன் - பூம் பூம் ரோபா டா




பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ஐசக அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ

ஹே ரோபோ... ஹே ரோபோ...
ஹே இன்பா நண்பா come -on Lets Go

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

ரோபோ நீ அஃறிணையோ
சிட்டி நீ உயர்திணையோ
மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்
வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர் தான் உண்டு திமிரே இல்லை

சிக்கி முக்கி அக்கினி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனே
ஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...
எங்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ எங்கள் பிள்ளையோ

சிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோ

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல் கிடையாதோ?

ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்
காதலன் இதுபோல் அமையாதோ?
தவமின்றி வரங்கள் தருவதனால்
மின்சார கண்ணனோ?

ஆட்டோ ஆட்டோக்கார - ஏ
ஆட்டோமெட்டிக்காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோகிராப்க்கா

பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா
பூம் பூம் ரோபா டா ரோபா டா
ஜும் ஜும் ரோபா டா ரோபா டா

படம் : எந்திரன் (2010)
இசை : ரஹ்மான்
வரிகள் : கார்க்கி
பாடியவர்கள் : கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோகன், தன்விஷா, யோகி.B

எந்திரன் - கிளிமஞ்சாரோ


கிளிமஞ்சாரோ - மலைக்
கணிமாஞ்சாறோ - கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ - அடி கின்னிக்கொழி
அப்பப்போ - யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை - ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ - நான் கின்ணிக்கோழி
அப்பப்போ - எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோ நீ

படம் : எந்திரன்
இசை : ரஹ்மான்
வரிகள் : பா. விஜய்
பாடியவர்கள் : சின்மயி, ஜாவித் அலி

களவாணி - ஊரடங்கும் சாமத்துல நான்

நகல் :




அசல் :



ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்துல உன் நினப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சலசலக்கும் ஓலையெல்லாம் உஞ்சிரிப்பு
பொரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நினப்பு
பாவி மகன் உன் நினப்பு.

(ஊரடங்கும் சாமத்துல….)

வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டா
வாங்கித்தர ஆச வெச்சேன் - காச
சுள்ளி வித்து சேத்து வெச்சேன்
சம்புகனார் கோயிலுக்கு
சூடம் கொளுத்தி வெச்சேன் - போறவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன் - நான்
பேச்சையெல்லாம் கேட்டு வெச்சேன்

ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு செவந்திடுமே
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்
ஒம்மேல ஏக்கம் வந்து என் தூக்கமெல்லாம் போச்சு மச்சான்

(ஊரடங்கும்….)

கழனி சேத்துக்குள்ள கள எடுத்து நிக்கையிலே
உன் சொத்த பல்ல போல ஒரு சோழி ஒன்னு கண்டெடுத்தேன்.
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையிலே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே
களையெடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு பேசினாரே

கருவேல முள்ளெடுத்து கள்ளி செடியிலெலாம்
உம்பேரு எம்பேரு ஒருசேர எழுதினமே
ஊருணி கரையோரம் ஒக்காந்து பேசினமே
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…
ஊருகாரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே…

ஊரு என்ன சொன்னாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே - அந்த
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…
வார்த்தையில நான் இருக்கேன்… வாக்கப்பட காத்திருக்கேன்…

படம் : களவாணி
பாடியவர் :அசல் - கிருஷ்ணசாமி, நகல் - செந்தில்வேலன்
இசை : SS குமரன்
வரிகள் : பிரளயன் (இணையத்தில் பல இடங்களில் நா. முத்துகுமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)


நன்றி : சித்தார்த் (பாடல் வரிகளுக்கு)

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்



படம்:மிட்டாய் மம்மி
பாடியவர்கள்:டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
நடிகர்கள்: ஜெய்சங்கர்,கே.ஆர்.விஜய
தாயாரிப்பு:ராசி ப்ரொடொக்ஸன்
இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

பூரண பொற்குடம் யேந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
பூஜைக்குப் போகும் வேளையிலே அவள்
பூமியை மறந்து வந்தாள்
ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர்கலை கூற வந்தாள்
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

பனிமுஹில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்
அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

வரிகள் உதவி-நன்றி ஸ்ரீ தூள்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA

ஈரமான ரோஜாவே என்னை



ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே (2)

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

படம் : இளமை காலங்கள் (1983)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜேசுதாஸ்
வரிகள் : வைரமுத்து

சிங்கம் - சிங்கம் சிங்கம்



Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing. Alright

ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்த எல்லை தாண்டும் காற்றிவன்
காட்டை எறிக்கும் நெருப்பிவன்
கைப் பட்டால் கொதிக்கும் நீர் இவன்

Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him
He Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹேய் சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
ஐம் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்

ஹேய் ரௌடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும் இருக்கும்
காவல்துரை ட்ஏர்ந்தெடுத்து சிங்கத்தைதான் அனுப்பும் ஜெயிக்கும்
வீரம் அது இதுதானோ
சூரம் இரு விழிதானோ
தீரன் அது இவந்தானோ
மாயவனோ..

பார்க்கும் அது படித்தானோ
காக்கும் இரு கைதானோ
நீக்கம் தனி வழிதானோ
நிரந்தர பயம் இவனோ

சிங்கம் சிங்க He is துரை சிங்கம்
இவன் பார்த்தால் போதும் இடியும் இறங்கும்

வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகயாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதானோ
ரத்தம் ஒரு மைதானோ
யுத்தம் அது மெய்தானோ
போர்க்களமோ..

சுற்றும் புவி இவந்தானோ
தட்டும் கடல் அலைதானோ
முற்றும் பகை அழிப்பானோ
மானிடன் அவன் இவனோ

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
Come On Yeah..
இவன் நின்றால் போதும் நகரம் நடங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
சிங்கம்..

படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: தேவிஸ்ரீ பிரசாத்

Thursday, August 12, 2010

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

(நீ இல்லாத )

முதன்முதலில் தொடும் வரை தினம் நான் எங்கோ
விரல் நுனிகள் படும்வரை விழி தான்தூங்க
காவியம் பாடும் காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

(நீ இல்லாத)

எது வரையில் சுகம் என அதை காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என அதை நான் சேர்வேன்
ஏங்கிடும் போது எண்ணம் தானாட
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை


திரைப்படம் : இளமைக்கோலம்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், ஜென்சி
பாடல்வரிகள் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

நான் மகான் அல்ல - தெய்வம் இல்லையெனும்போது



தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
இதுவரையில் எதைக்கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல்
துயரம் இதை நான் கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
(தெய்வம்..)

ஒரு நாள் எனை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்குப் பார்ப்பது ஓ
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய
மனமே உனை எதைத்தந்து மேய்ப்பது
அழுதிடக்கூடாதென்று அறிவுறை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தரத் தூக்கம் என்ன ஆண் தாயே
(தெய்வம்..)

உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய்
அது என்ன ஆனது ஓ
தலைமேல் சுமை இருந்தாலும் புன்னகை
தருமே இதழ் அது எங்குப்போனது
நடந்திடப்பாதம் தந்து வழிக்காட்டினாய்
நடுவிலே முந்தி சென்றாய் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்கினாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்
(தெய்வம்..)

படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: யுகபாரதி

Wednesday, August 11, 2010

அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை

அடிப் பெண்ணே

பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசையென்ன

பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடு ம் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை
மீனாடும் சிறு மேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாளோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே





பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
திரைப்படம் : முள்ளும் மலரும்
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்

வம்சம் - என் நெஞ்சே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே

எட்டுக்கண்ணு காளைமேல் நேத்து
உனக்காக காத்திருந்தேன் பாத்து
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து

வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
(என் நெஞ்சே..)

விழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப்போச்சே
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே
தெரிஞ்சுப் பழக்கமாச்சே
ஹே யாரோ பார்த்துப்பேசும் போது
நீயே வந்துப்போர
ஹம் மஞ்சப்பூசம் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சு மாராப்பு
அட கிறுக்கா..
அடி கிறுக்கி..
அட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து
பாதம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ..
(என் நெஞ்சே..)

அதுக்குள்ல அள்ளிப்பூவுப் பார்க்க
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே
கெழக்கு வழக்கு என் திசை தெரியாம
கிறுக்குப்பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ காலை மாலை மூனு வேளை
மூளை கெட்டுப்போச்சினா
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி
(என் நெஞ்சே..)

படம்: வம்சம்
இசை: தாஜ் நூர்
பாடியவர்கள்: ஆனந்து, பிரியதர்ஷினி
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, August 10, 2010

வம்சம் - உசுரே என் உசுரே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உசுரே என் உசுரே என் உசுரே
உசுரே என் உசுரே என் உசுரே
என் உசுரை ஏண்டா கலைச்சுப்புட்ட
அட என்ன வார்த்தை சொல்லிப்புட்ட
அட என்ன வார்த்தை சொல்லிப்புட்ட

உசுரே என் உசுரே
உசுரே என் உசுரே
உசுரே என் உசுரே
உசுரே என் உசுரே

நீப்போகும் பாதை எல்லாம்
என்னைத் தூவித் தூவி வச்ச
வழித்தேடும் திசை எல்லாம்
எந்தன் மூச்சும் தொறந்து நின்ன
நீ என்னை மறக்க உள்ளம் தாங்காதே ஹோ
என் உயிரே மறந்து என்னால் ஆகாது
உசுரே என் உசுரே
உசுரே என் உசுரே

ஒத்த வார்த்தை உசுர அள்ளி
இங்குப்போகும் பாதைப்பார்த்தேன்
நெஞ்சுக்கூட்டில் காட்டும்
என்னைத் தெச்சுப்போகப் பார்த்தேன்
உன்னைக்கேட்டா நானும் என்னன்னு சொல்ல ஹோ
பதில் சொல்ல இங்கு உசுரே இல்ல
(உசுரே..)

படம்: வம்சம்
இசை: தாஜ் நூர்
பாடியவர்: சுர்முகி
வரிகள்: ஏக் நாத்

Monday, August 9, 2010

இரு பறவைகள் மலை முழுவதும்

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

(இரு பறவைகள்)

சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் (2)
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மானோடு
கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

(இரு பறவைகள்)

பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும்
இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலாலா லாலா லலல்லலா



பாடியவர் : ஜென்சி
இசை: இளையராஜா
பாடல்வரிகள் : கண்ணதாசன்
திரைப்படம் : நிறம் மாறாத பூக்கள்

ஒரு முறை வந்து பார்த்தாயா

ஒரு முறை வந்து பார்த்தாயா
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ......ஒரு முறை வந்து பார்த்தாயா

என் மனம் நீ அறிந்தாயோ
திருமகள் துன்பம் தீர்த்தாயா
அன்புடன் கையணைத்தாயோ

உன் பெயர் நித்தம் இங்கு
அன்பே...... அன்பே.............நாந்தான்
உன் பெயர் நித்தம் இங்கு
ஓதிய மங்கை என்று உனது மனம் உணர்ந்திருந்தும்
எனது மனம் உனைத்தேட
ஒரு முறை வந்து பார்த்தாயா..
நீ...ஒரு முறை வந்து பார்த்தாயா..

****
உனது உள்ளத்தில் உதயநிலவெனவே உலவிடம் பெண்ணும் பூத்தாட
பருவ வெள்ளத்தில் புதிய மலரெனவே மலர்ந்திடும் கண்ணும் கூத்தாட

நீண்ட நாட்களாய் நான் கொண்ட தாபம் காதல் நோயாக விளைந்திடவே
காலம் காலாமாய் நான் செய்த யாகம் கோப தீயாக மலர்ந்திடுவே

எழுந்தேன் ........,,,.இடைவரும் தடைகளும் உடைந்திடவே
நேசம் பாசம் நீங்கிடாமல் உனக்கென நீண்ட காலம் நெஞ்சம் ஒன்று துடிக்கையில்
ஒரு முறை வந்து பார்த்தாயா..
நீ...ஒரு முறை வந்து பார்த்தாயா....

தோம் தோம் தோம்.

ஒரு முறை வந்து பார்த்தாயா...........

தஜம் தஜம் தகஜம்

என் மனம் நீ அறிந்தாயோ..............

தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸஸாம மமாம ககாக ஸஸாம
தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸஸாம மமாம ககாக ஸஸாம

தத்தரிகிட தத் தோம்தரிக்கிட தீம்தத்தரிகிட ஜனுதக
தித்தில்லான தகதீம். தரிகிட .தித்தில்லான தகதீம் தரிகிட தனுஜ திமித தனுஜ திமித தரிகிட
தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸா நி த

அங்கன மா மெளலி மணி
திங்களாச்செ ச்சாரு ஷீமே.....
நாகவல்லி மனோன்மணி
ராமநாதன் தேடும் பாலே
மாணிக்க வாசகர் மொழிகள் நவிதேவி
மாணிக்க வாசகர் மொழிகள் நவிதேவி
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி....

தமிழக மாஹையும் சிங்கார ராணி நின்
பழமுதிர்கொஞ்சலின் சோலையாகி....

தமிழக மாஹையும் சிங்கார ராணி நின்
பழமுதிர்கொஞ்சலின் சோலையாகி...........


Get Your Own Hindi Songs Player at Music Plugin
படம் : மனுசித்ரதாழு (மலையாளம்)
பாடியவர் : ஜேசுதாஸ், சித்ரா
இசை : M.G .ராதாகிருஷ்ணன்

பாடலை விரும்பிக்கேட்டவர் .. கவிதா (வரிகளையும் அனுப்பி வைத்தார் நன்றிகள்)

கோரிப்பாளையம் - என்ன இந்த மாற்றமோ



என்ன இந்த மாற்றமோ
என் மனசு வலிக்குதே
கண்ணு ரெண்டும் காந்தமோ
என்ன கட்டி இழுக்குதே
உன் பூமுகத்தில்
என் தாய் முகத்தை
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுல் வரை நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ

சின்ன சின்ன புன்னகையில்
என்னை பறித்தாய்
வண்ண வண்ண கனவுகள்
கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில்
பெரிய காதலை
தந்தாய் அடி என் அன்பே
மெல்ல மெல்ல மனசுக்குள்
இடம் பிடித்தாய்
மின்மினிக்குள் மின்னல்போல்
ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில்
நினைவின் ஓரத்தில்
வந்தாயடா என் அன்பே
ஒரு பார்வை பார்க்கும் போதிலே
என் பாதம் வானம் ஏறுதே
மறு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம் தீருதே
என் கால் கொலுசு
உன் பேரை சொல்ல
நான் கேட்டேனே
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

சுற்றி உந்தன் முகமன்றி
ஏதும் இல்லையே
மற்றபடி வேற ஒன்னும்
தோணவில்லையே
உயிரை எடுக்கிறாய்
திரும்ப கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம்
நெற்றி பொட்டில் நேற்று வரை
காய்ச்சல் இல்லையே
நட்சத்திரம் பார்த்து நானும்
பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய்
நீச்சல் அடிக்கிறாய்
கொண்டாடுதே என் நெஞ்சம்
உன்னை பார்த்து கொஞ்சி பேச தான்
எந்தன் ஆசை தாவி ஓடுதே
உனை பார்த்து பேசும் நேரத்தில்
எந்தன் வார்த்தை ஊமை ஆகுதே
கண் பார்வை ரெண்டும்
சொல்லாதையா
உன் இதழ்கள் சொல்லு
நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ
(என்ன இந்த..)

படம்: கோரிப்பாளையம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: கார்த்திக், மதுமிதா
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, August 8, 2010

கற்றது களவு - இந்த வானம் இந்த பூமி நமக்காக

இந்த வானம் இந்த பூமி நமக்காக
இந்தக் காற்றும் இந்த மழையும் நமக்காக
எந்த ஊரும் சொந்த ஊரே நமக்காக
எந்த நாளும் நல்ல நாளே நமக்காக
விலகாத ஆசை கேட்காத ஓசை
புரியாத பாஷை நமக்காக
முடியாதக் கனவு விடியாத உறவு
நமக்காக நமக்காக ஹோ
(இந்த வானம்..)

நீ உன்னை மட்டும் என்றால் என்னை விட்டுப்போயி
நம் பொய்யும் கூட நன்மை செய்யும்
நெஞ்சுக்குள்ள வைய்யி

ஓஹோ இனி கண்ணைக் காணச்செய்யாமல்
கையை வீசிச்செல்லாமல் காலம் வந்து சேரும்
என்று நம்புவது சிக்கல்
ஒரு எல்லைக்கோடு இல்லாமல்
தப்பு ஏதும் செய்யாமல் நீ நீந்திப்போல ஆசைப்பட்டால்
கவிழ்ந்துவிடும் கப்பல்
தவறாலே பிறந்தது உலகம்
அதுதானே மனிதனின் சரீரம்
உயிர் வாழ நடப்பதுக்கலகம்
பொருள் திருடுவதும் திறமை என அறிந்து அறிந்து
திசை முழுவதையும் அளந்திடுவோம் பறந்து பறந்து
(இந்த வானம்..)

ஓ ஒருக்கட்டுக்காவல் நீங்காமல்
காதல் கொள்ள எண்ணாமல்
சட்டம் பேசி நிற்க்கும்போது கண்டுக்காது ஊரு
சிறு வட்டத்துக்குள் நிற்காமல்
நீதி ஞாயம் பேசாமல்
திட்டம் போட்டுத்தீங்க செஞ்சால் வந்து சேரும் பேரு
அலைப்பாயும் மனம் ஒரு குரங்கு
அதற்காக அனுதினம் பிறந்து
வழிமாறி இரசனையில் மொய்த்து
மனை உடைந்துவிடும் சிறு உளியில் அடிக்க
விதைத்து விதைத்து விடும் அனுபவங்கள் செழிக்க செழிக்க
(இந்த வானம்..)

படம்: கற்றது களவு
இசை: விநாயக் மனோகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம், ஹரிதா, லயா, சுப்ரியா

Saturday, August 7, 2010

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன



மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)
பாவை என் பதம் காண நாணமா (2)
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)
மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
இசை : கே.வி. மகாதேவன்
பாடியவர் : பி. சுசீலா
வரிகள் : கண்ணதாசன்

நலந்தானா நலந்தானா



நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா (3)

நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம் (2)
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்


படம் : தில்லானா மோகனாம்பாள் (1968)
பாடியவர் : பி. சுசீலா
இசை : கே.வி. மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்

வம்சம் - மருதாணி பூவப்போல


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள
(மருதாணி..)

விட்டு விட்டு வெயிலும் அடிக்குது
விட்டு விட்டு மழையும் அடிக்குது
காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது
தொட்டு தொட்டு பிடிக்குது
தூண்டில் போட்டு இழுக்குது
திட்டித் திட்டிக் காலு ரெண்டும் உன்னை தேடி நடக்குது

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
(மருதாணி..)

ம்ம்.. தட்டித்தட்டி நெஞ்சத்தொறக்குற
எட்டி எட்டி உள்ள குதிக்கிற
வெட்டி வெட்டி வேலை வெட்டி
மம்முட்டிய எடுக்குற
நெத்திப் பொட்டு மத்தியில சுத்தி வச்சி அடிக்கிற
இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவளா நடக்கிற

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
(மருதாணி..)

படம்: வம்சம்
இசை: தாஜ் நூர்
பாடியவர்கள்: முகேஷ், சுர்முகி
வரிகள்: நா. முத்துக்குமார்

விரும்பிக் கேட்டவர்: எமலாதித்தன்

Friday, August 6, 2010

எந்திரன் - புதிய மனிதா


புதிய மனிதா பூமிக்கு வா

எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு

எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா

நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கனையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்

நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஜான ஒலி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

Thursday, August 5, 2010

எந்திரன் - அரிமா அரிமா



இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இண்டஹ் எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்
ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
(அரிமா..)
(இவன் பேரைச்..)

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
(அரிமா..)
(இவன் பேரைச்..)

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்
(இவன் பேரைச்..)
(அரிமா..)

எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..

படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

Wednesday, August 4, 2010

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா

திரைப்படம்: வண்ணக்கிளி
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா

(சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா)

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா

கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு
நீ கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத் தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது ...குங்குமம்(?)
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகி விடாது
உனக்கு கொய்யாப் பழம் பறிச்சுத் தாரேன் அழுகை கூடாது

சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா


chinna pApA enga chella pApA - Vannakkilli-ORIGINAL | Music Codes

எந்திரன் - இரும்பிலே ஓர் இருதயம்




Arigaro Kuzaimasu

You want to seal my kiss
Boy You can't touch this
Everybody Hypnotic Hypnotic
Super Sonic
Super star can't can't can't get this

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு

கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா
I am a super girl
உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் இஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் உன்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

Watch me robot shake it
I know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
Shutdownனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேயத்தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முகம்
சர்ச்சை இன்றிக் கொள்வாயா
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போகச் சொல்வாயா
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

hEy Robo மயக்காதே
you wanna come and get it boy
Oh are you just a robot toy
I don't want to break you
Even if it takes to
kind of like a break through
you don't even need a clue
you be my man's back up
I think you need a checkup
I can melt Your heart down
May be if you got one
We doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலைச் சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ
(இரும்பிலே..)

படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், Kash n' Krissy
வரிகள்: கார்க்கி

Tuesday, August 3, 2010

எந்திரன் - காதல் அணுக்கள்


காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

Monday, August 2, 2010

சிங்கம் - ஒரு வார்த்தை மொழியாலே



ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
எனை உருகவைத்தாள்
ஒரு வார்வை வழியாலே என்னை நெருங்கவிட்டாள்
என்னை நெருஙக்விட்டாள்

ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

வெள்ளை வெள்லையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரிகிறேன்
அன்பே உன் காதலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்

He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart

நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கீறேன்
அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

படம்: சிங்கம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: ஷான், மேகா

Sunday, August 1, 2010

தில்லாலங்கடி - தோத்துப்போனேன் தோத்துப்போனேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தோத்துப்போனேன் தோத்துப்போனேன்
தூளாய் இப்போ தோத்துப்போனேன்
வெற்றிப்பாதம் வாடாதவன்
தோல்வின்னாலும் வாடாதவன்
தூரம் நீத் தோத்துப்பாரு
தோல்விதான் வாத்தியாரு
தோல்வியத்தடையா எண்ணாத மடையா
வெற்றிக்கு அது வேரு

அடத் தோத்தாலும் இனிக்கிதடா
உடல் கூத்தாடத் துடிக்குதடா
அடத் தோத்தாலும் இனிக்கிதடா
உடல் கூத்தாடத் துடிக்குதடா

ஏ வெற்றியில சிரிச்சாக்கா திமிரு மச்சி
அட தோக்கும் போது சிரிச்சாக்கா தில்லு மச்சி
ஜெயிக்கிறவன் மைனாரிட்டி
தோக்குறவன் மெஜாரிட்டி
இவன் ஓட்டுலதான் ஆளுங்கட்சி
வெங்காயத்தில் ஒன்னும்மில்ல உரிச்சிப்பார்த்தா
வெற்றிக்கூட வெங்காயந்தான் ஜெயிச்சுப்பார்த்தா
மனம் தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தர
தோல்விதான் எப்போதும் காந்தித்தாத்தா
ஏய் வெற்றிகள் தாழாது
நீ முந்துர அதைக்கேட்டு
ஏய் தோல்வியில் வருதே புதுப்புதுப்பாட்டு
அது செமப்பாட்டு
(தோத்தாலும்..)

ஏய் தூங்காமத்தான் நோம்பிருக்க முடியாதப்பா
கொஞ்சம் போகாமத்தான் வெற்றி வந்தா நிலைக்காதப்பா
வெற்றி மட்டும் ஆசப்பட்டா
தோல்விமேலே கோபப்பட்டா
நிச்சயமா அப்பம்பேரு காலியப்பா
உன் நண்பன் யாரு கண்டுகொள்ள தோத்தாப்போதும்
உன்னை ஒட்டி வந்த கெட்டதெல்லாம் காத்தா ஓடும்
சொந்தங்களை தேர்ந்தெடுத்து தப்பு ஆளா முரண்பாடு
தோல்விக்கு கோயிலே கட்டவேணும்
ஏய் ஜெயிக்கின்ற காதல் பாரு
அது கல்யாணம் ஆகிப்போகும்
பூக்கின்ற காதல் காலங்கள் தாண்டி காவியமாய் வாழும்

அட தோல்வியைக் கொண்டாடு
அது துணையாகும் உன்னோடு
அட தோல்வியைக் கொண்டாடு
அது துணையாகும் உன்னோடு

படம்: தில்லாலங்கடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
வரிகள்: விவேகா

Last 25 songs posted in Thenkinnam