பெண்ணே போகாதே நெஞ்சம் தாங்காதே
நீ என்னை கடந்துப்போகையில்
என் உள்ளே நடந்துப்போவதேன் ஹோ
(பெண்ணே..)
பூச்செண்டில் பூவைப்போல் நெஞ்சம் மாறிப்போகுது
என்ன நான் செய்ய
அவள் கையில் தந்திடு தடையில்லை
ஓ ஓ ஐயோ என் ரசனை எல்லை மீறிப்போகும்
என்ன நான் பண்ண
கவிதைக்குக் கொட்டிட வழியில்லை
ஓ பெற்றோர்கள் நண்பர்கள் யாரும் பிடிக்கவில்லை
எங்கு நான் போக
அவள் வீட்டை சுற்றி வா கனி இல்லை
(பெண்ணே..)
ஐஸ்க்ரீமில் சிக்கிய செர்ரி போலி காதல் இன்னொரு கையில்
அப்படியே சாப்பிடு முழுதாக
வாழ்விடோ போல கனவில் வருகின்றாளே
என்ன நான் செய்ய
பார்த்துக்கோ அவளை உயிராக
ஓ வானத்தின் எல்லையைத் தாண்டி ஓடிப்போகும்
என் இமைத்தூக்கம்
உறங்காமல் சுற்றிவா தனியாக
(பெண்ணே..)
அவள் கண்கள் பார்க்கும்போது
ஏதோ செய்யும் கண்கள் மூடினால்
தூங்கும் போதும் ஏதேதோ செய்யும்
அவள் பார்க்கும்போது வார்த்தை வராமல்
பார்வை விடாது அழகில்
அவள் போகும்பாதை சோலையாகும்
சாலையாகாது ஹோ
(பெண்ணே..)
படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்: க்ளிண்டன், சாம் கீர்த்தன், திமோதி மதுகர்
வரிகள்: நா. முத்துக்குமார்
0 Comments:
Post a Comment