Sunday, August 29, 2010

வெண்ணிலா வெளியே வருவாயா



வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவியா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொலி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்துவிடு
உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்றுவிடு
(வெண்ணிலா..)

ஹே புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா
அதை நீயே மறந்தாயே கோடி பூவே ஹேஹே
உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான்
விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான் ஓஹோ
(வெண்ணிலா..)

ம்ம்.. கண்களை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கிக் கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா
என் அன்பே என் அன்பே என் அன்பே ஹேஹே
காதலி காதலி கனவுகள் தோன்றாதா
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஓஹோ
(வெண்ணிலா..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

3 Comments:

சென்ஷி said...

பிடித்தபாடல்.. முன்பொரு காலத்தில் சுந்தர், கார்த்திக் கூட்டணியில் ஓரளவு கேட்கக் கூடிய அளவில் பாடல் வந்துகொண்டிருந்தது. யுவன் சங்கருடன் சுந்தர் இணைந்த முதல் படம் என்று நினைக்கின்றேன். இதனுடன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து கார்த்திக் ஹீரோவாய் நடித்த படமொன்று பாடல் வெளியீட்டுடன் நின்று போய்விட்ட நினைவு.

a said...

//
ம்ம்.. கண்களை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கிக் கொள்வேன்
//
பிடித்த வரிகள்....

Unknown said...

ஹரிஹரன் voice, yuvan music, nice lyrics

Last 25 songs posted in Thenkinnam