கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ
(கண்கள் ஒன்றாக)
வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்
(கண்கள் ஒன்றாக )
மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையைக்கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்
(கண்கள் ஒன்றாக )
ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா
(கண்கள் ஒன்றாக )
திரைப்படம் : சேரன் பாண்டியன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை: சௌந்தர்யன்
Saturday, October 29, 2011
கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:08 PM 1 பின்னூட்டங்கள்
Thursday, October 27, 2011
நீ கோரினால் வானம் மாறாதா
படம்:180
பாடல்: நீ கோரினால் வானம் மாறாதா
பாடியவர்: கார்த்தி,ஸ்வேதா
இசை: ஷரத்
எழுதியவர் : மதன் கார்க்கி
ந நன நன நன
நன நன
ந நன நன நன
நன நன நா
நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பின்னே ஓடாதே
தீயே ... இன்றியே...
நீ என்னை வாட்டினாய்...
உன் ஜன்னலை... அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே.....
ஓடும் ஓடும்
அசையாதோடும்
அழகியே..
ஓடும் ஓடும்
அசையாதோடும் ஓடும் ஓடும்
அழகியே....
ந நன நன நன
நன நன
ந நன நன நன
நன நன நா
நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா
கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா
என் மீதி பாதி பிம்பப் பூவே
பட்டுப்போகாதே
கண்டும் தீண்டிடா ஆ... ஆ......
நான் போதை ஜாதியா.ஆ... ஆ.....
என் மீதிப் பாதி...
பிம்பப் பூவே
பட்டுப்போகாதே.....
போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா...
உன் போதை ஊறும்
இதழின் ஓரம் ஓரம் ஓரம்
பருகவா....
ந நன நன நன
நன நன
ந நன நன நன
நன நன நா
நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா
ந நன நன நன
நன நன
ந நன நன நன
நன நன நா
நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:42 PM 0 பின்னூட்டங்கள்
வகை கார்த்தி, மதன் கார்க்கி, ஸ்வேதா
ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்?
படம் : 180
இசை : ஷரத்
பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப்
ஏஜேஏஜே
மனம் மறைப்பதேன்? ஏஜே
பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?…
நாடியைத் தேடி உனது
கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக் கூடா
வரம் வேண்டினேன்
அருகிலே வந்தாடும்
இருதயம் நின்றோடும்
திண்டாடும்
ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன் ஏஜே
மேல்விழும் தூறல் எனது
ஆசை சொன்னதா?
கால்வரை ஓடி எனது
காதல் சொன்னதா?
மனதினை மெல்வேனோ?
சில யுகம் கொள்வேனோ?
சொல்வேனோ?
ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன்?
ஏஜே
பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:18 PM 3 பின்னூட்டங்கள்
Sunday, October 23, 2011
என்ன தந்திடுவேன்
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை
என்ன தந்திடுவேன்... நான் என்னைத் தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன்... நான் உயிரைத் தந்திடுவேன்
நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
உன் ஆயுள் காலம் தீரும் போது என்னாயுள் தந்திடுவேன்
(என்ன தந்திடுவேன்
விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்
நீ கோபப் பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் வந்து நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்
நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்
(என்ன தந்திடுவேன்)
இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேன்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்
பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்
உன் நெற்றி வருடி கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்
படம்:- சதுரங்கம்
பாடியவர்கள் : கார்த்திக், ஸ்ரீலேகா
இசை: வித்யாசாகர்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:52 PM 1 பின்னூட்டங்கள்
வகை கார்த்திக், வித்யாசாகர், ஸ்ரீலேகா
Saturday, October 22, 2011
பிறை தேடும் இரவிலே உயிரே
பிறை தேடும் இரவிலே உயிரே
எtதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா (பிறை)
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை )
அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை )
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்,
நீ வரம் தரும் இதம்.
வரிகள் : தனுஷ்
இசை : ஜிவி.ப்ரகாஷ்
பாடியவர்கள் : ஜிவி .ப்ரகாஷ் , சைந்தவி
திரைப்படம் : மயக்கம் என்ன?
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:46 PM 0 பின்னூட்டங்கள்
வகை GV பிரகாஷ் குமார், சைந்தவி, தனுஷ்
Friday, October 21, 2011
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )
வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
(எங்கிருந்தோ )
காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினைத் தேடும் உயிர் இங்கே
ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...
இசை : இளையராஜா
திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர் : லதா மங்கேஷ்கர்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:14 PM 0 பின்னூட்டங்கள்
வகை இளையராஜா, லதா மங்கேஷ்கர்
Thursday, October 20, 2011
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு
உன் கை கோர்த்து
என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீப்பேச
உள்ளம் உருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்மடா..
இந்த ஜென்மம் தீரும்மடா..
ஒ..
(ஒரு மலையோரம் )
பெண்ணே முதல் முறை
உன் அருகிலே
வாழ்கிறேன்
போதும் போதும் விடு
உன் நினைவிலே தோய்கிறேன்..
என்னானது எந்தன் நெஞ்சம்
ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ..
உன் எதிரிலே... ஏ ஏ ஏ
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச
இந்த மயக்கம் போதும்மடி..
இன்னும் நெருக்கம் வேண்டும்மடி
ஓஓஹோ
ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு
உன்னைக் காணும் வரை
நான் கனவிலே
வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே
வாழ்கிறேன்..
என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும்
வெறுமையைக் கூட்டினாய்
உன் காதலிலே… ஏ ஏ ஏ
மனமது புகையினைப் போலே
மறைத்தது யாருமே இல்லையே
என்னுள்ளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதும்மடி..
எந்தன் வாழ்க்கை மாறும்மடி..
பெண்ணே..
திரைப்படம்: அவன் இவன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ்,பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீ நிஷா ,பேபி நித்யஸ்ரீ
வரிகள்:நா.முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 1:12 PM 0 பின்னூட்டங்கள்
Monday, October 17, 2011
நிழல் என்றும் தூரமானதில்லை
நிஜமென்றும் பாரமானதில்லை
மண்மீது நிலவு பூக்கும்
மாயையைப் போல
கண்முன்னே தோன்றும் காட்சி
நீ பாரு
கைக்கூடி வந்த காதல்
என்னாகும் கூறு
இதைக்கட்டிக்காக்கும் ஆளு
யார் பாரு
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
கண்களைத் திறந்தே கனவுக்காணும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
வானவில்லில் அம்புகள் தொடுக்கும் தான்
என்றும் எங்கும் எப்பொழுதும்
உன் பேச்சே - அட
என்னுடலில் இருக்குது என்னாச்சே
நீயும் நானும் ஒன்றே என்று ஆயாச்சு -அட
வெய்யில் கூட வெண்பனிய போலாச்சு
அப்படியா தோன்றுது உனக்கு - அட
அப்படியே காட்டடி எனக்கு
இவ்வுலகம் முழுவதும் நமக்கு -அட
வேறுலகம் தேவைதானா எதுக்கு?
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் தான்
நோயே தான் நோயே தான்
காதல் என்றும் நோயே தான்
உடலில் புகுந்து உயிரை வாட்டும் தான்
காதல் கொண்டால் விந்தைகளும் நிகழும்
அட அவ்வப்போது அச்சங்களும் திரளும்
காதல் கொண்டால் இப்படித்தான் இருக்கும்
அதில் அச்சம் மடம் நாணம் கூட இனிக்கும்
இதயங்கள் செய்கின்ற கலகம்
அட எப்பொழுதும் அமைதியாய் விலகும்
இதைத்தான் விரும்புது உலகம்
தினம் இப்படித்தான் காதல் வந்து பழகும்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உள்ளங்கையில் உலகைக் காட்டும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உருவம் இன்றி உயிரும் வாழும் தான்
(நிழல்)
http://tamildot.com/K/Kumaran/Tamilmp3world.Com%20-%20Nizhal%20Endrum.mp3 இங்கே முழுதுமாகப் பாடலைக்கேட்கலாம்..
பாடலைப்பாடியவர்கள்: ராமு?, வினயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : குமரன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 2:57 PM 0 பின்னூட்டங்கள்
வகை ராமு, வினயா, ஹாரிஸ் ஜெயராஜ்
Sunday, October 16, 2011
கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்?
கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?
உன் நெஞ்சின் உணர்வுகள்
இங்கு என்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ
சொல்லை எடுத்துத் தருவாய்
கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?
உனைப் பார்த்த கண்கள்
விலகாது எங்கும்
உன்னிலே பதியும்
சுழன்றாடும் கனவில்
சொல்லாது சென்று
சுகத்திலே அலையும்
யார்ரார்க்கு மண்ணில்
நிலைக்காது அழகு
காலத்தின் ஒழுங்கு
நீ எனக்குத் தந்த
நிலையான அழகில்
கூடுமோ வயது?
உன்னுடல் தனில்
என் உயிர்தனை
கலந்து என்றும் வாழ்வேன்
காலங்கள் நமை பிரிக்குமோ
சிலையோடு சேர்ந்து
கால நேரம் நின்றது
கல்லாய்
கல்லாய் இருந்தாய்
சிலையாய் உனை வடித்தேன்
என் கண்கள் கூறும்
நீ தந்த பாவம்
உனக்குத்தான் புரியும்
உன் நெஞ்சின்
உண்மை
சொல்லாமலிங்கு
எனக்குத்தான் தெரியும்
பரிமாறிக்கொள்ள
பரிபாஷை இங்கு
நமக்குத்தான் எதற்கு
உள் அன்புகொண்டு
உறவாடும் நம்மை
புரியுமோ பிறர்க்கு
ஆசையும் உளியின் ஓசையும்
எனது உயிரின் நாதமாகும்
காதலாய்
இதைச் சொல்லவா?
என்றும் அழியும் உலகில்
அழிந்துதிடாத உறவிது
கல்லாய் கல்லாய்
கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?
பாடலைப்பாடியவர்கள்: தான்யா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : இளையராஜா
திரைப்படம் : உளியின் ஓசை
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:09 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, October 15, 2011
மாப்பிள்ளை டோய் ! மாப்பிள்ளை டோய்!
இன்னிக்கு கர்வாச்சவுத் ஸ்பெஷல்.. :)
மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்
காப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
காப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்
சோப்பாலே மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோய்
சோப்பாலெய் மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோஸ்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்
மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கு அழகாகுமோ?
ஸா ரி ஸ்
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்
பாடலைப்பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா, பி.லீலா
படம். மனம் போல் மாங்கல்யம்
பாடலாசிரியர் : சுரதா
இசை: ஏ.ராமாராவ்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:32 PM 1 பின்னூட்டங்கள்
வகை A. ராமாராவ், AM ராஜா, P லீலா, சுரதா
Friday, October 14, 2011
மனதில் என்ன நினைவுகளோ
லாலலா லலாலா
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே
ஒன்றை விட்டு
ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
நடந்து முடிந்த கதையை மறந்து
புதிய வழியிலே லலாலா
புதிய வழியில் புதிய உறவில்
புதிய உலகிலே
செல்லுங்களேன்... செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
திரைப்படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், எஸ்.பி சைலஜா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:36 PM 1 பின்னூட்டங்கள்
Wednesday, October 12, 2011
வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
ஆஞ்சிலோ வண்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே (வெண்ணிற)
I have a dream கடல் காதல் ஆக்குமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ரோமின் சாலைகள்
I have a dream sky காதலை சேருமா
நாளெல்லாம் தேடினேன்
காதலைப் பாடினேன்
யாரென்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே
காதலின் சாலைகள்
பூமியைக் கோர்க்குமா
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வி ஏங்கி கேட்குமா
I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ஓ ஓ ரோமின் சாலைகள்
I have a dream I have a dream I have a dream
யாரோ நதியினில் போகும் வழிகளில்
எங்கும் உள்ளதே காதல்
ஒரு கூவம் கரையினில் ஆர்சிட் பூத்திடும் மாயம் செய்யுமே காதல்
vernes'இன் கடிதங்கள் keats'இன் கவிதைகள் எழுதசொன்னதே காதல்
நம் வான்கோ காதில் காதல் சொல்லிடு வரங்கள் தந்திடும் காதல்
I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ரோமின் சாலைகள்
I have a dream sky காதலை சேருமா
I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream roman சாலைகள்
I have a dream I have a dream I have a dream
படம்: பேசு
பாடகர்: யுவன் ஷன்கர் ராஜா
இசை : யுவன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:23 AM 2 பின்னூட்டங்கள்
Tuesday, October 11, 2011
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
சகரி மக பம தப
மபகம ரிகரிரிக மககா
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
உன் கோயில் எங்கும்
நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில்
உந்தன் நினைவை வார்க்கும்
நாள் தோரும் பாயும்
நாத வெள்ளம் நீயே
பாவாணர் நாவில்
மேவும் எங்கள் தாயே
உந்தன் பாதம் போற்றி
உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்
(ஸ்)வரங்கள் தாராயோ
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
பாட்டாலே மீரா
நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள்
கண்ணன் மனதை ஆண்டாள்
ஆண்டாளைப் போலே
பாவை ஒன்று பாடு
ஆண்டாண்டு காலம்
அன்பு தன்னை தேடு
தஞ்சம் நீயே என்று
நெஞ்சும் நாவும் நாளும் பாட
ஸ்வரங்கள் தாராயோ
(கை வீணையை )
திரைப்படம்: வியட்நாம் காலனி
பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்:வாலி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:18 AM 0 பின்னூட்டங்கள்
வகை இளையராஜா, பாம்பே ஜெயஸ்ரீ, வாலி
Monday, October 10, 2011
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)
பாடியவர் : இளையராஜா , பாம்பே ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா
திரைப்படம்: பாரதி
பாடல் வரிகள் : பாரதியார்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:53 PM 4 பின்னூட்டங்கள்
வகை பாம்பே ஜெயஸ்ரீ, பாரதியார்
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
திரைப்படம்: வெடிகுண்டு முருகேசன்
இசை: தீனா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : யுகபாரதி
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் பாதை )
வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை
பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் தேரை
இமையோ தூங்கினும் இதயம் தூங்கிடாதே
நடைபாதை தேங்கினும் நட்பு தேங்கிடாதே
வாசல் மீது கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறி போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் களங்கமில்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திறந்து பெறாமல் முழுதும் தருபவன் நீயே
(நீண்ட தூரம் போகும் பாதை )
ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ
நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னை தாங்கு
கனவே கண்களாய் மாறிப்போவதேனோ
வெயிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ
என்னில் நீயும் வாழ்வதாலே ஏது தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலை போலே நினைவில் சுதந்திரமாக
உறவில் தலைமுறை கூட உயிரில் நிரந்தரமாக
நீண்ட தூரம் போகும் பாதை ஊரை சேருமோ
நீல வானை சேர்ந்த மேகம் நீங்கி போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பை போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் )
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDHI0156'&lang=en
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:05 AM 1 பின்னூட்டங்கள்
வகை தீனா, பாம்பே ஜெயஸ்ரீ, யுகபாரதி
Sunday, October 9, 2011
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
ஆண் பிள்ளை முடி போடும் பொன் தாலிக்கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்
ஓலைக்குடிசையிலே இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா அது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
எல்லார்க்கும் தலைமேலே எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழையின் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா
குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 10:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
கனா ஒன்று கண்டேன் - நான்
கனா ஒன்று கண்டேன் - நான்
கனா ஒன்று கண்டேன்
என் முதுகுத்தண்டினில்
இறக்கை முளைத்து தான்
பறந்து போகக்கண்டேன்
கனா ஒன்று கண்டேன்
நிலா ஒன்று கண்டேன் -நான்
நிலா ஒன்று கண்டேன்
என் வீட்டு முற்றத்தில்
வீதியோரத்தில் நடந்து போகக்கண்டேன்
நீ யாரென்று தெரியாமல்
உன்னை ரசித்தேன்
உன் முகவரிகள் தெரிந்த பின்னே
உன்னுள் வசித்தேன்
உன் பார்வையிலே
காலிடறி உனக்குள் விழுந்தேன்
உன் புன்னகையின் கைபிடித்து
மீண்டும் எழுந்தேன்
விளையாட்டாய் பார்த்ததும்
விசுக்கென்று பூத்ததும்
தவறென்று தோணவில்லையே
ஓ அழகான பெண்ணையும்
ஆணான என்னையும் இப்போது
காணவில்லையே
ஒருநாளும் எனை நீயும் விட்டுப்போகாதே
ஒரு நாளும் உனைவிட்டு என் உயிரும் சாகாதே
நானும் கூட இதைத்தானே
கனாக்கண்டேன்
கனாக்கண்டேன்
(நிலா ஒன்று)
ஆ ஆ ஆ
என் இதயத்தின் பின் கதவை
நீதான் திறந்தாய்
எனைக் களவாடும் படபடப்பில்
உன்னுள் தொலைத்தாய்
என் முன் கதவைத்
தாழிட்டு உள்ளே இருந்தாய்
எனைக்கண்டதுமே நீ எங்கே ஓடி ஒளிந்தாய்
ஓ ஒரு பக்கம் நீ என்னை
ஒரு பக்கம் நான் உன்னைத்
தேடித்தான் பார்க்கவில்லையே
நீயாக நான் இங்கே
நானாக நீ எங்கே
வேறொன்றும் தேவையில்லையே
ஒரு நெஞ்சில் இரு ஊஞ்சல்
இனி ஆடும் சுகமாக
ஒரு தேடல் இரு ஊடல்
இனி தொடரும் இதமாக
இதை சொல்ல நானும் வந்து தானே
நிலாக்கண்டேன்
நிலாக்கண்டேன்
இசை: தீனா
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , சங்கர் மகாதேவன்
திரைப்படம் : அந்தோணி யார்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:55 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, October 8, 2011
ஆண்டே நூற்றாண்டே
ஆண்டே நூற்றாண்டே உள் வானம் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு
வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தேகத்துக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு
நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் கலைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லா பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத அனல் பூமியை நீ கொண்டு வா
இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிழல் ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேக்காமல் கண் துகிலாத அட உலகம் நீ கொண்டு வா
புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் நுழைந்துவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தொண்டுக்கு நிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு
படம்: முகவரி
இசை: தேவா
பாடியவர்கள்: நவீன்
பதிந்தவர் MyFriend @ 10:48 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, கேகே, தேவா, நவீன், மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், வைரமுத்து
Friday, October 7, 2011
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்கள் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலன் மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு
காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
நான் சொல்லும் சொல்லை கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத ராகங்களுக்கு சேவை செய்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும்
இன்னும் சொல்வேன் என் ரத்தம் ஊர வேண்டும்
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
காலேஜி காலேஜி அக்கா எந்தக் காலேஜி
அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜு
லவ் லவ் லவ் லவ்
சந்தர்ப்பம் அமைந்து விட்டால் பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணை இருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்கள் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலன் மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு
படம்: முகவரி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுவர்ணலதா
Thursday, October 6, 2011
முன் அந்திச் சாரல் நீ
முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே..
(முன் அந்திச்)
ஓ...அழகே ஓ...இமை அழகே
ஹே...கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ..ஒ..
(ஹே ஹே பெண்ணே )
அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே
(முன் அந்திச் )
திரைப்படம் : ஏழாம் அறிவு
பாடியவர்கள்: கார்த்திக் , மேகா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 2:52 PM 1 பின்னூட்டங்கள்
ஏ நிலவே ஏ நிலவே
ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு
மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊரிவிடும்
அடியே அடியே முடியாது என்றால்
இதயம் கீறிவிடும்
நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா
இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமம் என்றது
கை ஜாடை இல்லை என்றது
பசும் பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
படம்: முகவரி
இசை: தேவா
பாடியவர்: உன்னி மேனன்
பதிந்தவர் MyFriend @ 10:31 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, உன்னி மேனன், தேவா
Wednesday, October 5, 2011
விழிகளிலே விழிகளிலே
விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...
இன்பதில் இது என்ன வகை இன்பமோ
இன்பதில் இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது
துன்பதில் இது என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இதுவரை எனக்கு இதுபோல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே....
சொந்ததில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்ததில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா நிலவின்
அருகில் சூரிய வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம்.... ஏங்கும்
விழிகளிலே....
படம் : குள்ளநரி கூட்டம்
இசை : செல்வகணேஷ்
பாடியவர் : கார்த்திக், சின்மயி
பாடல் வரி : நா.முத்துகுமார்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:17 PM 0 பின்னூட்டங்கள்
வகை கார்த்திக், சின்மயி, செல்வகணேஷ்
Tuesday, October 4, 2011
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே
கண் ரெண்டும் மூடாமலே ஏஏஏ
கனாக்கள் வர வேண்டுமே
ஒரே துளி இடம் கொடு
உன் தோளின் தேசத்திலே..
படம்: ஐஸ்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சுமங்கலி
பதிந்தவர் MyFriend @ 11:55 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுமங்கலி, தேவிஸ்ரீ பிரசாத்
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
என் கண்ணிடண்டை காப்பாத்தும் கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும் தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும் சத்தியமும் நீதான்
ஆ என்னுயிராய் வந்தவனே என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய் இருப்பவனும் நீதான்
எண்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்
என் இறுதிவரை கூட வரும் கூட்டணியும் நீதான்
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
இளமையில் உழைப்பவன் முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன் முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும் எனது ரத்தமும் உறவு ரத்தமடா
நீயும் நானும் நானும் நீயும் நிறத்தால் குணத்தால் ஒன்னடா ஆஹா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு
நீ தனித்தனியா கோயில் குளம் அனைவருக்கும் எதுக்கு
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து
காட்டு விலங்கெல்லாம் கொழுத்தாதான் மதிப்பு
அட காவி துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும் கொடுத்தால்தான் பதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை மதிச்சாதான் மதிப்பு
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
தனக்கென வாழ்பவன் இருக்கையில் இறக்கிறான்
பிறர்கென வாழ்பவன் இறந்துமே இருக்கிறான்
உன்னை விடமும் எனக்கு வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும் தெய்வம் தெய்வம் நீயடா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
ஆண்டவன் நடத்திடுவாண்டா அருணாச்சலம் நடந்திடுவாண்டா
நான் உப்பு போட்ட ஆளை மறப்பதில்லைடா
ஆனா தப்பு செஞ்ச ஆளை விடுவதில்லைடா
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா ஹே
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 12:15 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், தேவா
Monday, October 3, 2011
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
வழி வழி வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
தல தல தல ரெண்டு சிவன் தல
நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
என்ன அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது
ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை
ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
மாமன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தாண்டி அருணாச்சலம்
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
பதிந்தவர் MyFriend @ 4:03 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சுஜாதா, தேவா
இப்படி மழை அடித்தால்...
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்
ஓ ஓ ஹோ ஓ
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்
இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
பாடல் வரிகள் : தாமரை
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள் : சைந்தவி , கார்த்திக்
திரைப்படம் : வெடி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:47 AM 0 பின்னூட்டங்கள்
வகை கார்த்திக், சைந்தவி, விஜய் ஆண்டனி
Sunday, October 2, 2011
நகுமோ ஹேய் சுகமோ
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..
வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..
அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..
படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
Saturday, October 1, 2011
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை பெருகிட
சிங்கம் ஒன்று.. ஹேய்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
பதிந்தவர் MyFriend @ 11:49 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, தேவா, மலேசியா வாசுதேவன்