Saturday, October 29, 2011

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ
(கண்கள் ஒன்றாக)

வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

(கண்கள் ஒன்றாக )

மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையைக்கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்

(கண்கள் ஒன்றாக )

ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா

(கண்கள் ஒன்றாக )

திரைப்படம் : சேரன் பாண்டியன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை: சௌந்தர்யன்

1 Comment:

Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர் said...

இதன் பாடலாசிரியரும் சௌந்தர்யன் அவர்கள்தான்.

இந்தப்படத்தில் "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வசந்தம்..." என்று மற்றொரு மென்மையானப் பாடலு உள்ளது. விரைவில் அதுவும் பதியுங்கள்.

Last 25 songs posted in Thenkinnam