Wednesday, October 5, 2011

விழிகளிலே விழிகளிலே

விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...


இன்பதில் இது என்ன வகை இன்பமோ
இன்பதில் இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது
துன்பதில் இது என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது


இதுவரை எனக்கு இதுபோல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்


உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே....


சொந்ததில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்ததில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்

இது என்ன கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா நிலவின்
அருகில் சூரிய வெளிச்சம்


உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம்.... ஏங்கும்
விழிகளிலே....
படம் : குள்ளநரி கூட்டம்
இசை : செல்வகணேஷ்
பாடியவர் : கார்த்திக், சின்மயி
பாடல் வரி : நா.முத்துகுமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam