Wednesday, September 18, 2013

பாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி



நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கை ர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிபபானே!


என்ன விட்டு
வேற ஒன்ன
தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற?

பூவை விட்டு பூ தாவும் வண்டு
வாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க உன்னைத்தான் தேடும்
யாரப் பாத்து நீயும்
இந்த கேள்வி கேக்குற?

வெக்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே!
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்!
கத்துத்தர வேற பொண்ண பார்!

அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்?
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்!

நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே!


படம்: பிரியாணி
இசை: யுவன் ஷஙகர் ராஜா
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK

எதிர்த்து நில் - பிரியாணி



திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!


தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!


ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!



படம்: பிரியாணி
இசை:  யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், டி. இமான், விஜய் ஆண்டனி, எஸ்.தமன்







Thursday, September 12, 2013

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே

மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

பெருங்காற்றிலே மரமாகிறேன்
வேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே

தனியாக நான் நொடி நேரமும்
இருந்தால் அது எனை கொல்லுதே

ஏன் என்று தெரியாத பயம் தோன்றுதே
ஆனாலும் இது கூட இதம் ஆனதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


ஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்
பார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்

சில நேரத்தில் சிலை போலவே
செய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்

புரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே
முழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே

தொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே
காலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


சில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்
என் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே

பொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்
என் புலன் ஐந்தும் பனியாகிக் கரைகின்றதே

உனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா
உனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா

அடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே
ஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

திரைப்படம் : கண்பேசும் வார்த்தைகள்
இசை:ஷமந்த்
வரிகள் : விவேகா
பாடியவர்கள் : விஜய் யேஸுதாஸ், ஹரிணி

Wednesday, September 11, 2013

என்ன வேண்டும் - மேகா

raaga.com : Enna Vendum

என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதற்குள் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
சத்தமில்லா முத்தம் வேண்டுமா
சாந்து பொட்டு வாசம் வேண்டுமா
மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா
குங்குமத்தைக் காண வேண்டுமா
எப்போதும் எப்போதும்
எட்டிப் போவதென்றும் இல்லையே

கொடுத்தேன் நெஞ்சைக் கொடுத்தேன்
நான் கொடுத்தால் கொடுத்ததுதானே
பிடித்தேன் இடம் பிடித்தேன்
நான் பிடித்தால் பிடித்ததுதானே
பொய்யாய் நீ சொன்னாலும்
மெய்யாய் நான் கேட்பேனே
மெய்யாய் நீ சொன்னாலும்
உண்மைதானா என்பேனே
நீ போட்ட மந்திரம்
நீ செய்த தந்திரம்
நிற்காமல் சுத்துதே
நெஞ்சென்னும் பம்பரம்
உன் மாயம் உன் ஜாலம்
எல்லாம் எந்தன் மீதா

காதலெனும் வாசம்
வீசும் வீசும் உன் உள்ளம்
காலம் இனிதாக அங்கு
நீதான் வாழ்ந்திட வேண்டும்
எங்கேயோ போகும் நீ
இங்கே ஏன் நிற்கின்றாய்
முன்னாலே என்னாலே
வேறெதுவும் தான் ஆகாதே
நீ போடும் மாலைக்கு
நான் போகும் பாதைக்கு
அன்பென்னும் லீலைக்கு
பொன்னான நாளைக்கு
கைகோர்த்து செல்வோமா
கண் முன்னே வாடா


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரியதர்ஷினி


என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ
மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா
என கேட்கத் தோன்றுதே

(என் சுவாசத்தில்)

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர்வரையிலும் பார்வைகள் பாய்கிறதே
அன்பே.. அன்பே…

என் உள்ளம் எண்ணம் தேகம்
ஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே


ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்
மணிகணக்கினில் மௌனத்தைப் பேசிடலாம்


இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா


என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா என கேட்கத் தோன்றுதே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், கல்யாணி
திரைப்படம் : ஜெர்ரி
இசை: ரமேஷ் வினாயகம்



கள்வனே கள்வனே - மேகா

raaga.com : Kalvane Kalvane

கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்

பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச
நாம் பேச

காதலாகி காற்றிலாடும் மேகமானேனே
விண்ணோடு சென்றேனே
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே
உன் கையில் வந்தேனே
வேறாரும் போகாத பூமி
காணாத வானம்
போகாத பூமி
காணாத வானம்
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்
காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்

நூறு நூறு(?) வானவில்லில் என்ன வண்ணங்கள்
நெஞ்சோடு கொஞ்சாதோ
வேறு வேறு பார்வையென்றும்
வீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கோ
தாங்காத தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீராத தாகம்
கொண்டாலே பாவை
ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்

கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், ரம்யா NSK

ஜீவனே ஜீவனே - மேகா

 raaga.com - Jeevane Jeevane

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே பாதைகள் நீளுதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்

தீபமென சுழலும் விழிச்சுடரொளியே
உனை காற்றினிலும் அணைய விடமாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விடமாட்டேன்
எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னைப் பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும்போதும் உன்னைத் தேடுவேன்

கருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென
என் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக
உன்னைக் கண்டேன் கண்மணி
சோகம் நின்றே நின்று போக
வந்து சேர்த்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே

தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்
காதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி?!


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநிபாரதி
பாடியவர்: இளையராஜா

செல்லம் கொஞ்சும் பூவே - மேகா

raaga.com : Chellam Konjum Poove

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளித் தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரைத் தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலாவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கிப் பார்க்கலாமா


பூக்கள் உதிர்கின்ற நிழற்சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழைப் பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்
என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம் 
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன
எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சுக்குழலுக்குள்ளே
வந்து இரவின் ராகம் பாடு
என்னில் உன்னைத் தேடு

காலை பனி போல உன் ஞாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்
என் கனவின் அழகையெல்லாம்
நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகளெல்லாம்
நீ சொல்லித் தந்ததென்ன
இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
வானவில்லின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்



படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநி பாரதி
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

Tuesday, September 10, 2013

முகிலோ மேகமோ - மேகா

raaga.com : Mugilo Megamo - Yuvan Shankar Raja, Ramya NSK
raaga.com : Mugilo Megamo - Ilayaraaja

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்றுதானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையை வீசும்
விரல்களை இதயமே விரும்பியே சேரும்
காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே

கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயேதான்


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே

மழையே மழையே 
தூரத்திலிருந்து நனைக்காதே
மனதில் நுழைந்து ஒவ்வொரு 
அறையாய் திறக்காதே

அலையே அலையே
அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே


இதழில் இதழால் கிறுக்காதே 
இமையைக் கனவால் நொறுக்காதே
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே

(மழையே மழையே )
ஆண் ஒரு கரை தான் 
பெண் ஒரு கரை  தான்
காதல் நதியாய் நடுவினில் வந்து
இணைக்கிறதே இணைக்கிறதே
ஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்
அதை விட மௌனம் பேசும் பாஷை 
பிடிக்கிறதே  பிடிக்கிறதே

புதிதாய் வருதே பூ வாசம் -அடடா 
எனக்குள் உன் வாசம் - இது
அன்பால் எழுதும் இதிகாசம் - நாம்
பூப்பது  எங்கோ புது நேசம் - இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

(மழையே மழையே)

மேல் இமை அழைக்க
கீழ் இமை தடுக்க
இது தான் காதல் கண்ணில்
நடத்தும் கலவரமா கலவரமா

பூ இதழ் துடிக்க 
வேர்வரை வெடிக்க
வெட்கம் நாணம் அச்சம்
இனிமேல் துணைவருமா துணைவருமா

மயக்கம் எதிரே வலைவீசும்
தயக்கம் உடனே தடை வீசும்
இனி தினமும் கரையில் அலைவீசும்
அந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்
இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

பாடியவர் : ஆண்ட்ரியா
திரைப்படம் : இருவர் உள்ளம்
இசை: விஜய் ஆண்டனி

Thursday, July 18, 2013

வெளிநாட்டு கிராமப்புரத்தில் - நாடி துடிக்குதடி



வெளிநாட்டு கிராமப்புரத்தில்
விளையாடும் காதல் ஜோடி
அறியாத மனிதர் காட்டும்
ஒரு அரவணைப்பிலே
பகல் வெளிச்சம் நுழைந்திடாத
இந்த வனத்தில் இரவின் சுகத்தை
மகிழ்ந்து களிக்க வா


பழகும் இந்த நாட்கள்
மயில் இறகைப் போல வருட
நதியிலே ஓர் நதியிலே
மிதக்குதே உள்ளம்
நதியில் விழுந்த பூவாய்
மனம் உனது வழியில் செல்ல
கெஞ்சலில் உன் கொஞ்சலில்
பிடிக்குதே செல்லம்
எனக்கு என்று எதுவுமில்லை
எனது உலகிலே
இதயம் திறக்கும் தினமும் தினமும்
உனது நினைவிலே
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
இந்த நிமிஷம் இனிய நிமிஷம்
எனக்கு போதுமே



நிலவின் ஒளியை எடுத்து
ஒரு புடவையாக உடுத்து
மயங்குதே உன் அழகிலே
உன் அழகிலே நெஞ்சம்
மெளனமான மயக்கம்
உன் உயிரில் கலந்த நெருக்கம்
நடுங்குதே உடல் நடுங்குதே
உடல் நடுங்குதே கொஞ்சம்
உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம்
ஒளிந்து கொள்ளவா
உனக்குள் இருக்கும் உலகை ரசித்து
கடந்து செல்லவா
வண்ண வயதும் வளரும் கனவும்
வண்ண வயதும் வளரும் கனவும்
சிறகைத் தேடுதே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்வேதா மோகன்

என் தேவதை பொன்தாரகை - நாடி துடிக்குதடி



என் தேவதை பொன்தாரகை நீதானவள்
என் தூரிகை உள்ளோவியம் நீதானவள்
எங்கோ ஒரு அதிகாலையில்
மணம் வீசிடும் ரோஜா மலர் நீதானவள்
என் பாடலின் உயிரானவள் நீதானவள்


பாதையில் தேங்கும் நீரில் பார்க்கும் நிலவின் முகம்
பார்த்ததும் கிள்ளத் தோன்றும் குழந்தை கன்னம் நிறம்
வானத்தில் தொடுவானத்தில் எழும் செந்நிறம் நீ
ஜாமத்தில் நடுஜாமத்தில் வின்மீன்களும் நீ
ஓடை நாணல்கள் ஆடும் பேதை இல்லாதபோதும்
காலை பூபாளம் பாடும் காற்றில் மைனாக்கள் கீதம்
நீதானவன் நீதானவன் நீதானவன்


விடிந்ததும் வாசல் மீது போடும் கோலங்களே
உறங்கிடும் நேரம் காதில் கேட்கும் ராகங்களே
சாலையில் நடைபாதையில் விழும் தூறல்கள் நீ
பேசுதே புது தாய்மொழி நதியோசைகள் நீ
தீயே இல்லாமல் தீபம் ஏற்றும் கீழ்வானம் யாரோ
நோயே இல்லாமல் நாளும் வாட்டும் என் காய்ச்சல் யாரோ
நீதானவள் நீதானவள் நீதானவள்


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், அனிதா

Wednesday, July 17, 2013

காதலே இல்லாத தேசம் - நாடி துடிக்குதடி



காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
காதலே நீயில்லையென்றால் உலகில் என்ன இருக்கு
காதலே உனை சொல்லத்தானே பூக்கள் பூத்துயிருக்கு

காதலில் துள்ளும் நெஞ்சங்கள்
அது மழலை குழந்தையாகும்
பொம்மை போல அவர் கைகளில்
இந்த பூமி விரும்பி சுழலும்
நூறு நிலவுகள் தோன்றியே
ஒரு நதியில் மிதந்திடும்
உள்ளங்கைகளில் ஏந்தியே
அதை காதல் பருகிடும்
தாயின் கருவறை நிழலைப் போல்
அமைதி தருவது காதலே
இரவு பகலை மறுத்துத்
திரியும் உறவு இனிக்குமே
பறவை சிறகாய் இரண்டு இதயம்
இணைந்து பறக்குமே!

தூரமாய் மிக தூரமாய்
இருந்தாலும் நெருக்கமாகும்
தேடுகின்ற மனச்சோர்விலும்
சுகமாகும் அந்த சோகம்
காதல் என்பது காற்றைப்போல்
அதை நிறுத்த முடியுமா
காதல் என்பது நெருப்பைப்போல்
அதை அணைக்க முடியுமா
காதல் ஜோடிகள் ஜோடிகள் தோற்கலாம்
காதல் தோற்பது இல்லையே
உறவும் பிரிவும் உலகில் இருக்கும்
இதயம் பிரியுமா
மலர்கள் உதிரும் உதிர்ந்து மலருமா
பருவம் மறக்குமா

படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

என் பூநெஞ்சை - நாடி துடிக்குதடி




என் பூநெஞ்சை என் பூநெஞ்சை
என் பூநெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டு வா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில்தான் ஒலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஏறாதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீயொரு பார்வை நேற்று பார்த்ததால்
நீர்க்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நனைக்குதே
வெறும் நாளெல்லாம் புது நாளாகும்
இது தான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

நேற்றென்னவோ பூ தந்தது ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார் தான் தந்தார் ஆண்வாசனை
வாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடியோசை என்று காட்டினாய்
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே


படம்: நாடி துடிக்குதடி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ரீட்டா

Friday, June 28, 2013

நிமிர்ந்து நில் - சரோஜா




நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கண்களை விழித்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புதுப்பாதையில் போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறி முன்னேறு

நேற்றும் இல்லை நாளை இல்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாறவேண்டும் நீயும் இன்று
முட்டி மோதி கால்கள் ஓய்ந்து
தேடித்தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரனென்று பிறப்பதில்லை வீரனாக ஆவதுண்டு
கோழையென்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழையில்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு இப்போதுதான் சோதனை

விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்பு காட்ட
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாது மோதிப் பாரு
முயன்று ஏறு
முடிவில் உந்தன் படைகள் வெல்லும்
வாழ்ந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யாரு உலகம் சொல்லும்
நீயும் முன்னாலே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும் உன் முன்னே தடைகள் இல்லை


படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: சங்கர் மகாதேவன்

Wednesday, June 26, 2013

பூபாளம் இசைக்கும்




பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது


பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன்

Tuesday, June 25, 2013

சோனாப்பரியா - மரியான்




ஓ! ஏ! ஓயல! எந்த நாளும் ஓயல
என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓ! ஏ! ஓயல! எங்க வலை காயல
நீ சொக்கும்படி சிரிச்சடி சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா

பத்துக்காலு நண்டு பார்த்தது சோனாப்பரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டரு சோனாப்பரியா
அவன் காய்ஞ்சி கருவாடா போயி
குவார்ட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனாப்பரியா
மந்திரியே முந்திரியே சோனாப்பரியா
அங்கமெல்லாம் சிந்துறயே சோனாப்பரியா

சோனாப்பரியா சோனாப்பரியா
சோனாப்பரியா நீ தானா வர்றியா

ஓயலே கண்ணுல கப்பலா
ஓயலே நெஞ்சுல விக்கலா
ஓயலே கையில நிக்கலா
ஓயலே நடையில நக்கலா

சிப்பிக்குள்ள முத்து
கப்பலுல மிச்சம்
மிச்சம் வச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு

சிக்கி சிக்கி
மதி சிக்கிக்கிச்சா
நெஞ்சு விக்கிக்கிச்சா
மச்சான் வச்சா மிச்சம்

ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம்
கரைதான் ஏறிடுச்சே ஆமா
அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா
இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே
நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா
மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிசரன், ஜாவத் அலி, நகாஷ் அசிஸ்

நேற்று அவள் இருந்தாள் - மரியான்



நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது

நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்
இருந்தாய்! இருந்தோம்!

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன
அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சின்மயி

Monday, June 24, 2013

கடல்ராசா - மரியான்




ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்கள் காதோரம் கடல்புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாருமய்யா
எங்கள் பாய்மர விளையாட்டைப் பாருமய்யா

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல்ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல்ராசா நான் மரியான் நான்

நெத்திலிக்குழம்பு வாடை
எங்க நீரோடு காத்துல வீசுமைய்யா அட
ஒத்தை மரக்கள்ளும் உப்புக்கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொண்டு வித்தையைக்
காட்டும் கோமாளி நான்

நான் ஒத்தையில பாடுறனே தன்னால
இந்த பாலைவனப் பாறைகளின் முன்னால
வெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே
புலம்பும் என் உயிரே உயிரே
நான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக
இப்ப ஊனமாக சுத்துறனே அடியே
என் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே



படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: தனுஷ்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான்

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே - சித்திரையில் நிலாச்சோறு

நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
துன்பமான இன்பம் தொடர வேண்டுமே 
திருடனையே பிடிச்சிருக்கு 
புது தினுசா இது இருக்கு 
கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு 
போட்டி போடத் தெரிஞ்சிருச்சு 
ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு 
ரெண்டும் சேர்ந்து ஒன்னாச்சு 

எனது விழியிலே ஒரு புதிய தரிசனம் 
எனது மனதிலே ஒரு மழலை குயில் வனம் 
மனது பறவை சிறகில் ஒளிந்த ரகசியம் 
திறந்த வெளியில் விரிந்து பறக்குதே 
இதய வயலில் விதைத்த குறுவை முளைவிட 
அமுத மழைக்கு கிடந்தது தவிக்குதே 
தூங்கிடாத கண்ணோரம் தேன் தெளிக்கும் சொப்பனங்கள் 
பூநிலாவும் ராத்திரியும் நமக்களிக்கும் அர்ப்பனங்கள் 
அசையும் நிலையும் துடிக்கும் இசையும் 
இதயம் உனக்குள் பரவி துடிக்குதே 


கவிதை மொழியிலே மனம் கதைகள் படித்திடும் 
இடையின் வளைவிலே விரல் எழுதிப் பழகிடும்
அளவு கடந்து அணைகள் உடைந்து வழிவிடும் 
அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே 
இணைந்து இணைந்து பறந்து திரியும் பறவைகள் 
சிறகைத் திறந்து எனக்குள் விரிக்குதே 
வாங்கிடாத உள்மூச்சு உன்னை வாங்கச் சொல்கிறதே 
மூங்கிலோடு பூங்காற்று நம்மை தீண்டிச் செல்கிறதே 
உலகை மறந்து உனது மடியில் 
புதிய இதயம் பிறந்து சிரிக்குதே 


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரியதர்ஷினி

காலையிலே மாலை வந்தது - சித்திரையில் நிலாச்சோறு




காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்: சப்தபர்ணா சக்ரவர்த்தி

Tuesday, June 18, 2013

இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்




இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே
இப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்புக்காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்னை இழுக்க என்னை இழுக்க
என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்னை நீ தொட்டாதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு 
தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்



படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: கபிலன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன்

ஆயிரம் சூரியன் சுட்டாலும் - மரியான்



ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வண்ணம் கரைந்தாலும்
வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை

அஞ்சாதே துஞ்சாதே
இனியென்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய்
வழியெங்கும் உன் முன் பூமழை
எந்நாளும் உன் காதல்
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை


படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: குட்டி ரேவதி
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி - சித்திரையில் நிலாச்சோறு





உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

ஏ முத்து போல புள்ள ஒன்னு
ஏ பெத்து போடு பெத்து போடு
ஏ ஆசையோட கேட்கறத
அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்
நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்
பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்
கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்
அப்பன் போல புள்ள வந்தா
அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்

சொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும்
அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்
நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது
நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது
செல்வம்  என்றால் பிள்ளைச் செல்வம்
சேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: இளையராஜா

Monday, June 17, 2013

கல்லாலே செஞ்சு வச்ச - சித்திரையில் நிலாச்சோறு



கல்லாலே செஞ்சு வச்ச சாமியில்ல நீ
கற்பூரதீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ
எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே

கண்ணுக்குட்டி நீ துள்ளி ஓடுனா
கண்ணுபட்டுடும் சொன்ன சொல்லைக் கேளம்மா
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு
அம்மான்னு உன்னை நானும் கூப்பிடுவேன் - எங்க
அம்மாவை அப்போ அப்போ நினைச்சுக்குவேன்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே

மண்ணில் விழுந்த மழைத்துளி நீ - என்
கண்ணில் இருக்கும் கருவிழி நீ
பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்குப் போதும்
வட்டநிலா நீதான் என்று உன்னழகைப் பாடும்
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் - நான்
எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரணும்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஹரிசரண்

Tuesday, May 28, 2013

கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே


கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே
இரு கண்ணுக்குள்ளே கூடு கட்டி வாழ்கிறாய்
இந்த இதயத்தில் நீ மட்டும் ஆள்கிறாய்
தினம் இன்பங்களை துன்பங்களை சேர்த்து தந்து
நீ வாழ்க்கையே என்கிறாய்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்
கனவு காணா கண்கள் எங்கும்
இல்லையே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

என்னன்னவோ மனதிலே விதைப்பாய்
விதைத்ததைக் கொஞ்சம் வளர்ப்பாய்
வளர்ந்ததை விரும்பியே கலைப்பாய்
உனக்கிது அழகா?



என்ன சொல்லி என்ன செய்ய
உன்னை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லையே
மண்ணில் வந்து பிறந்ததும்
இறந்திடும் வரை யாரும்
காண உந்தன் பிள்ளையே

கனவில் பாடும் பாடல் அதை கேட்டு
காலை எழுந்து போகுதே மேற்கு
புதிய விடியலை கண்களில் சேர்த்து
வைத்திங்கு  கனவுகள் காண்போமே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

நூலில் ஆடும் பொம்மை போல ஆடுகிறோம்
எங்கள் நூலை உந்தன் கையில் வந்து தேடுகிறோம்
அங்கும் இங்கும் காற்றில் ஆடி நீந்துகிறோம்
அனுதினம் வாடினோம் ஆயினும் நாடினோம்

உணவைப் போலே உன்னை உண்டோம்
உன்னை தவிர என்னக் கண்டோம்
மனித வேதனைக்கு கனவினைப் போல் ஒரு
மருந்தினை யார் தருவார்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொட துரத்துகிறாய்
வானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்



கனவே நீ இல்லையேல்.. உலகம் இது இல்லையே..

வரிகள் : நா. முத்துக்குமார்
பாடல்: ஷ்ரேயா கோஷல்(?)
இசை: மெஜோ ஜோசப்
திரைப்படம் : சென்னையில் ஒரு நாள்

Sunday, May 12, 2013

பூவே இளைய பூவே



பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே எனக்கு தானே

இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே எனக்கு தானே


படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Friday, May 10, 2013

என் வானிலே ஒரே வெண்ணிலா




என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா


படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜென்சி

Thursday, May 9, 2013

நதி வெள்ளம் மேலே - தங்க மீன்கள்





நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடிமின்னல் விழுந்து காடே எரிந்ததடி

அலைந்திடும் மேகம்
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம்
என்றபோதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

மலர் ஒன்று விழுந்தால்
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே



படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ராகுல் நம்பியார்

Tuesday, May 7, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்




ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி


படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஶ்ரீராம் பார்த்தசாரதி

Thursday, May 2, 2013

எதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே


பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

சந்தை பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்கராட்னம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலேயே தீரும்

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி
கைய கட்டி கைய கட்டி நிக்குதே

படம் : எதிர் நீச்சல் (2013) 
இசை : அனிருத் 
பாடியவர் : அனிருத்
வரிகள் : தனுஷ்

Wednesday, May 1, 2013

தீபாவளி தல தீபாவளி



தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு

ஒரு காலத்திலே தெரு ஓரத்திலே
தாயே என்னை தள்ளி வெச்சா
இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேனு
கண்ணில் ஊசி வெச்சு தச்சா

ஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு
அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு
ஒத்தமரம் ஒத்தமரம் கோர்த்தாச்சு
அது முட்டுனு வானம் மேலே போயாச்சு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு
என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா
ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா
ஊரே தோளில் ஏத்தி வைக்கும்

ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா
ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா
ஊரே தோளில் ஏத்தி வைக்கும்
வெட்டவரும் எதிரியை எருவாக்கு
நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு
நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு
என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

படம் : அட்டகாசம் (2004) 
இசை : பரத்வாஜ் 
பாடியவர் : மனோ 
வரிகள் : வைரமுத்து

Thursday, April 25, 2013

எல்லாம் கடந்து போகுமடா - சூது கவ்வும்




எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்

இரவும் பகலும் இல்லையென்றால்
ஒரு நாளிங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால் அதன்
ஒளி தான் குறைந்திடுமா

வாழ்க்கை ஒரு வட்டம் 
கேள்வி கேட்பதொரு குற்றம்
இதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா
கண் தூங்கதடா தம்பி


படம்: சூது கவ்வும்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: RR
பாடியவர்: கோவை ஜலீல்

Tuesday, April 23, 2013

உதயம் NH4 - யாரோ இவன்



யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கை விரல் என் கை விரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே

அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரை சேருமா கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தான் இவன்
எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

படம் : உதயம் NH4 (2013)
இசை : ஜி.வி. பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ்குமார், சைந்தவி
வரிகள் : நா. முத்துக்குமார்

Tuesday, April 16, 2013

PB ஸ்ரீநிவாஸ்





தேன் கிண்ணத்தின் வணக்கங்கள்

Thursday, March 28, 2013

ஞாயிறு என்பது கண்ணாக

 
 
ஞாயிறு என்பது கண்ணாக 
திங்கள் என்பது பெண்ணாக 
செவ்வாய் கோவை பழமாக 
சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன்



படம்: காக்கும் கரங்கள்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்தர்ராஜன், பி.சுசீலா

Monday, March 18, 2013

ஒரு ஜீவன் அழைத்தது

 
ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்


முல்லைப்பூ போல உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கள்ளம் வைத்தாய்
நீயில்லை என்றால் என் வானிலென்றும் 
பகல் என்ற ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே


உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் 
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் 
நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இன்று கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனிமேலும் என்ன சந்தேகமா?



படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

Last 25 songs posted in Thenkinnam