Monday, June 17, 2013

கல்லாலே செஞ்சு வச்ச - சித்திரையில் நிலாச்சோறு



கல்லாலே செஞ்சு வச்ச சாமியில்ல நீ
கற்பூரதீபம் காட்டும் தெய்வம் இல்ல நீ
எனக்காக மண்ணில் வந்த
எனக்காக இந்த மண்ணில் வந்த
என் தங்கமே வைரமே செல்லமே

கண்ணுக்குட்டி நீ துள்ளி ஓடுனா
கண்ணுபட்டுடும் சொன்ன சொல்லைக் கேளம்மா
தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு
மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு
அம்மான்னு உன்னை நானும் கூப்பிடுவேன் - எங்க
அம்மாவை அப்போ அப்போ நினைச்சுக்குவேன்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே

மண்ணில் விழுந்த மழைத்துளி நீ - என்
கண்ணில் இருக்கும் கருவிழி நீ
பொட்டு வச்ச சித்திரமே நீ எனக்குப் போதும்
வட்டநிலா நீதான் என்று உன்னழகைப் பாடும்
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் - நான்
எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரணும்
நீ செய்கூலி சேதாரம் இல்லாத
என் தங்கமே வைரமே செல்லமே


படம்: சித்திரையில் நிலாச்சோறு
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஹரிசரண்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam