Monday, June 24, 2013

கடல்ராசா - மரியான்




ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்கள் காதோரம் கடல்புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாருமய்யா
எங்கள் பாய்மர விளையாட்டைப் பாருமய்யா

கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான் கடல்ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல்ராசா நான் மரியான் நான்

நெத்திலிக்குழம்பு வாடை
எங்க நீரோடு காத்துல வீசுமைய்யா அட
ஒத்தை மரக்கள்ளும் உப்புக்கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட
கோபம் கொண்டு வித்தையைக்
காட்டும் கோமாளி நான்

நான் ஒத்தையில பாடுறனே தன்னால
இந்த பாலைவனப் பாறைகளின் முன்னால
வெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே
புலம்பும் என் உயிரே உயிரே
நான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக
இப்ப ஊனமாக சுத்துறனே அடியே
என் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல
தவிச்சேன் பனிமலரே பனிமலரே



படம்: மரியான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: தனுஷ்
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam