Thursday, March 28, 2013
ஞாயிறு என்பது கண்ணாக
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 11:24 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1960's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Monday, March 18, 2013
ஒரு ஜீவன் அழைத்தது
Saturday, March 16, 2013
தோட்டம் கொண்ட ராசாவே
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
மேட்டை விட்டு காட்டு வெள்ளம் கீழிறங்கி வந்ததே
தோட்டமும் துலங்குது
வீட்டை கட்டி வேலி கட்டி வாழ வெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது
கட்டிவெல்லம் போல ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல ராசாவைக் கேளுங்க
சிட்டுச் செல்லம்மா ஆம்பளப்புள்ள ஒன்னு பெத்து கொடும்மா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
பூத்த மல்லி காத்தடிச்சா பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது
காத்திருந்த வண்டு ஒன்னு கால வடிவாச்சுது
வேளை வந்து சேர்ந்தது
பொட்டு வச்ச பார்த்தா தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா அம்மையைப் போல
கட்டித்தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
கண்டெடுத்த ரத்தினத்தை மண் தொடச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க
கண்ணுபடப் போகுதையா பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க
நல்லதொரு காலம் அலையில ஆடுங்க
ஒன்னுக்குள்ள ஒன்னா உறவில வாழுங்க எங்க துரையே
வாழுங்க வாழுங்க ரொம்ப ரொம்ப நாள்
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
படம்: பகலில் ஓரு இரவு
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்சி
Friday, March 15, 2013
கோடை கால காற்றே
கோடை கால காற்றே - திரைப்பாடல்.காம்
கோடை கால காற்றே
குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினந்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலைப்பூக்களே
வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களே
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பென் மலையருவி பன்னீர் தூவி
பொன்மலையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களே
படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 8:00 PM 0 பின்னூட்டங்கள்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - thiraipaadal.com
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
Thursday, March 14, 2013
ஆயிரம் மலர்களே மலருங்கள்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:00 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1970's, SP சைலஜா, இளையராஜா, கண்ணதாசன், மலேசியா வாசுதேவன், ஜென்சி
Wednesday, March 13, 2013
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுதொண்டன் நான் தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
படம்: மன்னன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, ரஜினி, வாலி
Tuesday, March 12, 2013
இதயம் போகுதே எனையே பிரிந்தே
Ilaiyaraaja - Idhayam Poguthe - Schubert symphony no 8 1st movement (D 759)
மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன் போல்
மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:30 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1980's, இளையராஜா, கங்கை அமரன், ஜென்சி
Monday, March 11, 2013
அடி என்னடி ராக்கம்மா (சோகம்)
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 0 பின்னூட்டங்கள்
Sunday, March 10, 2013
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி
வெந்நீர் நதியை பன்னீர் நதியாய்
பேசலாகுமோ தலைவி
இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி
கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே
கலக்கம் வாராதோ தோழி
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்த்தை
மெளனத்தில் அறிந்தாள் தோழி
காவிரிக்கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்த தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி
படம்: பச்சை விளக்கு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, LR ஈஸ்வரி, MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி, P சுசீலா, கண்ணதாசன்
Saturday, March 9, 2013
இது ஒரு நிலாக்காலம்
படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.ஜானகி
Friday, March 8, 2013
நாளை இந்த வேளை பார்த்து
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: வாலி
பாடியவர்: பி.சுசீலா
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, வாலி
Thursday, March 7, 2013
என்ன என்ன வார்த்தைகளோ
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:30 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி, P சுசீலா, கண்ணதாசன்
Wednesday, March 6, 2013
பாடிப் பறந்த கிளி
பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே
ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடல்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:00 AM 1 பின்னூட்டங்கள்
Tuesday, March 5, 2013
மலையோரம் வீசும் காத்து
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டுதானம்மா
வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள்மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்
குத்தாலத்து தேனருவி சித்தாடைதான் கட்டாதா
சித்தாடைய கட்டியே கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்
படம்: பாடு நிலாவே
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 10:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, வாலி
Monday, March 4, 2013
அடி என்னடி ராக்கம்மா
பதிந்தவர் நாகை சிவா @ 10:00 AM 2 பின்னூட்டங்கள்
Sunday, March 3, 2013
அழகே அழகு
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது
பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே
படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 9:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, கண்ணதாசன், யேசுதாஸ்
Saturday, March 2, 2013
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய
வீதியெங்கும் வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன மின்ன
வெண்ணிலாவும் நின்று பார்த்தது
வெள்ளிமீன்கள் வைரமின்னல்
ஒன்று சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும் காட்சியானது
என்ன மாயமோ என்ன ஜாலமோ
என்று எண்ணித் தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில் ஷாக்கடித்ததோ
பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது
வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார
வானம் கண்டது வாடி நின்றது
மேகம் தன்னை தூது விட்டது
விடிய விடிய
சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள
பன்னிரெண்டு மணி அடித்தது
பழைய வருஷம் போனதிங்கு
புதிய வருஷம் பூத்ததென்று
ஊர் முழுக்க வெடி வெடித்தது
இன்பம் என்பது இங்கு வந்தது
துன்ப நாட்கள் ஓடிப் போனது
இந்த பூமிதான் இந்த நாளிலே
சொர்கமாக மாறிப் போனது
நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது
விடிய விடிய
படம்:அஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி
Friday, March 1, 2013
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்
காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 1:08 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, வைரமுத்து