Saturday, March 9, 2013

இது ஒரு நிலாக்காலம்

 
 
இது ஒரு நிலாக்காலம் 
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது



படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.ஜானகி

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பூமி தான் வேறு மாதிரியாக சுற்றிக் கொண்டிருக்கிறதே...!

பாடல் வரிகளுக்கு நன்றி...

jeyaxerox balu said...

An amazing voice of Janaki Mam.

Last 25 songs posted in Thenkinnam