Sunday, March 3, 2013

அழகே அழகு




அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே


படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam