Wednesday, March 13, 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே





அம்மா என்றழைக்காத உயிரில்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே 
நேரில் நின்று பேசும் தெய்வம் 
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது 


அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி 
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா 
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் 
புரிகின்ற சிறுதொண்டன் நான் தானம்மா 
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் 
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே 
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் 
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே 
அதை நீயே தருவாயே 


பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் 
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா 
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் 
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா 
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி 
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா 
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் 
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா 
உன்னாலே பிறந்தேனே 



படம்: மன்னன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பாடல்...

வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam