Saturday, March 2, 2013

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது




இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய


வீதியெங்கும் வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன மின்ன
வெண்ணிலாவும் நின்று பார்த்தது
வெள்ளிமீன்கள் வைரமின்னல்
ஒன்று சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும் காட்சியானது
என்ன மாயமோ என்ன ஜாலமோ
என்று எண்ணித் தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில் ஷாக்கடித்ததோ
பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது
வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார
வானம் கண்டது வாடி நின்றது
மேகம் தன்னை தூது விட்டது
விடிய விடிய


சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள
பன்னிரெண்டு மணி அடித்தது
பழைய வருஷம் போனதிங்கு
புதிய வருஷம் பூத்ததென்று
ஊர் முழுக்க வெடி வெடித்தது
இன்பம் என்பது இங்கு வந்தது
துன்ப நாட்கள் ஓடிப் போனது
இந்த பூமிதான் இந்த நாளிலே
சொர்கமாக மாறிப் போனது
நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது
விடிய விடிய


படம்:அஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam