Monday, March 18, 2013

ஒரு ஜீவன் அழைத்தது

 
ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்


முல்லைப்பூ போல உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கள்ளம் வைத்தாய்
நீயில்லை என்றால் என் வானிலென்றும் 
பகல் என்ற ஒன்று கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே


உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் 
மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் எந்தன் 
நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இன்று கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனிமேலும் என்ன சந்தேகமா?



படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam