Tuesday, March 5, 2013

மலையோரம் வீசும் காத்து



மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டுதானம்மா

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள்மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவை நாளும் தேடும் வானம் நான்

குத்தாலத்து தேனருவி சித்தாடைதான் கட்டாதா
சித்தாடைய கட்டியே கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்


படம்: பாடு நிலாவே
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Last 25 songs posted in Thenkinnam